Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
முழங்கால் வலிக்கான சில பொதுவான கை வைத்தியங்கள்!
முதல் நாள் ஜிம்மில் சேர்ந்தால் அல்லது திடீரென்று ரன்னிங், வாக்கிங் மேற்கொண்டால், பெரும்பாலானோர் கடுமையான முழங்கால் வலியால் அவஸ்தைப்படுவார்கள். இந்த வலிக்கு சில வலி நிவாரணி மாத்திரைகளை எடுப்பர். ஆனால் இப்படி மாத்திரைகளை எதற்கெடுத்தாலும் உட்கொண்டால், அதனால் பல விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.
எனவே எப்போதும் எந்த ஒரு பிரச்சனைக்கும் மருந்து மாத்திரைகளின் மூலம் நிவாரணம் பெறாமல், இயற்கை வழிகளை நாடினால், சீக்கிரம் அந்த வலியில் இருந்து விடுபடுவதோடு, ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.
இங்கு முழங்கால் வலிக்கான சில பொதுவான கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இதில் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும் வழி தான் மிகவும் சிறப்பான பலனைத் தரக்கூடியது.

கற்பூர எண்ணெய்
கற்பூர எண்ணெய் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மூட்டுக்களில் உள்ள சிரமத்தில் இருந்து நிவாரணம் வழங்கும் மற்றும் எரிச்சலைக் குறைக்கும். கற்பூர எண்ணெய் தயாரிப்பதற்கு, 1 டீஸ்பூன் கற்பூர பொடியை ஒரு கப் சூடான தேங்காய் எண்ணெயில் போட்டு, குளிர வைக்கவும். பின் அந்த எண்ணெயைக் கொண்டு தினமும் வலியுள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

ஓமம்
ஓமத்தில் உள்ள மயக்க மருந்து மற்றும் நோயெதிர்ப்பு அழற்சிப் பண்புகள் முழங்கால் வலி, வீக்கம் மற்றும் மூட்டுகளில் உள்ள அழற்சியைப் போக்க வல்லது. அதற்கு ஓமத்தை கையால் நசுக்கி, தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, வலியுள்ள இடத்தில் தடவினால், முழங்கால் வலி வேகமாக மறையும்.

விளக்கெண்ணெய்
முழங்கால் வலி இருப்பவர்கள், விளக்கெண்ணெயை சூடேற்றி, அதனை வலியுள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, பின் காட்டன் துணியை சுடுநீரில் நனைத்து, அதனைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், மூட்டுகளில் உள்ள உட்காயங்களில் இருந்து நிவாரணம் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஆன்டிபாடிகளின் உற்பத்தி தூண்டப்பட்டு, வலி குணமாகும்.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள ஆன்டி-செப்டிக் பண்புகள், உடலில் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் வழங்கும். அதிலும் முழங்கால் மற்றும் மூட்டு வலிகளுக்கு ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், விரைவில் வலி மறையும்.

ஐஸ்கட்டி
முழங்கால்களில் கடுமையான வலியை உணரும் போது, அவ்விடத்தில் ஐஸ் கட்டிகளை துணியில் போட்டு கட்டி, அதனைக் கொண்டு ஒத்தம் கொடுத்தால், வலி குறைவதோடு, அப்பகுதியில் இருக்கும் வீக்கம் மற்றும் உட்காயம் குறைந்து, வேகமாக வலியில் இருந்து விடுபடலாம்.



Click it and Unblock the Notifications











