இந்த சைலண்ட் கில்லர் நோய்கள் அறிகுறிகளே இல்லாமல்... உங்க உயிரையே பறிக்குமாம்... ஜாக்கிரதை...!

அதிக கொலஸ்ட்ரால் ஒரு சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் கொலஸ்ட்ரால் அளவு ஆபத்தான உயர்வை அடையும் வரை நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளையும் உருவாக்காது.

இன்றைய நாளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும்பாலான நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். சாதாரண நோய் முதல் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சைலண்ட் கில்லர் நோய்கள் வரை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுகள்தான். ஆம், உணவுகள் மற்றும் நம் வாழ்க்கை முறை செயல்கள் அனைத்தும் நம் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதனால், எல்லோரும் நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகிறார்கள். சில நோய்கள் தடுக்கக்கூடியவை என்றாலும், மற்றவை கண்டுபிடிப்பது கடினம். ஆனால், ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது எளிதில் மீட்க கூடியதாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

silent killer diseases that you may have and not know about in tamil

இருப்பினும், இதைச் செய்ய, அவர்களின் நிலையைப் பற்றி ஒருவர் அறிந்திருக்க வேண்டும். இது அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிதல் அல்லது வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் மூலம் மட்டுமே சாத்தியமாகும். ஆனால் சில நோய்கள் அறிகுறியற்றதாக இருந்தால், அது மிகவும் தாமதமாகும் வரை எந்த அறிகுறிகளையும் காட்டாது. இந்த நோய்களை 'அமைதியான கொலையாளிகள்' என்று அழைப்பர். அப்படியான நோய்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது. இரத்த நாளங்களின் சுவர்களுக்கு எதிரான இரத்தத்தின் விசை தொடர்ந்து அதிகமாக இருக்கும் போது இது நிகழ்கிறது. இந்த நிலையை கட்டுப்படுத்தப்படாவிட்டால் அல்லது நிர்வகிக்கப்படாவிட்டால், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். சில சமயங்களில், இது உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். உயர் இரத்த அழுத்தம் ஆபத்தானதாக நிலையில் இருந்தால் தவிர எந்த அறிகுறிகளையும் காட்டாது.

அதிக கொலஸ்ட்ரால்

அதிக கொலஸ்ட்ரால்

அதிக கொலஸ்ட்ரால் ஒரு சைலண்ட் கில்லர் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் கொலஸ்ட்ரால் அளவு ஆபத்தான உயர்வை அடையும் வரை நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளையும் உருவாக்காது. இரத்தத்தில் எல்.டி.எல் 'கெட்ட' கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படும் கொழுப்புப் பொருள் அதிகமாகக் குவியும் போது அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது. ஆரோக்கியமற்ற கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது போன்ற நச்சுப் பழக்கங்களால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

ஒரு நபரின் இரத்த ஓட்டத்தில் அதிக குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை இருந்தால், அது நீரிழிவு நோயைக் குறிக்கிறது. கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்யாதபோது அல்லது அது உற்பத்தி செய்யும் இன்சுலினை உடல் திறம்பட பயன்படுத்த முடியாதபோது சர்க்கரை நோய் உருவாகிறது. நீரிழிவு நோய் உடல்நலக் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. முக்கியமாக இது ஒரு சைலண்ட் கில்லர் நோயாகும். ஏனெனில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோயாளிகள் தங்களுக்கு இந்த நிலை இருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள் மற்றும் நோய் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்தவுடன் மட்டுமே இதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும்.

புற்றுநோய்

புற்றுநோய்

புற்றுநோய் என்பது உயிருக்கு ஆபத்தான சுகாதார நிலை. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பெரும்பாலான புற்றுநோய்கள் அமைதியாக உங்களுக்கு ஏற்படுகின்றன. இது ஸ்கிரீனிங் மூலம் மட்டுமே கண்டறியப்படுகிறது அல்லது உறுதிப்படுத்தப்படுகிறது. இது புற்றுநோயைத் தடுப்பதற்கும் ஆரம்பகால நோயறிதலைச் செய்வதற்கும் ஒரு முக்கியமான கருவியாகும். உங்கள் உடலில் இருக்கும் புற்றுநோய்களின் இருப்பிடத்தைப் பொறுத்து, உங்களுக்கான சிகிச்சை முறைகள் தொடங்கலாம்.

கொழுப்பு கல்லீரல் நோய்

கொழுப்பு கல்லீரல் நோய்

கொழுப்பு கல்லீரல் நோய்கள் இரண்டு வகைகளாக உள்ளன. அவை ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) மற்றும் ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு ஏற்பட்ட சிலருக்கு ஆல்கஹால் ஸ்டீட்டோஹெபடைடிஸ் என்ற நிலையும் ஏற்படலாம். NAFLD என்பது ஒரு வகை கொழுப்பு கல்லீரலாகும். இது ஆல்கஹால் உட்கொள்வதோடு தொடர்பில்லாதது, அதேசமயம் ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் அதிகமாக மது அருந்துவதால் ஏற்படுகிறது. கொழுப்பு கல்லீரல் நோய் படிப்படியாக முன்னேறுகிறது. அதனால்தான் அது அறிகுறிகளின் வடிவத்தில் வெளிப்படுவதில்லை. இது ஒரு அமைதியான கொலையாளி. இந்த சுகாதார நிலையில் மக்கள் எந்த அறிகுறிகளையும் அனுபவிக்கவில்லை அல்லது பிற தீங்கற்ற நோய்களுக்கான அறிகுறிகளை தவறாக நினைக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, February 24, 2023, 11:37 [IST]
Desktop Bottom Promotion