Latest Updates
-
மிதுனத்தில் 3 கிரகங்களால் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: இந்த 4 ராசிகளின் நிதி நிலை இருமடங்கு அதிகரிக்கப்போகுது. -
கோடை வெயிலால் அவதியா? இந்த வாஸ்து செடிகளை வீட்டில் வையுங்க… குளிர்ச்சியும் பணவரவும் தானாக தேடி வரும்! -
செஃப் தீனாவின் சிக்கன் வறுவல் - வெறும் 4 பொருள் வெச்சே செய்யலாமாம்.. எப்படின்னு பாருங்க.. -
ராகி கஞ்சி முதல் கம்பு கஞ்சி வரை - எந்த கஞ்சி குடிச்சா, என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் டாக்டர்! -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த வாஸ்து செடிகளை வைத்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 19 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
நீங்க சாப்பிடும்போது இந்த அறிகுறி தெரியுதா? அப்ப அது பிங் உணவுக் கோளாறா இருக்கலாமாம்... ஜாக்கிரதை..!
இன்றுவரை மருத்துவ அறிவியலால் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் இது பொதுவாக மரபணுக்கள் காரணமாக நடக்கிறது என்று நம்பப்படுகிறது. டோபமைனுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்கள், இந்த கோளாறைப் பெற்றிருக்கலாம்.
நம்மில் பலர் அதிகப்படியான உணவை சாப்பிடுவார்கள், பலர் குறைந்தளவிலான உணவை உண்பார்கள். இது அவர்களின் உடல் மற்றும் அமைப்பை பொறுத்து மாறுபடுகிறது. இவையெல்லாம் ஒரு வகை உணவுக் கோளாறைக் குறிக்கிறது. ஒரு நபர் அதிகப்படியான உணவுக்குப் பிறகு நிம்மதியாக உணர்கிறார். ஆனால் அதே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது அவமானம் அல்லது கட்டுப்பாட்டை இழப்பது போன்ற உணர்வுகளையும் அந்த நபர் அனுபவிக்கிறார்.

மருத்துவ அறிவியலின் படி, மனதில் மூன்று வகையான உணவுக் கோளாறுகள் உள்ளன. அவை: பிங்கிங் - தேவையானதை விட அதிகமான உணவை உண்ணுதல்; அனோரெக்ஸியா நெர்வோசா - தேவையான அளவை விட குறைவாக சாப்பிடுவது; புலிமியா - சில நேரங்களில் அதிகமாக சாப்பிடுவது, மற்ற நேரங்களில் ஈடுசெய்ய குறைவாக சாப்பிடுவது. இக்கட்டுரையில் பிங் உணவுக் கோளாறு என்றால் என்ன, அதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து காணலாம்.

அதிக உணவுக் கோளாறு ஏற்படுவதற்கு என்ன காரணம்?
இன்றுவரை மருத்துவ அறிவியலால் எதுவும் ஆவணப்படுத்தப்படவில்லை. ஆனால் இது பொதுவாக மரபணுக்கள் காரணமாக நடக்கிறது என்று நம்பப்படுகிறது. டோபமைனுக்கு அதிக உணர்திறன் உள்ளவர்கள், இந்த கோளாறைப் பெற்றிருக்கலாம்.

இது எப்படி நிகழ்கிறது?
மேலும், மூளையின் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால் இது நிகழ்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு மக்கள் உணவுக்கான பதிலை அதிகப்படுத்தியுள்ளனர் மற்றும் சுய கட்டுப்பாடு குறைவாக உள்ளனர். மரணம், துஷ்பிரயோகம், பிரித்தல், விபத்து அல்லது கொடுமைப்படுத்துதல் போன்ற உணர்ச்சிகரமான அதிர்ச்சி காரணமாகவும் இது நிகழலாம்.

ஆய்வு கூறுவது
ஃபோபியாஸ், மனச்சோர்வு, இருமுனை கோளாறு, பதட்டம் அல்லது பொருள் துஷ்பிரயோகம் போன்ற ஒருவித உளவியல் கோளாறு உள்ளவர்களிடமும் இந்த கோளாறு ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகப்படியான உணவுக் கோளாறின் அறிகுறிகள்
எந்த கணக்கீடும் இல்லாமல் அதிகமாக சாப்பிடுவது.
ஒரு நாளைக்கு தேவையான கலோரிகளை விட 3-4 மடங்கு அதிகமாக சாப்பிடுவது.
அடிக்கடி சாப்பிடுவது (ஒரு மணி நேரத்திற்கும் குறைவானது)

தீர்வு என்ன?
உங்கள் பசியின் படி உணவை அளவிட முயற்சிக்கவும்.
பிரதான உணவுத்திட்டத்தை ஒருபோதும் சிற்றுண்டி மற்றும் பானங்களுடன் மாற்ற வேண்டாம்.
புரதம் நிறைந்த காலை உணவோடு உங்கள் நாளைத் தொடங்குங்கள்.
தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சிறிய அளவிலான உணவில் அடிக்கடி ஈடுபடுங்கள்.
உங்கள் அன்றாட வழக்கமான செயல்களுடன் விறுவிறுப்பான நடை, தியானம், ஜாகிங் அல்லது யோகா போன்ற எளிய பயிற்சிகளைச் சேர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications