கொரோனாவால் பெண்களை விட ஆண்கள் ஏன் அதிகம் இறக்கிறார்கள்? ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்...!

சீனா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் கோவிட் -19 காரணமாக இறப்புகள் குறித்து பாலியல் சார்ந்த பதிவு உள்ளது. இதில், ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட 50 சதவீதம் அதிகம்.

கோவிட் -19 என்பது மக்களிடையே எவ்வித பாகுபாடும் கட்டாமல் பரவும் ஒரு தொற்றுநோயாகும். அது நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவராக இருந்தாலும் கடைக்கோடியில் இருக்கும் சாதாரண குடிமகனாக இருந்தாலும் கொரோனா வைரஸ் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடியது. இதன் காரணமாக உலகில் பல நாடுகள் சமூக இடைவெளியை பின்பற்றி முற்றிலும் முடங்கிகிடக்கின்றன. இதுவரை கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவிட் -19 இல் கிடைக்கக்கூடிய தகவல்கள் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கிறது.

why do more men die of covid 19 compared to women

சீனா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் கோவிட் -19 காரணமாக இறப்புகள் குறித்து பாலியல் சார்ந்த பதிவு உள்ளது. இதில், ஆண்களின் இறப்பு விகிதம் பெண்களை விட 50 சதவீதம் அதிகம். கோவிட்-19 வாராந்திர கண்காணிப்பு அறிக்கையின்படி, ஐரோப்பாவில் இறப்புகளில் 68 சதவீதம் பெண்களை விட ஆண்களே அதிகம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பெண்களை காட்டிலும் ஆண்களை அதிகம் தாக்க என்ன காரணம் என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

ஏப்ரல் 7 ஆம் தேதி தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒவ்வொரு ஒரு லட்சம் பெண்களுக்கும் 23 கோவிட்-19 இறப்புகளுடன் ஒப்பிடும்போது, நகரில் ஒவ்வொரு ஒரு லட்சம் ஆண்களுக்கும் கிட்டத்தட்ட 43 கோவிட்-19 இறப்புகள் உள்ளன. மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டம்ஸ் (புரூக்ளின்) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதம் ஆண்கள் என்று அறிக்கை கூறுகிறது.

ஆண்களின் இறப்பு அதிகம்

ஆண்களின் இறப்பு அதிகம்

அமெரிக்காவின் மற்றொரு தரவு, 56 சதவீத கோவிட்-19 பரிசோதிக்கப்பட்ட பெண்களில், 16 சதவீதம் பேர் மட்டுமே நேர்மறையானவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 44 சதவீத கோவிட்-19 சோதனை செய்யப்பட்ட ஆண்களில் 23 சதவீதம் பேர் நேர்மறையானவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. பகுப்பாய்வு செய்யப்பட்ட 25,058 வழக்குகளில், 8 சதவீத ஆண்கள் நோயாளிகள் கோவிட் -19 நோயால் இறந்ததாகவும், இறந்த பெண்கள் நோயாளிகளின் வழக்குகள் 5 சதவீதமாகவும் உள்ளன என்று ரோம் உயர் சுகாதார நிறுவனத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிக்கை கூறுகிறது.

ஏன் இந்த வித்தியாசம்?

ஏன் இந்த வித்தியாசம்?

குளோபல் தொற்று நோய்கள் மற்றும் தொற்றுநோயியல் வலையமைப்பின் (GIDEON) இணை நிறுவனர் ஸ்டீபன் பெர்கர், ஆண்களை இருதய நோய்கள், கல்லீரல் நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதால் பெண்களை விட ஆண்களை கோவிட்-19 அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார். இந்த காரணிகள் தற்போதுள்ள நாட்பட்ட நோய்களால் தொற்றுநோய்க்கு ஆளாகின்றன.

புகைப்பிடிப்பது

புகைப்பிடிப்பது

பெண்களை விட ஆண்கள் அதிகமாக புகைபிடிக்கிறார்கள். அதனால்தான் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களில் நாள்பட்ட நுரையீரல் நோய்கள் மற்றும் பிற நுரையீரல் பிரச்சினைகள் அதிகம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, நுரையீரல் பாதிப்பு, அசுத்தமான சிகரெட்டுகளைப் பகிர்வது மற்றும் அசுத்தமான கைகளால் வாயைத் தொடுவது, கோவிட்-19 பரவுவதற்கு வசதியாக புகைபிடிப்பவர்கள் அல்லது வாப்பர்கள் SARS-CoV-2 க்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

காற்று மாசுபாடு

காற்று மாசுபாடு

பல நாடுகளிலும் கலாச்சாரங்களிலும், ஆண்கள் வெளிப்புற வேலைகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். இது பெண்களுடன் ஒப்பிடும்போது தீவிர காற்று மாசுபாட்டிற்கு அதிகமாக வெளிப்படுகிறது. ஏப்ரல் 5ஆம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, குறைந்த மாசுபட்ட பகுதிகளில் தங்கியிருப்பவர்களை விட அதிக காற்று மாசுபடும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆண்கள் தங்கள் பணி கலாச்சாரம் காரணமாக காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதால், ஆண்களிடையே கோவிட்-19 இறப்புகளின் அளவு அதிகமாக உள்ளது.

X -குரோமோசோம்

X -குரோமோசோம்

பெண்களுக்கு இரண்டு எக்ஸ்-குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களுக்கு X, Y என்ற இரண்டு குரோமோசோம்கள் உள்ளன. ஆண்களில் ஒரு எக்ஸ் குரோமோசோமுடன் ஒப்பிடும்போது இரட்டை எக்ஸ்-குரோமோசோம்கள் இருப்பதால் பெண்களில் நோயெதிர்ப்பு பதில் பெருக்கப்படுகிறது. இது பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியில் பலவீனமடைகிறது.

ஈஸ்ட்ரோஜன்

ஈஸ்ட்ரோஜன்

ஜர்னல் ஆஃப் இம்யூனாலஜி படி, 2003 SARS பெண்களுடன் ஒப்பிடும்போது அதிகமான ஆண் இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்ற பயனுள்ள பாதுகாப்பு ஹார்மோன் இருப்பதால் இது எந்தவிதமான தொற்றுநோய்களையும் எதிர்த்து போராட உதவுகிறது. SARS இல் ஈஸ்ட்ரோஜனின் தாக்கத்தை சோதிக்க பெண் எலிகள் மீது இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஈஸ்ட்ரோஜன் பாதைகளை விஞ்ஞானிகள் தடுத்தபோது, பெண் எலிகள் விரைவில் இறந்துவிடுவதைக் கண்டறிந்தனர்.

முந்தைய வரலாறு

முந்தைய வரலாறு

1918 ஸ்பானிஷ் காய்ச்சலை அடிப்படையாகக் கொண்ட ஒரு அறிக்கையின்படி, பெண்களுடன் ஒப்பிடும்போது இந்த தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வயதுடையவர்கள் (25-34 வயது) பெரும்பாலும் இறந்துவிட்டனர். 1918 க்கு பிறகான ஆண்டுகளில் ஆண்களில் காசநோய் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். SARS ஐ அடிப்படையாகக் கொண்ட மற்றொரு ஆய்வில், ஹாங்காங்கில் 1755 நோயாளிகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்பு விகிதம் 170 ஆண்களும் 129 பெண்களும் என்று தெரியவந்துள்ளது.

முடிவு

முடிவு

கோவிட் -19 காரணமாக ஆண்களிடையே அதிக இறப்பு விகிதம் இருப்பதாக பல நாடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும்கூட, கோவிட்-19 இன் ஆபத்து காரணிகளில் ஒன்றாக பாலினம் கருதப்படவில்லை. பல ஆண் நடத்தைகள் காரணமாக தொற்றுநோய்கள் ஆண்களிடையே அதிகரிப்பதை காட்டுகின்றன. மேலும் சமூக தொடர்பு, கைகுலுக்கல் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவையும் இதற்கு காரணம். பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களின் உடல்நலம் குறித்த சாதாரண அணுகுமுறையாக இருக்கலாம்-சில ஆண்கள் தாங்கள் தைரியமானவர்கள், எதையும் எதிர்த்துப் போராடும் வலிமையானவர்கள் என்று நினைக்கலாம். அறிகுறிகள் இருந்தாலும், அறிகுறிகள் மோசமடைந்து உயிருக்கு ஆபத்தானதாக மாறும் வரை அவர்கள் சுகாதார நிலையங்களுக்குச் செல்லாமல் இருக்கலாம். இவை காரணமாக கோவிட்-19 இன்னும் ஆண்களிடையே அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, April 17, 2020, 19:20 [IST]
Desktop Bottom Promotion