Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...!
இந்தியாவில் புதிதாக அனுமதி பெற்றுள்ள 'மாடர்னா தடுப்பூசி' பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்!
கொரோனாவுக்கு எதிராக இந்தியா மிகக்கடுமையான மருத்துவ போரை மேற்கொண்டிருக்கும் போது, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக இந்தியா மிகக்கடுமையான மருத்துவ போரை மேற்கொண்டிருக்கும் போது, இந்தியாவின் டி.சி.ஜி.ஐ (DCGI) இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அவசரகால பயன்பாட்டிற்காக மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய மும்பையைச் சேர்ந்த சிப்லா நிறுவனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
கோவிஷீல்டு, கோவாக்சின் மற்றும் ஸ்பூட்னிக் ஆகியவற்றிற்குப் பிறகு இந்தியாவில் கிடைக்கும் நான்காவது கொரோனா தடுப்பூசி என்றால் அது மாடர்னா தடுப்பூசி ஆகும். இந்த மாடர்னா தடுப்பூசி இந்தியாவிற்கு வருவதற்கு முன், இந்த தடுப்பூசி குறித்த முழு விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மாடர்னா தடுப்பூசி என்பது என்ன?
மாடர்னா தடுப்பூசி அமெரிக்க மருந்து நிறுவனத்தால் அதே பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி mRNA-1273 தடுப்பூசி என்றும் அழைக்கப்படுகிறது. இது மெசஞ்சர் ஆர்.என்.ஏ அல்லது mRNA-வைப் பயன்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இது நமது செல்களுக்கு ஒரு புரதத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை கற்பிக்கும் தொழில்நுட்பம் அல்லது ஒரு துண்டு புரதம் நம் உடலுக்குள் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது.

எத்தனை டோஸ் தேவைப்படுகிறது?
மாடர்னா தடுப்பூசியானது 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் போடப்படுகிறது. இந்தியாவிலும் இரண்டு அளவுகளிலேயே இந்த தடுப்பூசி போடப்படும். இருப்பினும், இந்தியாவில் இரண்டு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த தடுப்பூசி உலக சுகாதார அமைப்பால் (WHO) அங்கீகரிக்கப்பட்டதா?
மாடர்னா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) ஒப்புதல் அளித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு அதன் மூலோபாய ஆலோசனைக் குழுவின் நிபுணர்களின் (SAGE) பரிந்துரைகளின் அடிப்படையில் ஏப்ரல் 30 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

மாடர்னா தடுப்பூசியின் செயல்திறன்
மாடர்னா தடுப்பூசியானது கோவிட்-19 க்கு எதிராக பாதுகாப்பதில் சுமார் 94.1% செயல்திறனைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. அதுவும் இதன் செயல்திறனானது தடுப்பூசியின் முதல் டோஸுக்கு 14 நாட்களுக்குப் பிறகு தொடங்குவதாக உலக சுகாதார அமைப்பு அதன் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்த தடுப்பூசி புதிய வகைகளுக்கு எதிராக செயல்படுமா?
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், B.1.1.7 (ஆல்பா மாறுபாடு) மற்றும் 501Y.V2 (பீட்டா மாறுபாடு) உள்ளிட்ட SARS-CoV-2 இன் புதிய வகைகளுக்கு எதிராக மாடர்னா mRNA தடுப்பூசி செயல்படுகிறது. இருப்பினும், புதிய மாறுபாடுகளுக்கு எதிராக மாடர்னா தடுப்பூசியின் செயல்திறனை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் சோதித்து வருகின்றனர்.

மாடர்னா தடுப்பூசிக்கு எத்தனை நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன?
இதுவரை மாடர்னா தடுப்பூசிக்கு கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஐக்கிய இராஜ்ஜியம், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாடர்னா தடுப்பூசியின் பக்கவிளைவுகள்
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் கருத்துப்படி, கை வலி, கை சிவத்தல், கை வீக்கம் போன்றவை மாடர்னா தடுப்பூசியின் பக்கவிளைவுகளாக இருக்கலாம். இது தவிர, தடுப்பூசி போட்டவர் உடல் சோர்வு, தலைவலி, தசை வலி, குளிர், காய்ச்சல், குமட்டல் போன்றவற்றையும் சந்திக்கலாம். அதுவும் தடுப்பூசி போட்ட ஓரிரு நாட்களில் பக்கவிளைவுகள் ஏற்படும் என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இவையெல்லாம் உடலில் தடுப்பூசி வேலை செய்வதை உணர்த்தும் சாதாரண அறிகுறிகளாகும் மற்றும் இவை ஒரு சில நாட்களில் தானாக சரியாகிவிடும்.

எந்த வயதினர் இந்த தடுப்பூசியைப் போடலாம்?
உலக சுகாதார அமைப்பு (WHO) 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த தடுப்பூசி போட ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் மாடர்னா ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்திடம் 12-17 வயதுக்குட்பட்ட இளம் பருவத்தினருக்கு பயன்படுத்த அங்கீகாரம் கேட்டு கோரிக்கை தாக்கல் செய்தது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 12 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளில் அதன் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக அதன் மருத்துவ சோதனை தரவை மதிப்பாய்வு செய்து வருகிறது.



Click it and Unblock the Notifications











