Just In
- 38 min ago ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- 1 hr ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- 2 hrs ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- 2 hrs ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
Don't Miss
- News லோக்சபா தேர்தல்: ஓபிஎஸ், தமிழிசை, கனிமொழி, சவுமியா, திருமா..தமிழகத்தின் 11 நட்சத்திர தொகுதிகள்!
- Movies SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தலை பாரமா இருக்கா? இந்த இயற்கை வைத்தியங்களை செஞ்சு பாருங்க...
சளி, தலைவலி, தும்மல் எல்லாம் சேர்ந்து இருப்பதை தான் தலை பாரம் என்று சொல்வோம். இத்தகைய தலை பாரம் வந்தால், கடுமையான தலைவலியுடன், மூக்கில் இருந்து நீர் வடிதல், தும்மல் என்று அனைத்தும் ஒன்று சேர்த்து ஒருவரை பாடாய் படுத்திவிடும். வைரஸ் தொற்றால் உண்டாகும் இந்த தலை பாரமானது குறைந்தது ஒரு வாரத்திற்கு இருக்கும். இது சரியாகிவிடும் என்று அப்படியே விட்டு விட்டால், அது இன்னும் நிலைமையை மோசமாக்கிவிடும்.
ஆகவே தலை பாரம் இருந்தால், அப்போது ஒருசில இயற்கை வைத்தியங்களை மேற்கொண்டால், நிச்சயம் அந்த தலை பாரத்தின் அவஸ்தையில் இருந்து விடுபடலாம். மேலும் இந்த இயற்கை வைத்தியங்கள் அனைத்தும் பாட்டியிடம் இருந்து சுட்டவைகள் தான். இருப்பினும் இவைகள் தான் தலை பாரத்தை சரிசெய்யும் மிகச் சிறந்த மருந்துவ முறைகள். அதுமட்டுமின்றி, இதனை எந்த ஒரு பக்கவிளையும் இல்லாத மருத்து முறை என்றும் சொல்லலாம்.
சரி, இப்போது அந்த தலை பாரத்தை சரிசெய்யும் இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போமா!!!
ஆவிப் பிடிப்பது
தலை பாரமாக இருக்கும் போது, ஆவிப் பிடித்தால், இறுகியிருக்கும் சளியானது இளகி எளிதில் வெளியேறி, தலை பாரத்தில் இருந்து விடுதலைப் பெறலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உப்பு சிகிச்சை
தலை பாரத்தை சரிசெய்வதில் உப்பு ஒரு சிறந்த பொருள். அதற்கு உப்பு கலந்த நீரைக் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். அதிலும் அந்த நீரை தொண்டையில் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதனால் சளி உடனே வெளியேறி, தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.
வெதுவெதுப்பான சூழ்நிலை
சளி பிடித்திருக்கும் போது வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருக்க வேண்டும். இதனால் அதிகப்படியான சளியினால் ஏற்படும் காய்ச்சல் மற்றும் தலை பாரத்தில் இருந்து விடுபடலாம்.
வெதுவெதுப்பான பானங்கள்
தலை பாரமாக இருக்கும் போது வெதுவெதுப்பான பானங்களான காபி, டீ அல்லது சூப் போன்றவற்றை குடிக்க வேண்டும். இதனால் தலை பாரம் நீங்கும்.
சூடான ஷவர் குளியல்
தலை பாரமாக இருக்கும் போது ஒரு நாளைக்கு இரண்டு முறை, சூடான ஷவர் குளியல் அல்லது சுடுநீர் குளியலை மேற்கொள்ள வேண்டும்.
எலுமிச்சை ஜூஸ்
வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சையைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்தாலும், தலை பாரம் நீங்கும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து கலந்து, அதனை குடித்தால், உடலில் உள்ள வைரஸ்கள் அழியும்.
காரமான உணவுகள்
தலை பாரத்தினால் அவஸ்தைப்படும் போது, மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்ட நல்ல காரமான உணவுகளை உட்கொண்டாலும், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள் பால்
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாலில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வந்தால், மஞ்சளானது உடலில் உள்ள தொற்றுகளை அழித்து, நல்ல நிவாரணம் வழங்கும்.
ஹாட் பேக்
ஹாட் வாட்டர் பேக்கில் சூடான தண்ணீரை ஊற்றி, அதனைக் கொண்டு தலையில் மசாஜ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், சுத்தமான காட்டன் துணியை சுடுநீரில் நனைத்து பிழிந்து, அந்த துணியைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்தால், தலை பாரம் அல்லது நீர் கோர்த்தல் நீங்கிவிடும்.
இஞ்சி டீ
இஞ்சி டீயைக் குடித்தால், இஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு பொருள், உடலில் உள்ள கிருமிகளை அழித்து தலை பார பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.