Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
நெஞ்செரிச்சல் அதிகமா இருக்கா? அதிலிருந்து உடனடி நிவாரணம் தரும் சில வழிகள்!
இங்கு இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலுக்கான இயற்கை நிவாரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
செரிமானத்திற்கு காரணமான இரைப்பை உணவுக்குழாய் மற்றும் சிறுகுடலுக்கு இடையே அமைந்துள்ளது. ஒருவருக்கு செரிமானம் பல்வேறு பிரச்சனைகளான இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலின் காரணமாகவும் பாதிக்கப்படும்.

இரைப்பை அழற்சி என்பது இரைப்பை சுவர்களில் சிறுசிறு சிவப்பு நிற புள்ளிகள் இருந்து, கடுமையான வலியை உண்டாக்கும். இக்கட்டுரையில் இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலுக்கான சில இயற்கை நிவாரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக இம்மாதிரியான பிரச்சனைகள மோசமான டயட், மன அழுத்தம், மது, போதைப் பழக்கம் போன்றவற்றால் தான் ஏற்படும். சரி, இப்போது அதற்கான நிவாரணிகளைக் காண்போம்.

சாதம் வடித்த நீர்
சிறிது அரிசியை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதனை வடிகட்டி, தினமும் இரு வேளைப் பருக வேண்டும். இப்படி செய்தால், விரைவில் இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை சரியாகும்.

பார்ஸ்லி நீர்
பார்ஸ்லியில் நீர்ப்பெருக்கி பண்புகளுடன், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. இத்தகைய பார்ஸ்லியைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்து வந்தால், அது இரைப்பையில் உள்ள அழற்சியை குணமாக்க உதவும்.

கேரட் மற்றும் செலரி ஜூஸ்
இரண்டு கேரட் மற்றும் சிறிது செலரி தண்டை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் குடித்தால், நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை அழற்சியில் இருந்து வேகமாக நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் மற்றும் சீமைச்சாமந்தி
ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, ஒரு கப் சீமைச்சாமந்தி டீயில் போட்டு வேக வைத்து, தினமும் காலையில் குடித்து வந்தால், இரைப்பை அழற்சியில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

இஞ்சி மற்றும் பேரிக்காய்
இஞ்சி மற்றும் பேரிக்காயை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, பகல் நேரத்தில் குடித்து வர, இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலில் இருந்து விரைவில் விடுபட முடியும்.



Click it and Unblock the Notifications