Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கால் பெருவிரல் இப்படி வீங்கி இருந்தா உடம்புல இது அதிகமா இருக்கு-ன்னு அர்த்தம்... அத குறைக்க இத செய்யுங்க...
மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைத் தடுக்க யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். ஆயுர்வேதத்தில் இதற்கு சில தீர்வுகள் உள்ளன. இவை யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும்.
உடலில் அதிகளவு யூரிக் அமிலம் இருந்தால், அது மூட்டுக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். கீல்வாதம் போன்ற நிலைமைகள் யூரிக் அமிலங்கள் அதிகளவு மூட்டுக்களில் சேரும் போது ஏற்படுகின்றன. யூரிக் அமிலம் என்பது மீன், ஒயின் மற்றும் கடல் உணவு போன்ற பியூரின்களுடன் உணவை ஜீரணிப்பதன் மூலம் உடலில் தயாரிக்கப்படும் ஒரு இயற்கை கழிவுப் பொருளாகும். நமது சிறுநீரகங்கள் பொதுவாக யூரிக் அமிலத்தை வடிகட்டும்போது, அதிகப்படியான யூரிக் அளவு நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மூட்டுக்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலியைத் தடுக்க யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம். இந்த யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த வல்லுநர்கள் உடற்பயிற்சி செய்யவும், நல்ல உணவு மற்றும் போதுமான அளவு நீரைக் குடிக்கவும் பரிந்துரைப்பார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில் இதற்கு ஒருசில தீர்வுகள் உள்ளன. இவை யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும். இப்போது உடலில் உள்ள யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் மூட்டு வலியைக் குறைக்கும் சில ஆயுர்வேத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மூக்கிரட்டை கசாயம்
மூக்கிரட்டை என்னும் மூலிகையில் உள்ள மருத்துவ குணங்கள் மூட்டுக்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. பொதுவாக யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் போது, மூட்டுக்களில் திரவங்கள் மற்றும் நச்சுக்கள் குவிவதால் தான் மூட்டு வீக்கம் ஏற்படுகிறது. ஆனால் மூக்கிரட்டையின் மருத்துவ குணங்களால், சிறுநீர் கழிப்பதன் மூலம் மூட்டுக்களில் உள்ள நச்சுக்கள் நீக்கப்பட்டு, மூட்டு வீக்கம் மற்றும் வலி குறைகிறது. தினமும் மூக்கிரட்டை கசாயத்தை அருந்தி வந்தால், அது ஒட்டுமொத்த உடலில் உள்ள வீக்கமும் குறையும்.

குக்குலு பிசின்
குக்குலு பிசினைக் கொண்டு பல மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ஆயுர்வேதத்தில், இது ஒரு வலி நிவாரணியாக கருதப்படுகிறது. ஏனெனில் இது மூட்டு வலி மற்றும் மூட்டுக்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சீந்தில் கொடி பொடி
சீந்தில் கொடி யூரிக் அமில பிரச்சனைக்கான முக்கிய மருந்தாகும். இது பித்த அளவைக் குறைக்கிறது. பித்த மற்றும் வாத தோஷத்தை சமப்படுத்த உதவுகிறது மற்றும் இரத்தத்தில் உள்ள யூரிக் அமில அளவைக் குறைக்கிறது. மேலும் இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. சீந்தில் கொடியில் இருந்து தான் அமிர்தாதி குக்குலு தயாரிக்கப்படுகிறது. இது யூரிக் அமில அளவுகளுக்கு சிறந்தது.

கோரைக்கிழங்கு
யூரிக் அமில அளவைக் கட்டுப்படுத்த உதவும் மற்றொரு மூலிகை தான் கோரைக்கிழங்கு. இந்த கோரைக்கிழங்கு பொடியை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்தால், உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலம் குறையும்.

கருப்பு உலர் திராட்சை
உலர் திராட்சை சாப்பிடுவது எலும்பு அடர்த்திக்கு நல்ல மற்றும் கீல்வாதம் மற்றும் ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைக்கிறது. அதற்கு 10-15 கருப்பு உலர் திராட்சையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, அந்த நீரை மறுநாள் காலையில் குடித்து, உலர் திராட்சையை மென்று சாப்பிட வேண்டும்.

மாவிலங்க சூரணம் (Varun Churna)
ஆயுர்வேதத்தில், அதிகமான யூரிக் அமிலம் காரணமாக ஏற்படும் மூட்டு வலிக்கு மாவிலங்க சூரண பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. இது நீண்ட காலத்திற்கு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

சுக்கு பவுடர் மற்றும் மஞ்சள் தூள்
சுக்கு பவுடர் மற்றும் மஞ்சள் தூள் இரண்டையும் ஒன்றாக எடுத்து, நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, வீக்கமுள்ள மற்றும் வலிமிகுந்த மூட்டுக்களில் தடவ வேண்டும். இப்படி தினமும் தடவி வந்தால், மூட்டு வலி விரைவில் காணாமல் போய்விடும். வேண்டுமானால், இந்த கலவையை சாப்பிடவும் செய்யலாம்.



Click it and Unblock the Notifications











