Just In
- 1 min ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- 3 min ago ஜாகிங் போகும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க... இல்லனா உங்க எலும்புகள் அவ்வளவுதான்...!
- 2 hrs ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 3 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
Don't Miss
- Movies எரிகிற கொள்ளியில் இன்னும் ஏன் எண்ணெய் ஊத்துற.. விஜய்யை கடுமையாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்!
- News திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அந்த "சத்தம்".. கருவறை கிட்ட சேர்ல யாரு? திருவள்ளூர் கொடுமை
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கண் பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கான சில டிப்ஸ்...
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலைக்கு இன்றைய தலைமுறையினர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் அழையா விருந்தாளியாக வருகின்றன. அதில் உடல் பருமன், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை மட்டுமின்றி, கண்களிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையை உற்று நோக்குவது முக்கிய காரணம். அதுமட்டுமின்றி வேலைப்பளு காரணமாக குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருப்பதும் ஓர் காரணம்.
உங்களுக்கு கண் பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், ஒருசில செயல்களை தினமும் செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்து வந்தால், நிச்சயம் உங்களுக்கு பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது கண் பிரச்சனைகள் வராமல் இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம்.
கண்களை கழுவுங்கள்
தினமும் பலமுறை சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவுங்கள். இதனால் கண்களில் உள்ள தூசிகள் மற்றும் கிருமிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நோய்கள் கண்களைத் தாக்காமல் இருக்கும்.
கண் கூசும் அளவிலான ஒளி
சூரியக்கதிர்கள் மற்றும் கண்கள் கூசும்படியான ஒளிகளை நேரடியாக காண்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அந்த பிரகாசமான ஒளிகக்கதிர்கள் கண்களின் ரெட்டினாவை கடுமையாக தாக்கி, பார்வை கோளாறை ஏற்படுத்தும். முடிந்த அளவில் கம்ப்யூட்டர் முன் கண்ணாடியை அணிந்து கொண்டு வேலை செய்யுங்கள்.
கண் பயிற்சி
கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது, கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலான கண் பயிற்சிகளை செய்து வாருங்கள். அதுவும் 20 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களின் கருவிழிகளை மேலும் கீழும் அசைப்பது, பின் வட்ட சுழற்சியில் சுழற்றுவது என்று செய்யுங்கள். இந்த பயிற்சியை 5-10 முறை அவ்வப்போது செய்து வாருங்கள்.
சீரான இடைவெளி
கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது, திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையே 22-28 இன்ச் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கண்களுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, கண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
தண்ணீர்
கண்களின் ஆரோக்கியத்திற்கு கண்ணீர் அவசியமானது. அந்த கண்ணீருக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் அலுவலகத்தில் பலர் தண்ணீர் குடிப்பதையே மறந்து வேலை செய்து வருகின்றனர். இதனால் கண்கள் மட்டுமின்றி, உடலும் வறட்சி அடைந்துவிடுகிறது.