Just In
- 21 min ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 57 min ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 1 hr ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- 2 hrs ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எச்சரிக்கை! சளி, இருமல் இருந்தா, இந்த உணவுகளை மறந்தும் சாப்பிட்ராதீங்க.. இல்லன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்...
சளி, இருமல் இருந்தால் உண்ணும் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் சளி, இருமல் பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.
குளிர்காலம் அல்லது பனி காலத்தில் ஏராளமான மக்கள் சளி, இருமல் பிரச்சனையால் அதிகம் அவதிப்படுவார்கள். அதோடு இக்காலத்தில் பாக்டீரியல் தொற்றுக்களால் பலர் காய்ச்சலாலும் கஷ்டப்படுவார்கள். இதற்கு மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொண்டால் காய்ச்சல் குறைந்துவிடும். ஆனால் சளி, இருமல் பிரச்சனை ஆரம்பித்துவிட்டால், அவ்வளவு எளிதில் குணமாகிவிடாது. எனவே சளி, இருமல் இருந்தால் உண்ணும் உணவுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில உணவுகள் சளி, இருமல் பிரச்சனையை தீவிரமாக்கிவிடும்.
இப்போது சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படும் போது எந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த உணவுகளை தப்பித்தவறி சாப்பிட்டால், அது மார்பில் சளியை அதிகரித்து, நிலைமையை மோசமாக்கி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிவிடலாம்.
பால்
நிபுணர்களின் கூற்றுப்படி, சளி, இருமல் பிரச்சனையைக் கொண்டவர்கள் பாலைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் பால் குடிப்பதால் மார்பு பகுதியில் சளி அதிகம் உற்பத்தியாகி தேங்க ஆரம்பித்து, இருமலை மேன்மேலும் அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு சளி, இருமல் இருந்தால், பால் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
சாதம்
மருத்துவரின் கூற்றுப்படி, அரிசியானது குளிர்ச்சித்தன்மை கொண்டது மற்றும் இது சளியை உருவாக்கும் தன்மையைக் கொண்டது. ஆகவே சளி பிரச்சனையால் ஏற்கனவே அவதிப்படும் ஒருவர் சாதத்தை சாப்பிட்டால், அது பிரச்சனையை மோசமாக்கும்.
சர்க்கரை
இருமல் உங்களுக்கு அதிகம் இருந்தால் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடாதீர்கள். ஏனெனில், சர்க்கரையானது மார்பில் அழற்சியைத் தூண்டும். அதே வேளையில், சர்க்கரை நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, இருமல் மற்றும் சளியை அதிகரிக்கும். ஆகவே உங்களுக்கு விரைவில் சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், சர்க்கரையைத் தவிர்த்திடுங்கள்.
காபி
சளி மற்றும் இருமல் இருக்கும் போது காப்ஃபைன் நிறைந்த பானங்களை அறவே தவிர்க்க வேண்டும். ஏனென்றால், பொதுவாக காப்ஃபைன் நிறைந்த பானங்கள் தொண்டை தசைகளில் வறட்சியை ஏற்படுத்தி, அதிகளவு இருமலுக்கு வழிவகுக்கும். ஆகவே இனிமேல் சளி பிடித்திருக்கும் போது, காப்ஃபைன் நிறைந்த காபி, டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.
ஆல்கஹால்
மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரைக்கு அடுத்ப்படியாக நெஞ்சுப் பகுதியில் அழற்சியை அதிகரிக்கும் ஓர் உணவுப் பொருள் என்றால், அது ஆல்கஹால் தான். சளி பிடித்திருக்கும் போது, ஆல்கஹாலைக் குடித்தால், நமது உடலில் காயத்தைக் குணப்படுத்தும் செயல்முறையை செய்யும் இரத்த வெள்ளையணுக்கள் சேதமடைவதோடு, உடலில் உள்ள பிரச்சனையும் அதிகரிக்கும்.