Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
வியர்வையால் உங்க மேல செம கப்பு அடிக்குதா? அப்ப இந்த ஜூஸை அடிக்கடி குடிங்க...
வியர்வை சருமத்தில் உள்ள குறிப்பிட்ட வகையான பாக்டீரியாவுடன் தொடர்பு கொள்ளும் போது, அது ஒருவித துர்நாற்றத்தை உருவாக்குகிறது. அது தான் வியர்வை நாற்றம்.
கோடைக்காலம் என்றாலே கடுப்பேற்றும் ஒன்று என்றால் அது வியர்வையாகத் தான் இருக்கும். அதிலும் அந்த வியர்வை துர்நாற்றமின்றி இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே துர்நாற்றத்துடன் இருந்தால், அது நமக்கு பெரும் சங்கடத்தை உண்டாக்கும். நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால், வியர்வை மணமற்றது. ஆனால், இது சருமத்தில் உள்ள குறிப்பிட்ட வகையான பாக்டீரியாவுடன் தொடர்பு கொள்ளும் போது, அது ஒருவித துர்நாற்றத்தை உருவாக்குகிறது. அது தான் வியர்வை நாற்றம்.

இந்த தர்மசங்கடமான சிக்கலைத் தவிர்க்க நம்மில் பெரும்பாலானோர் டியோடரண்டுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இது ஒரு தற்காலிக தீர்வை மட்டுமே வழங்குகிறது. அதிர்ஷ்டவசமாக, உடல் துர்நாற்றத்திற்கான அடிப்படை காரணத்தை அகற்றுவது சாத்தியமாகும்.
இக்கட்டுரையில், தமிழ் போல்ட் ஸ்கை வியர்வையால் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கும் ஒரு ரகசிய ஜூஸ் ரெசிபியைக் கொடுத்துள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸ் வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை திறம்பட அழிக்கும்.

தேவையான பொருட்கள்:
* ஆப்பிள் - 1
* பார்ஸ்லி - 1
* நற்பதமான முட்டைக்கோஸ் இலைகள் - 3-4
* இஞ்சி - 1/2 இன்ச்
* எலுமிச்சை - 1

செய்முறை:
* முதலில் அனைத்து பொருட்களையும் நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த ஜூஸை ஒரு டம்ளரில் ஊற்றினால், ஜூஸ் தயார்.

எப்போது குடிப்பது நல்லது?
இந்த ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நல்லது. இல்லாவிட்டால் இதனை நாள் முழுவதும் அவ்வப்போது குடிக்கலாம். ஆனால் காலையில் குடிப்பது தான் மிகச்சிறந்த பலனைத் தரும்.

நன்மைகள்
இந்த ஜூஸ் தயாரிக்கப் பயன்படுத்தும் இந்த பொருட்கள் சருமத்தின் pH சமநிலையைப் பராமரிக்க சிறந்தவை. மேலும் இந்த ஜூஸில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் துர்நாற்ற எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இவை பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதைக் கடினமாக்குகின்றன.

குறிப்பு
* ஒருமுறை தயாரித்த ஜூஸை 48 மணிநேரத்திற்குள் குடித்துவிட வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்து குடிக்கக்கூடாது. ஆனால் இந்த ஜூஸின் முழு நன்மைகளையும் பெற நினைத்தால், நற்பதமாக அவ்வப்போது தயாரித்துக் குடியுங்கள்.
* முதல் முறை இந்த ஜூஸைத் தயாரிக்கும் போது, முதலில் உங்கள் உடலுக்கு ஒப்புக் கொள்கிறதா என்பதை அறிய சிறிய அளவில் செய்து உட்கொண்டு பாருங்கள். எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால், தினமும் இந்த பானத்தைத் தயாரித்துக் குடியுங்கள். இதனால் உங்களுக்கு வியர்க்கும் போது, எந்த ஒரு துர்நாற்றமும் வீசாமல் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்.



Click it and Unblock the Notifications











