Just In
- 2 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 3 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 4 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 4 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்த குளிர்காலத்தில் உங்க நுரையீரலை பாதுகாக்க இந்த விஷயங்கள ஃபாலோ பண்ணா போதுமாம்...!
ஆயுர்வேத பயிற்சியாளரின் கூற்றுப்படி, துளசி அல்லது புனித துளசி என்பது மூலிகைகளுக்கு புத்துயிர் அளிக்கும் சுவாச அமைப்பு. இது இம்யூனோமோடூலேட்டரி, ஆன்டிடூசிவ் மற்றும் எக்ஸ்பெக்டோரண்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்
குளிர் மற்றும் காய்ச்சல் ஆகியவை குளிர்காலத்தில் மக்களைத் தொந்தரவு செய்யும் ஒரே உடல்நலக் கவலைகள் அல்ல. ஏனெனில், காற்றின் தரம் குறைவது ஆஸ்துமா, ஒவ்வாமை, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சில தீவிர நுரையீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே, குளிர்ந்த காலநிலையில் நமது நுரையீரலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியமானது.
நமது நுரையீரலில் காற்று மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் என்ன தெரியுமா? நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், காற்று மாசுபாட்டின் மோசமான விளைவுகளை குறைக்கவும் இந்த பருவத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய சில பயனுள்ள தீர்வுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
சூடான எள் எண்ணெய்
காலையில் சூடான எள் எண்ணெயுடன் வாய்கொப்பளிக்க பரிந்துரைக்கிறார். அதற்காக 1-2 தேக்கரண்டி சூடான எள் எண்ணெயை எடுத்து 2-3 நிமிடங்கள் சரியாக வாயில் வைத்திருக்கவும். எண்ணெயை துப்பிவிட்டு, பின்னர் பல் துலக்குங்கள். எண்ணெய் இழுப்பது காற்று மாசுபாட்டால் ஏற்படும் வாய் வறட்சியைக் குறைக்க உதவும்.
MOST READ: நம் முன்னோர்கள் சீரான இரத்த அழுத்தத்துடன் இருந்ததற்கு காரணம் இந்த பொருட்கள்தானாம்...!
திரிபாலா காபி தண்ணீர் மவுத்வாஷ்
நீங்கள் முயற்சி செய்யக்கூடிய மற்றொரு சிறந்த ஆயுர்வேத தீர்வு திரிபாலா காபி தண்ணீர் மவுத்வாஷ் ஆகும். இது காலையில் வெறும் வயிற்றில் செய்யப்பட வேண்டும். திரிபாலா என்பது ஹரிடாக்கி, பிபிதாக்கி மற்றும் அம்லா ஆகிய மூன்று பழங்களின் கலவையாகும். இந்த பழங்களில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட உதவுகின்றன. 100 மில்லி கிராம் திரிபாலாவை 1000 மில்லி தண்ணீரில் வேகவைக்கவும். பின்னர், சூடு குறைந்த பின்பு, 2-3 தேக்கரண்டி திரிபாலாவை எடுத்து 2-3 நிமிடங்கள் வாய் கொப்பளிக்கவும். தண்ணீரை துப்பிவிட்டு, பின்னர் பல் துலக்குங்கள்.
ஜல் நேட்டி அல்லது நாசல் வாஷ்
ஜல் நேட்டி என்பது ஒரு ஆயுர்வேத நுட்பமாகும், இது நோயற்ற நிலையில் இருக்கவும், மிக முக்கியமாக நன்கு சுவாசிக்கவும் நாசி அடைப்பை நீக்கவும் செய்கிறது. நாசியை கழுவுவதற்கு லேசான உப்புநீரைக் கரைசலில் 2-3 சொட்டு எண்ணெயைக் கொண்டு பயன்படுத்துமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார். எண்ணெய் மூக்கிலிருந்து வறட்சியைத் தடுக்கிறது.
நாஸ்யா எண்ணெய் அல்லது ஷட்பிந்து எண்ணெய்
நாஸ்யா எண்ணெய் மற்றும் ஷட்பிந்து எண்ணெய் இரண்டு மந்திர ஆயுர்வேத எண்ணெய்கள் ஆகும். அவை நாசி அடைப்பை அகற்ற பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிபுணர்களின் கூற்றின்படி இந்த எண்ணெய்களைப் பயன்படுத்த சரியான நேரம் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே பயன்படுத்துவது. நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒவ்வொரு நாசியிலும் இரண்டு எண்ணெய்களில் 2 சொட்டுகளை வைத்து அவற்றை விரைவாக உறிஞ்சுவதற்கு பயிற்சி செய்யுங்கள்.
MOST READ: இரவு உணவு சாப்பிடும்போது இந்த விஷயங்கள மட்டும் ஃபாலோ பண்ணா போதும்... உங்க எடை சீக்கிரமா குறையுமாம்!
சுவாச பயிற்சியை மேற்கொள்ளுங்கள்
இந்த நேரத்தில் சுவாச பயிற்சிகளை செய்வது உங்கள் நுரையீரலை வலுப்படுத்தவும் சுவாச நோய்களிலிருந்து விலகி இருக்கவும் நல்லது. கபல்பார்தி மற்றும் பாஸ்த்ரிகா இரண்டு சுவாச பயிற்சிகள், ஒவ்வொரு நாளும் காலையில் நுரையீரலை சுத்தப்படுத்தவும் நோயெதிர்ப்பு சக்தியை தூண்டவும் செய்ய உதவுகிறது. ஆனால் நீங்கள் மாலையில் சுவாச உடற்பயிற்சி செய்ய திட்டமிட்டால், நாடி சோதனா சிறந்த தேர்வாகும்.
துளசி இலைகளை சாப்பிடுங்கள்
ஆயுர்வேத பயிற்சியாளரின் கூற்றுப்படி, துளசி அல்லது புனித துளசி என்பது மூலிகைகளுக்கு புத்துயிர் அளிக்கும் சுவாச அமைப்பு. இது இம்யூனோமோடூலேட்டரி, ஆன்டிடூசிவ் மற்றும் எக்ஸ்பெக்டோரண்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. சிறந்த முடிவுகளுக்கு, ஒருவர் தினமும் காலையில் காலை உணவுக்கு முன் 2-3 துளசி இலைகளை சாப்பிட வேண்டும். புதிய இலைகள் கிடைக்கவில்லை என்றால் துளசி தேநீர் குடிப்பது சமமான நன்மை பயக்கும்.
சூடான நீரில் சவன்பிரஷ்
குளிர்கால காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சவன்பிராஷை விட சிறந்தது எதுவுமில்லை. ஆனால் சிறந்த முடிவுகளுக்கு, சூடான நீரில் சவன்பிரஷ் எடுக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் 1 தேக்கரண்டி சவன்பிரஷ் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிடுங்கள். இது சுவாச மண்டலத்தைத் தூண்டவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், நுரையீரலில் சளி கட்டமைப்பைக் குறைக்கவும் உதவும்.
குளிர்காலத்தில் தவறான உணவு கலவையைத் தவிர்க்கவும்
கடைசியாக, பழங்களுடன் பால் பொருட்கள் மற்றும் அசைவம் போன்ற தவறான உணவு சேர்க்கைகளைத் தவிர்ப்பது நல்லது. பால் பொருட்களை பழங்களுடன் எடுத்துக் கொள்ளும்போது அது உடலில் நச்சுகளை உருவாக்குகிறது, இது நெரிசலுக்கு வழிவகுக்கும். இதேபோல், தயிரில் சமைத்த கோழி கனமாக இருக்கும்.