For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவு நேரத்தில் இந்த பழத்தை சாப்பிடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை ஏற்படுத்துமாம்...உஷார்...!

தர்பூசணி, அதிக நீர் மற்றும் அமில உள்ளடக்கம் கொண்டவை. ஆதலால், இது உங்கள் செரிமானத்தை சிக்கலாக்கும் மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

|

தற்போது கோடைகாலமாக இருப்பதால், சாலையோரம் இருக்கும் கடைகளில் பெரும்பாலும் தர்பூசணிதான் விற்பனை செய்வார்கள். கோடைக்காலத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் தர்பூசணி. இதில், ஏராளாமான நன்மைகள் நிரம்பியிருப்பதால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். தர்பூசணி சாப்பிடுவதை விரும்பாத ஒருவரைக் கண்டுபிடிப்பது கடினம். மேலும் இது உங்கள் தாகத்தைத் தணிக்கும் மாற்றாகவும் இருக்கலாம்.

why-watermelon-should-not-be-consumed-at-night

இது உலகளவில் அதிக பயிரிடப்பட்ட பழமாகும், இதில் 1000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. 92 சதவீதம் தண்ணீரை உள்ளடக்கிய தர்பூசணியை கிராம புறங்களில் தண்ணீர் பழம் என்றே அழைப்பார்கள். உடலில் நீர் ஏற்றத்தை அதிகரிக்க தர்பூசணி சாப்பிடும் பெரும்பாலானோர் அதன் விதைகளை சாப்பிடாமல் துப்பிவிடுவார்கள். ஆனால், அதன் விதைகளிலும் சத்துக்கள் நிறைந்துள்ளது. இத்தகைய சத்து நிறைந்த தர்பூசணியை நீங்கள் இரவு நேரத்தில் சாப்பிடுவதால் என்ன நடக்கும்? என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விதைகள் கூட சத்தானவை

விதைகள் கூட சத்தானவை

தர்பூசணி ஏராளமான சுகாதார நன்மைகளால் நிரம்பியுள்ளது. இதில் இயற்கையாகவே நீர் உள்ளடக்கம் உள்ளது. மேலும், சக்திவாய்ந்த ஊட்டச்சத்து மற்றும் பொட்டாசியம் மற்றும் லைகோபீன் போன்ற தாதுப்பொருட்களால் இது நிறைந்துள்ளது.

MOST READ: சர்க்கரை நோயாளிகள் பருப்பு வகைகளை சாப்பிடுவது அவர்களின் ஆயுளுக்கு ஆபத்தா? இல்லையா?

தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

தர்பூசணி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

மேற்பரப்பில் பச்சையாகவும், உட்பகுதியில் சிவப்பாகவும் இருக்கும் இந்த பழம் தசை வலியை நீக்குவதற்கு அல்லது குறைப்பதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்ட சில சேர்மங்களைக் கூட இது கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் தர்பூசணி தவறாமல் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிக நீர் உள்ளடக்கத்துடன், இது கர்ப்ப வீக்கம் மற்றும் காலை வியாதியையும் குறைக்கிறது. விதைகள் கூட மிகவும் ஆரோக்கியமானவை

தர்பூசணி சாப்பிட ஆரோக்கியமான வழி

தர்பூசணி சாப்பிட ஆரோக்கியமான வழி

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள தர்பூசணி, கோடைகாலத்தில், நீங்கள் தவிர்க்கக்கூடிய ஒரு பழம் அல்ல. இருப்பினும், சில நேரங்களில் தவறாக சாப்பிட்டால், இந்த பழம் உங்களுக்கு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இரவில் தர்பூசணி சாப்பிடலாமா?

இரவில் தர்பூசணி சாப்பிடலாமா?

தர்பூசணி ஒரு இயற்கையான குளிரூட்டியாக இருப்பதால், பல நன்மைகளை வழங்குகிறது. நம்மில் நிறைய பேர் உணவுக்கு இடையில் பழங்களைக் கொண்டிருக்கிறோம் அல்லது சிலர் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பே அவற்றை இரவு உணவாக சாப்பிட விரும்புகிறார்கள். இரவு நேரங்களில் தர்பூசணி உட்கொள்வது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

MOST READ: கொரோனா வைரஸ் உங்க உடலில் இதன் மூலமாகவும் பரவுமாம்... ஜாக்கிரதையா இருங்க...!

செரிமானப் பிரச்சனை

செரிமானப் பிரச்சனை

செரிமானம் அமைப்பு மாலை நேரத்திற்குப் பின் மெதுவாகவும், காலையில் மிகவும் சுறுசுறுப்பாகவும் , உங்கள் இரவு உணவை இலகுவாகவும் எளிதாகவும் வைத்திருக்க எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. தர்பூசணி, அதிக நீர் மற்றும் அமில உள்ளடக்கம் கொண்டவை.ஆதலால், இது உங்கள் செரிமானத்தை சிக்கலாக்கும் மற்றும் வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சில சந்தர்ப்பங்களில், இது குடல் எரிச்சலுக்கும் வழிவகுக்கும். ஆயுர்வேத புத்தகங்களிலும் இது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை அதிகம் உள்ளது

சர்க்கரை அதிகம் உள்ளது

கோடைகாலத்தில் நீங்கள் தர்பூசணியை ஆர்வமாக சாப்பிடுவதற்கு முன், இதில் நிறைய சர்க்கரை இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். சர்க்கரை இரவில் சிறந்த முறையில் தவிர்க்கப்படுகிறது மற்றும் எடை அதிகரிப்பைக் கூட இது ஊக்குவிக்கும். கூடுதலாக, சந்தையில் உள்ள பல பழங்கள் அவற்றின் இனிப்பை அதிகரிக்க ரசாயனங்கள் மூலம் கூர்மையாக்கப்படலாம், இது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

MOST READ: இந்த பொஷிசன்களில் உடலுறவு கொண்டால் ஆண், பெண் இருவருக்கும் இருமடங்கு திருப்தி கிடைக்குமாம்...!

கழிப்பறைக்கு செல்ல நேரிடும்

கழிப்பறைக்கு செல்ல நேரிடும்

தர்பூசணியில் 92% நீர் உள்ளடக்கம் உள்ளது. இது உச்ச கோடைகாலங்களில் உங்கள் நீரேற்றம் ப்ளூஸை தீர்க்கும். அதே வேளையில், இரவில் நீங்கள் சாப்பிட்டால், அடிக்கடி கழிப்பறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இது உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்து, மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில், தர்பூசணி, கட்டுப்பாட்டில் சாப்பிடாவிட்டால், தண்ணீரைத் தக்கவைத்துக்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம், இதனால் வீக்கம் மற்றும் அதிக நீரிழப்பு ஏற்படும்.

உண்ண சிறந்த வழி எது?

உண்ண சிறந்த வழி எது?

நீங்கள் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான பழங்களில் தர்பூசணி ஒன்றாகும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், அதன் அதிகபட்ச நன்மைகளைப் பெற ஒருவர் பகல் நேரத்தில் தர்பூசணியை சாப்பிட வேண்டும். உண்மையில், இது காலை உணவுக்கு நீங்கள் வைத்திருக்கக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். பழம் சாப்பிடப்பிறகு குறைந்தது 30-45 நிமிடங்கள் குடிநீரைத் தவிர்க்கவும். நீங்கள் உணவுக்கு இடையில் ஒரு சிற்றுண்டியாக தர்பூசணியை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாளின் பிற்பகுதிகளில் சிறந்த முறையில் இதை தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Watermelon Should Not Be Consumed at Night

Here we are talking about the valid reasons why you should stop eating watermelon at night.
Desktop Bottom Promotion