Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
சிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள்!
இங்கு சிறுநீரக புற்றுநோய் இருப்பதை சுட்டிக்காட்டும் சில அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
சிறுநீரகம் உடலில் மிகவும் முக்கிய வேலையை செய்கிறது. மனித உடலில் 2 சிறுநீரகங்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் டாக்ஸின்களை வடிகட்டும். அதே சமயம் சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள கெமிக்கல் உட்பொருட்களை நிலையாக வைத்து, உடல் ஆரோக்கியம் மற்றும் சிறுநீர் உற்பத்தியை சீராக வைத்துக் கொள்ளும்.

மார்பகம், சருமம், புரோஸ்டேட் புற்றுநோய்களின் அறிகுறிகளைப் பற்றி தெரிந்த அளவு கூட, நம்மில் பலருக்கும் சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் தெரியாது. சொல்லப்போனால் சிறுநீரக புற்றுநோய் இருந்தால், ஆரம்ப காலத்தில் அது ஒருசில பொதுவான அறிகுறிகளை வெளிப்படுத்துவதால், நாம் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
பெரும்பாலும் சிறுநீரக புற்றுநோயானது முற்றிய நிலையில் அல்லது சிறுநீரகத்தில் உள்ள புற்றுநோய் கட்டிகள் நன்கு வளர்ச்சி அடைந்த பின்பு தான் நன்கு தெரிய வரும். ஆகவே கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகி உங்களை சோதனை செய்து கொள்ளுங்கள்.

சிறுநீரில் இரத்தம்
சிறுநீரில் இரத்தம் கலந்து வெளி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று சிறுநீரக புற்றுநோய். ஆகவே இம்மாதிரி இரத்தம் கலந்த சிறுநீர் வந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

முதுகு/பக்கவாட்டில் வலி
முதுகு அல்லது பக்கவாட்டுப் பகுதியில் வலி அல்லது அழுத்தம் ஏற்பட்டால், அது சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். ஏனெனில் புற்றுநோய் கட்டிகளால் சிறுநீரகங்கள் வீக்கமடைந்து, அதனால் அழுத்தத்தை ஏற்படுத்தி, வலியை உண்டாக்குகிறது.

சோர்வு
நாள்பட்ட சோர்வு அல்லது களைப்பும், சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். எனவே நீங்கள் திடீரென்று காரணமேயின்றி, மிகுந்த சோர்வை உணர்ந்தால், மருத்துவரை அணுகுங்கள்.

எடை குறைவு
சிறுநீரகங்கள் மெட்டபாலிசம் மற்றும் செரிமானத்திலும் முக்கிய பங்கை வகிக்கிறது. சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உணவுகளை உடைப்பது மற்றும் உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதில் இடையூறு ஏற்படும். இதன் காரணமாக உடல் எடையும் திடீரென்று குறைய ஆரம்பிக்கும்.

இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்
சிறுநீரகங்களில் கட்டிகள் இருந்தால், இரத்த சோகை, உடலில் எலக்ட்ரோலைட் அல்லது கால்சியத்தின் அளவில் ஏற்றத்தாழ்வுகள் அல்லது இதர இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நோய் கண்டறிதல்
மருத்துவர்கள் சிறுநீரக புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தால், நெஃப்ரெக்டோமி முறையின் மூலம், பாதிக்கப்பட்ட செல்களை அகற்றுவார்கள். இந்த முறையினால், சிறுநீரகங்களில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் மட்டும் அகற்றப்படும். சில நேரங்களில் மருத்துவரால் கூட சிறுநீரக புற்றுநோயைக் கண்டறிய முடியாது. எனவே அடிக்கடி முழு உடல் பரிசோதனை செய்வதன் மூலம், உடலில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.



Click it and Unblock the Notifications











