Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
கண் பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கான சில டிப்ஸ்...
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலைக்கு இன்றைய தலைமுறையினர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் நிறைய பிரச்சனைகள் உடலில் அழையா விருந்தாளியாக வருகின்றன. அதில் உடல் பருமன், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் போன்றவை மட்டுமின்றி, கண்களிலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையை உற்று நோக்குவது முக்கிய காரணம். அதுமட்டுமின்றி வேலைப்பளு காரணமாக குடிக்கும் நீரின் அளவு குறைவாக இருப்பதும் ஓர் காரணம்.
உங்களுக்கு கண் பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமெனில், ஒருசில செயல்களை தினமும் செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்து வந்தால், நிச்சயம் உங்களுக்கு பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுக்கலாம். சரி, இப்போது கண் பிரச்சனைகள் வராமல் இருக்க அன்றாடம் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம்.

கண்களை கழுவுங்கள்
தினமும் பலமுறை சுத்தமான குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவுங்கள். இதனால் கண்களில் உள்ள தூசிகள் மற்றும் கிருமிகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நோய்கள் கண்களைத் தாக்காமல் இருக்கும்.

கண் கூசும் அளவிலான ஒளி
சூரியக்கதிர்கள் மற்றும் கண்கள் கூசும்படியான ஒளிகளை நேரடியாக காண்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அந்த பிரகாசமான ஒளிகக்கதிர்கள் கண்களின் ரெட்டினாவை கடுமையாக தாக்கி, பார்வை கோளாறை ஏற்படுத்தும். முடிந்த அளவில் கம்ப்யூட்டர் முன் கண்ணாடியை அணிந்து கொண்டு வேலை செய்யுங்கள்.

கண் பயிற்சி
கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது, கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் வகையிலான கண் பயிற்சிகளை செய்து வாருங்கள். அதுவும் 20 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களின் கருவிழிகளை மேலும் கீழும் அசைப்பது, பின் வட்ட சுழற்சியில் சுழற்றுவது என்று செய்யுங்கள். இந்த பயிற்சியை 5-10 முறை அவ்வப்போது செய்து வாருங்கள்.

சீரான இடைவெளி
கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் போது, திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையே 22-28 இன்ச் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கண்களுக்கு அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு, கண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தண்ணீர்
கண்களின் ஆரோக்கியத்திற்கு கண்ணீர் அவசியமானது. அந்த கண்ணீருக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் அலுவலகத்தில் பலர் தண்ணீர் குடிப்பதையே மறந்து வேலை செய்து வருகின்றனர். இதனால் கண்கள் மட்டுமின்றி, உடலும் வறட்சி அடைந்துவிடுகிறது.



Click it and Unblock the Notifications