Latest Updates
-
வெயிலால் நீர்ச்சத்து குறைபாடு வரக்கூடாதா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 3 விதைகளை நீரில் ஊற வெச்சு சாப்பிடுங்க.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்!
கொரோனா தொற்றுக்கு ஆளான சர்க்கரை நோயாளிகள் ஆபத்தான நிலைக்கு செல்லாமல் இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
நீரிழிவு நோய் இருப்பது ஒரு நபரை நேரடியாக COVID-19 க்கு ஆளாக்குவதில்லை, ஆனால் தொற்றுநோயால்பாதிக்கப்படும்போது கடுமையான சிக்கல்களை உருவாக்க இது ஒரு காரணமாக அமைகிறது.
நீரிழிவு நோய் இருப்பது ஒரு நபரை நேரடியாக COVID-19 க்கு ஆளாக்குவதில்லை, ஆனால் தொற்றுநோயால் பாதிக்கப்படும்போது கடுமையான சிக்கல்களை உருவாக்க இது ஒரு காரணமாக அமைகிறது. முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் தரவைப் பார்ப்பதன் மூலம் இதை உறுதி செய்ய முடியும். இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அல்லது தீவிர அறிகுறிகளை உருவாக்கிய நிறைய பேருக்கு உயர் இரத்த சர்க்கரை அளவு இருப்பதை வெளிப்படுத்தியது.

சுமார் 12 சதவீத இந்தியர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீரிழிவு நோயாளி ஒருவர் தற்போதைய சூழலில் தன்னை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மிக முக்கியம். தொற்றுநோய்களின் போது அவர்கள் பாதுகாப்பாக இருக்க எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும்
சர்க்கரை மற்றும் இனிப்புகள் ஒரு நீரிழிவு நோயாளி விலகி இருக்க வேண்டிய விஷயங்கள் மட்டுமல்ல. பல உணவு பொருட்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும், மேலும் அவை உணவில் இருந்து விலக்கப்பட வேண்டும். மாவுச்சத்து காய்கறிகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அவற்றில் சில. பச்சை காய்கறிகள், முழு தானியங்கள், சிட்ரஸ் பழங்கள் மற்றும் நட்ஸ்கள் அவர்களின் அன்றாட உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சுறுசுறுப்பாக இருங்கள்
நீரிழிவு நோய்க்கான முக்கிய ஆபத்து காரணி கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு. மேலும் சர்க்கரை அளவை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர, சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வது முக்கியம். நீங்கள் வாக்கிங், ஜாக்கிங் அல்லது உடற்பயிற்சிகளைத் தேர்வுசெய்தாலும் அனைத்தும் பயனுள்ள பயிற்சி விருப்பங்களே. ஆரோக்கியமாக இருக்க 30-45 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்தால் போதும்.

நீரேற்றத்துடன் இருங்கள்
உயர் இரத்த குளுக்கோஸ் அளவு உடலில் நீரேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நீரிழப்பு அதிக ஆபத்து உள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீரிழப்பு அபாயத்தில் உள்ளனர், மேலும் அவர்களின் நீர் உட்கொள்ளும் அளவை கவனித்துக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் ஏராளமான திரவத்தை குடிக்க வேண்டுமென்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு நீரிழிவு நோயாளி தேங்காய் நீர் அல்லது ப்ரெஷ் பழச்சாறு குடிக்கலாம். பேக் செய்யப்பட்ட பழச்சாறுகள் ஒரு சிறந்த தேர்வு அல்ல.

மனஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கவும்
உங்கள் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உங்கள் மன அழுத்த நிலை முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் கார்டிசோல் என்ற ஹார்மோனை வெளியிடுகிறது, இது உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை நேரடியாக பாதிக்கிறது. இது உடலில் குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுவது கடினமாக்குகிறது, இதன் விளைவாக சர்க்கரை இரத்த ஓட்டத்தில் உருவாகத் தொடங்குகிறது. இது தலைவலி, தசை வலி, சோர்வு மற்றும் பிற நீரிழிவு அறிகுறிகளையும் தீவிரப்படுத்துகிறது. மன அழுத்த அளவைக் குறைப்பது உங்கள் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவும், மேலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

மருந்துகள்
மருத்துவர் பரிந்துரைத்த உங்கள் எல்லா மருந்துகளையும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உங்கள் இரத்த சர்க்கரை அளவை சரியான நேரத்தில் கட்டுப்படுத்த உங்கள் எல்லா மருந்துகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். கொரோனா வைரஸின் ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் கண்டால், உங்கள் மருந்துகளை சுயமாக பரிந்துரைப்பதற்கு பதிலாக உங்கள் மருத்துவரை சந்திக்கவும். சில OTC மருந்துகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை ஏற்ற இறக்கமாக மாற்றி, அறிகுறிகளை தீவிரப்படுத்தி சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

கொரோனா விதிமுறைகள்
ஆரோக்கியமாக இருக்க இந்த அடிப்படை விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதைத் தவிர, தொற்று அபாயத்தைக் குறைக்க கொரோனா வைரஸின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுங்கள். ஒவ்வொரு நபரும் பின்பற்ற வேண்டிய சில அத்தியாவசிய விஷயங்கள் என்னவெனில்,
- மாஸ்க் தவறாமல் அணியுங்கள்
- நீங்கள் வெளியே இருக்கும்போது சமூக இடைவெளியை பராமரிக்கவும்
- உங்கள் கைகளை தவறாமல் கழுவ வேண்டும்
- நீங்கள் தொற்றுக்கு ஆளாகியிருந்தால் வீட்டிலேயே இருங்கள்



Click it and Unblock the Notifications











