Just In
- 33 min ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 5 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உயர் இரத்த அழுத்தம் ஒருவரது உயிரை எப்படியெல்லாம் பறிக்கும் எனத் தெரியுமா?
ஒருவர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால், அது இரத்த நாளங்களை சேதப்படுத்துவதோடு, மூளை, இதயம், கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புக்களையும் பாதிக்கும்.
தற்போது பலருக்கு இரத்த அழுத்த பிரச்சனை உள்ளது. எப்போது ஒருவரது உடலில் ஆரோக்கியமற்ற அளவிற்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறதோ, அப்போது உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால் நம்மில் பலருக்கு இரத்த அழுத்த பிரச்சனை இருப்பது தெரிவதில்லை. குறிப்பாக உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அதற்கான அறிகுறிகளை வழக்கமாக நாம் கவனிக்கமாட்டோம். பெரும்பாலும் இதன் அறிகுறிகள் அன்றாடம் நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளாகத் தான் இருக்கும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனையை பரிசோனையின் மூலமே அறிய முடியும்.
ஒருவர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால், அது இரத்த நாளங்களை சேதப்படுத்துவதோடு, மூளை, இதயம், கண்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புக்களையும் பாதிக்கும். எனவே அவ்வப்போது மருத்துவரை சந்தித்து, இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம். அதிலும் 30 வயதிற்கு மேலாகிவிட்டால் கட்டாயம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
MOST READ: உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!
இப்போது உயர் இரத்த அழுத்தம் உடலின் எந்த உறுப்புக்களைப் பாதித்து, எம்மாதிரியான ஆபத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக காண்போம்.
மாரடைப்பு
உயர் இரத்த அழுத்தம் தமனிகளை சேதப்படுத்தி, அடைப்பை உண்டாக்குவதோடு, இதய தசைகளுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுத்து, இதன் விளைவாக மாரடைப்பை உண்டாக்கும்.
பக்கவாதம்
உயர் இரத்த அழுத்தம் தீவிரமானால், அது மூளையில் உள்ள இரத்த நாளங்களில் எளிதில் அடைப்பு ஏற்பட்டு பக்கவாதத்தை உண்டாக்கும். சில சமயங்களில் அந்த அடைப்பினால் மூளையில் உள்ள இரத்தக் குழாய்கள் வெடிக்கவும் வாய்ப்புள்ளது.
இதய செயலிழப்பு
உயர் இரத்த அழுத்தத்தினால் அதிகரிக்கும் பணிச்சுமையால் இதயம் பெரிதாகி, உடலின் மற்ற உறுப்புக்களுக்கு இரத்தத்தை வழங்கத் தவறிவிடும். இதன் விளைவாக ஏற்படுவது தான் இதய செயலிழப்பு.
சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு
உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களைச் சுற்றியுள்ள தமனிக் குழாய்களை சேதப்படுத்துவதோடு, சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டும் செயல்திறனில் இடையூறை ஏற்படுத்தும்.
பார்வை இழப்பு
உயர் இரத்த அழுத்தம் கண்களில் உள்ள இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுத்து சேதப்படுத்துவதோடு, கண்களுக்கு கஷ்டத்தை கொடுத்து, அதன் விளைவாக பார்வை இழப்பை உண்டாக்கும்.
பாலியல் செயலிழப்பு
உயர் இரத்த அழுத்தத்தை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால், அது தீவிரமாகி, அதன் விளைவாக ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாட்டையும், பெண்களுக்கு பாலுணர்ச்சி குறைபாட்டையும் உண்டாக்கும்.
ஆஞ்சினா
உயர் இரத்த அழுத்தம் பல காலமாக நீடித்திருந்தால், அது இதய நோய் அல்லது மைக்ரோவாஸ்குலர் நோய்க்கு வழிவகுக்கும். இதன் பொதுவான அறிகுறி ஆஞ்சினா அல்லது மார்பு வலி ஆகும்.
புற தமனி நோய்
உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படுவது தான் பெருந்தமனி தடிப்பு. இந்நிலையால் கால்கள், கைகள், வயிறு மற்றும் தலைப் பகுதியில் உள்ள தமனிக் குழாய்கள் குறுகலாகி, வலி அல்லது மிகுந்த களைப்பை உண்டாக்கும்.