Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
காலையில் இட்லி, தோசை போன்ற உணவுகளை உட்கொள்வதால் பெறும் நன்மைகள்!
இங்கு நொதிக்க வைத்து உட்கொள்ளப்படும் உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது மக்களிடையே பிட்சா, பர்கர், பாஸ்தா போன்ற உணவுகள் பிரபலமாக உள்ளது. அதிலும் பலர் இவற்றை காலை உணவாக சாப்பிடுகின்றனர். இந்த உணவுகள் தான் இருப்பதிலேயே உடலை மிகவும் மோசமாக பாதிக்கக்கூடியவைகள்.

ஆனால் பாரம்பரியமாக நாம் சாப்பிட்டு வரும் இட்லி, தோசை போன்ற புளிக்க வைக்கப்படும் உணவுகளில் ஏராளமான நன்மைகள் உள்ளடங்கியுள்ளது என்பது தெரியுமா? இங்கு நொதிக்க வைத்து உட்கொள்ளப்படும் உணவுகளால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

நன்மை #1
தானியங்கள், பீன்ஸ் வகைகளை நொதிக்க வைக்கும் போது, அவற்றில் உள்ள பைட்டிக் அமிலம் உடைக்கப்படுகிறது. பொதுவாக பைட்டிக் அமிலம் கனிமச்சத்துக்கள் உறிஞ்சுவதைத் தடுத்து, உணவுகள் செரிமானமாவதைத் தடுப்பதுடன், அசிடிட்டிக்கான அபாயத்தையும் அதிகரிக்கும். ஆனால் நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், செரிமானம் எளிதில் நடைபெறும் மற்றும் அந்த உணவில் உள்ள சத்துக்களும் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும்.

நன்மை #2
நொதிக்க வைத்த உணவுகளில் லேக்டோபேசில்லி உற்பத்தி செய்யப்படும். இது வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்களான ஃபோலிக் அமிலம், நியாசின், தயமின், ஆன்டி-பயாடிக் மற்றும் ஆன்டி கார்சினோஜெனிக் சேர்மங்களின் தொகுப்புகளுக்கு உதவும்.

நன்மை #3
உணவுகள் நொதிக்கும் போது, அதில் உற்பத்தி செய்யப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உணவுகளை முன்பே செரிக்கச் செய்யும். இதனால் புளிக்க வைத்த உணவுகளை உட்கொண்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே தான் செரிமான பிரச்சனை மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை இட்லி சாப்பிட சொல்கிறார்கள்.

நன்மை #4
உணவுகளை நொதிக்க வைத்து சாப்பிடும் போது, அந்த உணவுகளில் நொதிகள் மற்றும் லாக்டிக் அமிலங்களின் உற்பத்தி அதிகரித்து, உண்ணும் உணவுகள் எளிதில் உடைக்கப்பட்டு, உணவில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உடலால் உறிஞ்சப்படும்.

நன்மை #5
நொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது, குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். குடலில் நல்ல பாக்டீரியாக்கள் சீரான அளவில் இருந்தால், குடலியக்க பிரச்சனைகள் ஏதுமின்றி, குடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இந்த வகையான உணவுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அசிடிட்டி போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.



Click it and Unblock the Notifications