Latest Updates
-
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
நெஞ்செரிச்சல் அதிகமா இருக்கா? அதிலிருந்து உடனடி நிவாரணம் தரும் சில வழிகள்!
இங்கு இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலுக்கான இயற்கை நிவாரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
செரிமானத்திற்கு காரணமான இரைப்பை உணவுக்குழாய் மற்றும் சிறுகுடலுக்கு இடையே அமைந்துள்ளது. ஒருவருக்கு செரிமானம் பல்வேறு பிரச்சனைகளான இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலின் காரணமாகவும் பாதிக்கப்படும்.

இரைப்பை அழற்சி என்பது இரைப்பை சுவர்களில் சிறுசிறு சிவப்பு நிற புள்ளிகள் இருந்து, கடுமையான வலியை உண்டாக்கும். இக்கட்டுரையில் இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலுக்கான சில இயற்கை நிவாரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக இம்மாதிரியான பிரச்சனைகள மோசமான டயட், மன அழுத்தம், மது, போதைப் பழக்கம் போன்றவற்றால் தான் ஏற்படும். சரி, இப்போது அதற்கான நிவாரணிகளைக் காண்போம்.

சாதம் வடித்த நீர்
சிறிது அரிசியை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதனை வடிகட்டி, தினமும் இரு வேளைப் பருக வேண்டும். இப்படி செய்தால், விரைவில் இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை சரியாகும்.

பார்ஸ்லி நீர்
பார்ஸ்லியில் நீர்ப்பெருக்கி பண்புகளுடன், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. இத்தகைய பார்ஸ்லியைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்து வந்தால், அது இரைப்பையில் உள்ள அழற்சியை குணமாக்க உதவும்.

கேரட் மற்றும் செலரி ஜூஸ்
இரண்டு கேரட் மற்றும் சிறிது செலரி தண்டை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் குடித்தால், நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை அழற்சியில் இருந்து வேகமாக நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் மற்றும் சீமைச்சாமந்தி
ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, ஒரு கப் சீமைச்சாமந்தி டீயில் போட்டு வேக வைத்து, தினமும் காலையில் குடித்து வந்தால், இரைப்பை அழற்சியில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

இஞ்சி மற்றும் பேரிக்காய்
இஞ்சி மற்றும் பேரிக்காயை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, பகல் நேரத்தில் குடித்து வர, இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலில் இருந்து விரைவில் விடுபட முடியும்.



Click it and Unblock the Notifications