Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா?
நெஞ்செரிச்சல் அதிகமா இருக்கா? அதிலிருந்து உடனடி நிவாரணம் தரும் சில வழிகள்!
இங்கு இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலுக்கான இயற்கை நிவாரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
செரிமானத்திற்கு காரணமான இரைப்பை உணவுக்குழாய் மற்றும் சிறுகுடலுக்கு இடையே அமைந்துள்ளது. ஒருவருக்கு செரிமானம் பல்வேறு பிரச்சனைகளான இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலின் காரணமாகவும் பாதிக்கப்படும்.

இரைப்பை அழற்சி என்பது இரைப்பை சுவர்களில் சிறுசிறு சிவப்பு நிற புள்ளிகள் இருந்து, கடுமையான வலியை உண்டாக்கும். இக்கட்டுரையில் இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலுக்கான சில இயற்கை நிவாரணிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக இம்மாதிரியான பிரச்சனைகள மோசமான டயட், மன அழுத்தம், மது, போதைப் பழக்கம் போன்றவற்றால் தான் ஏற்படும். சரி, இப்போது அதற்கான நிவாரணிகளைக் காண்போம்.

சாதம் வடித்த நீர்
சிறிது அரிசியை ஒரு லிட்டர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர்ந்ததும், அதனை வடிகட்டி, தினமும் இரு வேளைப் பருக வேண்டும். இப்படி செய்தால், விரைவில் இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை சரியாகும்.

பார்ஸ்லி நீர்
பார்ஸ்லியில் நீர்ப்பெருக்கி பண்புகளுடன், அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. இத்தகைய பார்ஸ்லியைக் கொண்டு தேநீர் தயாரித்து குடித்து வந்தால், அது இரைப்பையில் உள்ள அழற்சியை குணமாக்க உதவும்.

கேரட் மற்றும் செலரி ஜூஸ்
இரண்டு கேரட் மற்றும் சிறிது செலரி தண்டை மிக்ஸியில் போட்டு, நீர் சேர்த்து அரைத்துக் குடித்தால், நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை அழற்சியில் இருந்து வேகமாக நிவாரணம் கிடைக்கும்.

ஆப்பிள் மற்றும் சீமைச்சாமந்தி
ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, ஒரு கப் சீமைச்சாமந்தி டீயில் போட்டு வேக வைத்து, தினமும் காலையில் குடித்து வந்தால், இரைப்பை அழற்சியில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

இஞ்சி மற்றும் பேரிக்காய்
இஞ்சி மற்றும் பேரிக்காயை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, பகல் நேரத்தில் குடித்து வர, இரைப்பை அழற்சி மற்றும் நெஞ்செரிச்சலில் இருந்து விரைவில் விடுபட முடியும்.



Click it and Unblock the Notifications











