Just In
- 2 hrs ago 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- 3 hrs ago உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- 4 hrs ago கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 5 hrs ago ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
Don't Miss
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Sports உனக்காக நான் இருக்கேன் நண்பா! 34 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார்..ஹர்திக்கிற்கு கொடுத்த ரியாக்சன்
- Automobiles இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வந்தவரை மீண்டும் கொரோனா பாதிக்குமா? உண்மை என்ன?
தற்போது வரை மருத்துவர்கள், கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா தாக்காது என்று உறுதியாக கூறுவதில்லை.
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பாதித்து வருகிறது கொரோனா வைரஸ். பல உயிர்களை காவு வாங்கி வரும் கொரோனா கிருமியை எதிர்த்து உலகம் முழுவதும் போராடி வருகிறது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா 3,81,761 பேர்களை உலகம் முழுவதும் பாதித்துள்ளது. இதில் 16,000-க்கு மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது வரை 400-க்கும் அதிகமானோர் கொரோனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9.
இதற்கிடையில் 37 நோயாளிகள் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது வரை மருத்துவர்கள், நோய் தாக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா தாக்காது என்று உறுதியாக கூறுவதில்லை.
மீண்டும் வரக்கூடும்
முன்னதாக, உலக சுகாதார நிறுவனம், கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பரவக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளனர். தொற்று பாதிப்பு குறைந்த பின்னர் அடுத்த 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் என்று கூறப்படுகிறது.
தற்போது உள்ள நிலவரப்படி, கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சைக்கு பின் குணமடைந்த நோயாளிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரிசோதனையில் இரண்டு முறை எதிர்மறை விளைவுகள் காணப்பட்டால் அவர்களை வீடு திரும்ப அனுமதிக்கின்றனர்.
MOST READ: கொரோனா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரைப் பறிக்கிறது தெரியுமா?
முதல் அமெரிக்க சோதனை
அபாயகரமான கொரோனா வைரசுக்கு தற்போது வரை தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இஸ்ரேல், அமெரிக்க போன்ற நாடுகளில் மற்றும் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளனர். மார்ச் 17ம் தேதி, வாஷிங்டன்னில் மனித உடலில் தடுப்பூசிக்கான முதல் கட்ட சோதனை அரங்கேற்றப்பட்டது. இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸை எதிர்த்து மனிதர்களை பாதுகாக்குமா என்ற முதல் கட்ட மருத்துவ ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.
மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுமா?
கொரோனா பாதிக்கப்பட்ட 7 நோயாளிகள் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் குணமடைந்த பின்னர் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுமா இல்லையா என்பது பற்றி தங்களால் உறுதியாக கூற முடியாது என்று மூத்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்கள் குணமடைந்து வீடு திரும்பும் போது, அடுத்த 2 வாரங்களுக்கு அவர்கள் தனியாகவே இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் இந்த நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் தாங்கள் பருகும் பானங்கள் மீது சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தங்கள் மனநலத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்!
கொரோனாவிற்கு தடுப்பூசி இல்லை
இந்த கொடுமையான பாதிப்பிற்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இதற்கான கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா கிருமிக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் அமெரிக்க களம் இறங்கியுள்ளது. மிகக் குறைந்த காலகட்டத்தில் ஒரு தடுப்பூசி மருத்துவ சோதனையை எட்டியுள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
சமூக இடைவெளியை பராமரிப்பதன் மூலம் இதனைத் தடுக்கலாம்
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது ஒவ்வொரு தனி நபரின் பொறுப்பாகும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இத்தகைய தொற்று பாதிப்புகள் பரவாமல் தடுக்க வேகமாக செயல்படுவது அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நோய் பரவும் ஆபத்து அதகிரிக்கும். மேலும் கொரோனா பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி மிகவும் அவசியமான ஒன்று என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே பள்ளிகள், அலுவலகங்கள், திரையரங்குகள், பொது நிகழ்வுகள் போன்றவை இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. 60 வயதிற்கு மேல் இருக்கும் முதியவர்கள் மற்றும் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆகியோருக்கு COVID-19 தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. இவர்கள் தங்கள் பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது மற்றும் கூட்டமான இடங்கள் மற்றும் பொது வாகனங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
MOST READ: கொரோனா வைரஸ் பற்றி அதிவேகமாக பரவி வரும் சில தவறான தகவல்கள்!
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்
* கொரோனா தொற்றைத் தவிர்க்க , அடிக்கடி கைகளை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
* சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் கைகளை சுத்தமாக கழுவுங்கள்.
* தும்மல் அல்லது இருமல் ஏற்பட்டால், கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு மூக்கை மூடிக் கொண்டு தும்மவும் அல்லது இருமவும். அதன்பின்னர் உடனடியாக கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரை அப்புறப்படுத்தவும்.
* கொரோனா பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கும் நபர் அல்லது இருமல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து சற்று விலகி இருப்பது நல்லது.
* ஒருவேளை கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அவசியம் நீங்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
* வீடு , அலுவலகம், மொபைல் போன், கம்ப்யூட்டர் ஆகியவற்றை சுத்தமாக பராமரிக்கவும். மருத்துவமனை செல்ல நேர்ந்தால் தேவையில்லாமல் எந்த இடத்தையும் தொட வேண்டாம்.