Latest Updates
-
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன?
இந்த சக்திவாய்ந்த மூலிகைகளில் ஒன்றை எடுத்துக்கொண்டாலும் நீங்கள் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாமாம்...!
தூக்கம் என்பது நம் உடல் ஓய்வெடுக்கவும், இழந்து ஆற்றலை மீண்டும் பெறவும் நமது உடலின் இயற்கையான எதிர்வினையாகும், மேலும் நல்ல மற்றும் தரமான தூக்கத்திற்கு பின் நீங்கள் எழும் போது புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.
தூக்கம் என்பது நம் உடல் ஓய்வெடுக்கவும், இழந்து ஆற்றலை மீண்டும் பெறவும் நமது உடலின் இயற்கையான எதிர்வினையாகும், மேலும் நல்ல மற்றும் தரமான தூக்கத்திற்கு பின் நீங்கள் எழும் போது புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். தரமான தூக்கம் உங்களை நாள் முழுவதும் வேலை செய்ய தயார்படுத்துகிறது, அதனால்தான் ஒரு நாளைக்கு 6-8 மணி நேரம் தூங்க பரிந்துரைக்கப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, பிஸியான வாழ்க்கை முறை மற்றும் அளவிற்கு அதிகமான மன அழுத்தத்தால், மக்கள் நிம்மதியாக தூங்குவதில் சிக்கல் உள்ளது, இது நீண்ட காலத்திற்கு உடல் மற்றும் மன நோய்களை ஏற்படுத்துகிறது. இருப்பினும், நீங்கள் நன்றாக தூங்கவும் தூக்கமின்மையை குணப்படுத்தவும் உதவும் சில மூலிகைகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

லெவெண்டர்
உடல் ஓய்வெடுக்க உதவும் மிகவும் பொதுவான மூலிகை இது. பல பெண்கள் லாவெண்டரை அதன் பிற ஆரோக்கிய நலன்களுக்காக உட்கொள்கிறார்கள், ஆனால் ஆண்கள் மற்றும் பெண்களிடையே பிரபலமாக இருக்கும் முக்கிய நன்மை தூக்கத்தைத் தூண்டும் திறன் ஆகும். லாவெண்டர் எண்ணெயைப் பயன்படுத்துதல் அல்லது லாவெண்டர் தேநீர் அருந்துதல் ஆகியவை உங்கள் வழக்கத்தில் இந்த மூலிகையைச் சேர்ப்பதற்கான சில பொதுவான வழிகளாகும்.

கெமோமில்
லாவெண்டரைப் போலவே இந்த மூலிகையும் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது, அதில் மிகவும் முக்கியமானது நல்ல தூக்கத்தை வழங்குவது. பெரும்பாலும், மக்கள் தங்கள் தூக்க முறைகளை ஒழுங்கமைக்க கெமோமில் டீயை உட்கொள்கிறார்கள்.இந்த டெய்சி போன்ற தாவரம் மூலிகை உட்செலுத்துதல் மற்றும் மூலிகை மருத்துவத்தில் மிகவும் பொதுவானது. பலர் மாத்திரைகள் அல்லது தூக்க சப்ளிமெண்ட்ஸ் எடுக்க விரும்பவில்லை என்றால், தூக்கமின்மைக்கான விரைவான தீர்வாக, பொதுவாக, மூலிகை டீக்களை எடுத்துக் கொள்கிறார்கள்.

வலேரியன்
18 ஆம் நூற்றாண்டிலிருந்து, மக்கள் தூக்கத்தை ஊக்குவிக்க வலேரியன் வேரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக இந்த வேர் வாசனை திரவியங்கள் மற்றும் குளியல் மற்றும் உடல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. உறக்கத்திற்கான இந்த மூலிகை பல்வேறு செயல்திறன் நிலைகளைக் கொண்டுள்ளது, மேலும் வலேரியன் வேர் மற்ற மூலிகைகளைப் போல தூக்கத்தைத் தூண்டவில்லை என்றாலும், இது தளர்வை ஊக்குவிக்கும் என்று அறியப்படுகிறது.

அஸ்வகந்தா
இது பொதுவாக பல மருத்துவ சிக்கல்களை நீக்க பயன்படும் ஒரு பொதுவான மூலிகையாகும். அதில் முக்கியமானது தூக்க சிக்கல்களை நீக்குவதாகும். இந்த தாவரத்தின் இலைகள் தூக்கத்தை ஊக்குவிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதிலுள்ள ட்ரைஎதிலீன் கிளைகோல் நரம்புகளைத் தணிக்கிறது மற்றும் மன அழுத்தத்தை நீக்குகிறது, தூக்கப் பிரச்சினையை நீக்குகிறது, அதே நேரத்தில் உங்கள் தூக்கச் சுழற்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது உடலின் தூக்க சுழற்சியை சரிசெய்யும் OTC மருந்துகளுக்கு சிறந்த மாற்றாக அமைகிறது.

துளசி
குமட்டல், பூச்சி கடித்தல், தோல் வெடிப்பு மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி உள்ளிட்ட பல சுகாதார பிரச்சினைகளுக்கு உதவ பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையான துளசி, தூக்கக் கோளாறுகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த சக்தி வாய்ந்த இலைகள் உங்கள் அமைதியான இரவு உறக்கத்திற்கு இடையூறாக இருக்கும் பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. நீங்கள் விழித்திருக்கும்போது அல்லது தூங்கும்போது இது வலிகள் மற்றும் அசௌகரியங்களை நீக்குகிறது.



Click it and Unblock the Notifications











