Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
கீழ்முதுகை வலுப்படுத்தும் விபரீத சலபாசனம் செய்யத் தெரியுமா?
அதிக நேரம் அழுத்தம் தந்து அமர்ந்து கொண்டிருக்கும்போது கீழ் முதுகிற்கு அதிக சிரமம் தரப்படுவதால் அங்கே தசை மற்றும் எலும்பு பாதிக்கப்படுகிறது.
இதனால் அடிக்கடி வலி, உட்காரும்போது நிற்கும்போதும் சுளுக்கு போன்று பிடிப்பு ஆகியவை உண்டாகும்.
கீழ் முதுகிற்கு போதிய பயிற்சி அளிக்கப்படுபோது, ரத்த ஓட்டம் அதிகம் பாய்ந்து பாதிப்படைந்த செல்களை ரிப்பேர் செய்கிறது.
அதோடு பலப்படுத்தவும், வலியை போக்கவும் யோகாவில் சில ஆசனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் விபரீத சலபாசனம்.

விபரீத சலபாசனம் :
விபரீத என்றால் சமஸ்கிருதத்தில் எதிர்ப்பதம் அல்லது மாறாக. சலப என்றால் குறிப்பிட்ட இடம் என்று பொருள். இந்த யோகா பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக கீழ் முதுகை பலப்படுத்தும். முதுகு வலியை போக்கும். எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :
முதலில் தரையில் குப்புற படுத்துக் கொள்ளுங்கள். பாத விரல்களை தரையோடு பதியுங்கள். கைகளை முன்னாடி நீட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை
பின் மெதுவாக மூச்சை ஆழ்ந்து இழுத்து வெளியிட்டபடியே கைகளை படுத்தபடியே நீராக உயர்த்துங்கள். மெதுவாக உடலையும் உயர்த்த வேண்டும். கால்களையும் உயர்த்த வேண்டும்.

செய்முறை
இப்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு உடலை வளையுங்கள். இப்போது வயிறு மட்டும் தரையில் இருக்க வேண்டும்.
சில நிமிடங்கள் அதே நிலையில் நன்றாக நிதானமாக மூச்சை விட்டபடி இருக்க வேண்டும். பிறகு இயல்பு நிலைக்கு வரவும்.

பலன்கள் :
கீழ்முதுகிற்கு, இடுப்பிற்கு பலன் தருகிறது. மார்புக் கூடை விரிவடையச் செய்கிறது. தோள்பட்டைக்கு பலம் தருகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.

குறிப்பு :
வயிறு, முதுகில் அறுவை சிகிச்சை நடந்திருந்தால் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். அதேபோல் கர்ப்பிணிகளும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.



Click it and Unblock the Notifications