Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
கீழ்முதுகை வலுப்படுத்தும் விபரீத சலபாசனம் செய்யத் தெரியுமா?
அதிக நேரம் அழுத்தம் தந்து அமர்ந்து கொண்டிருக்கும்போது கீழ் முதுகிற்கு அதிக சிரமம் தரப்படுவதால் அங்கே தசை மற்றும் எலும்பு பாதிக்கப்படுகிறது.
இதனால் அடிக்கடி வலி, உட்காரும்போது நிற்கும்போதும் சுளுக்கு போன்று பிடிப்பு ஆகியவை உண்டாகும்.
கீழ் முதுகிற்கு போதிய பயிற்சி அளிக்கப்படுபோது, ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து பாதிப்படைந்த செல்களை ரிப்பேர் செய்கிறது.
அதோடு பலப்படுத்தவும், வலியை போக்கவும் யோகாவில் சில ஆசனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் விபரீத சலபாசனம்.

விபரீத சலபாசனம் :
விபரீத என்றால் சமஸ்கிருதத்தில் எதிர்ப்பதம் அல்லது மாறாக. சலப என்றால் குறிப்பிட்ட இடம் என்று பொருள். இந்த யோகா பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக கீழ் முதுகை பலப்படுத்தும். முதுகு வலியை போக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :
முதலில் தரையில் குப்புற படுத்துக் கொள்ளுங்கள். பாத விரல்களை தரையோடு பதியுங்கள். கைகளை முன்னாடி நீட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை
பின் மெதுவாக மூச்சை ஆழ்ந்து இழுத்து வெளியிட்டபடியே கைகளை படுத்தபடியே நீராக உயர்த்துங்கள். மெதுவாக உடலையும் உயர்த்த வேண்டும். கால்களையும் உயர்த்த வேண்டும்.

செய்முறை
இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடலை வளையுங்கள். இப்போது வயிறு மட்டும் தரையில் இருக்க வேண்டும்.
சில நிமிடங்கள் அதே நிலையில் நன்றாக நிதானமாக மூச்சை விட்டபடி இருக்க வேண்டும். பிறகு இயல்பு நிலைக்கு வரவும்.

பலன்கள் :
கீழ்முதுகிற்கு, இடுப்பிற்கு பலன் தருகிறது. மார்புக் கூடை விரிவடையச் செய்கிறது. தோள்பட்டைக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.

குறிப்பு :
வயிறு, முதுகில் அறுவை சிகிச்சை நடந்திருந்தால் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். அதேபோல் கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.



Click it and Unblock the Notifications











