Just In
- 30 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 11 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Technology பழைய iPhone 13, iPhone 14 ஆஃபரை தூக்கி குப்பையில போடுங்க.. iPhone 15 Pro மீது ரூ.16,700 டிஸ்கவுண்ட் அறிவிப்பு!
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Movies பண்றது எல்லாமே திருட்டுத்தனம்.. கணவருடன் சேர்ந்து கொண்டு பிரபல நடிகை பார்த்த வேலை.. ஒரே அசிங்கம்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மாதவிடாய் பிரச்சனை, ஆண்களின் விதைப்பை பிரச்சனைக்கு கழற்ச்சிக்காய்! -இயற்கை மருத்துவம்
மாதவிடாய் பிரச்சனை, ஆண்களின் விதைப்பை பிரச்சனைக்கு கழற்ச்சிக்காய்
குழந்தைகள் பெரியவர்கள் என யாருக்கும் அலர்ஜி உண்டாகலாம். கழற்சிக்காயில் பட்டுசியா என்ற வேதிப்பொருள் உள்ளது. இது கசப்பை தரக்கூடியது. இதனை அனைத்து விதமான அலர்ஜிகளுக்கும் பயன்படுத்தலாம். இது மிக சிறந்த பலனை தரக்கூடியது. இந்த பகுதியில் கழற்சிகாய் எந்த நோய்களுக்கு பயன்படுகிறது என்பதையும், அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் காணலாம்.
பயன்படுத்தும் முறை:
இந்த கழற்ச்சிக்காயில் கடுமையான ஓடு உள்ளது. இந்த ஓட்டை எடுத்துவிட்டு அதன் உள்ளே உள்ள பருப்பை மருந்தாக பயன்படுத்த வேண்டும். இந்த ஓடு மிகவும் வலிமையானது, கையில் குத்திவிடக்கூடும். என பொருமையாக இதன் ஓட்டை நீக்க வேண்டியது அவசியம்.
யானைக்கால் நோய்
யானைக்கால் நோயின் போது கடுமையான குளிர் ஜீரம் வரும். பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் குளிர் ஜீரம் வரும். மலேரியா வந்ததை போல கடுமையான ஜீரம் வரம். இதற்கு இரத்தத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும். இது யானைக்கால் நோயின் அறிகுறியாகும்.
இந்த யானைக்கால் நோய்க்கு கழற்சிக்காய் மிக சிறந்த மருந்தாக அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Image courtesy
மருந்து செய்முறை:
இந்த கழற்சிக்காயின் பருப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, அதனுடன் ஐந்து மிளகுகளை இட்டு அரைத்து பொடியாக்கி, இதனை காலை, மாலை என இருமுறை சாப்பிட்டு வர வேண்டும். இது யானைக்கால் நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.
மாதவிலக்கு பிரச்சனை
பெண்களுக்கு மாதவிலக்கு இடைக்காலத்தில் நின்று போதலுக்கு இது மருந்தாக பயன்படுகிறது. மாதவிலக்கு மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்களுக்கு நின்று போதல் போன்ற பிரச்சனைகளுக்கு இதனை மருந்தாக பயன்படுத்தலாம்.
மருந்து செய்முறை
மாதவிலக்கு பிரச்சனைக்கும் ஒரு கழற்சிக்காய் பருப்புக்கு 5 மிளகுகளை வைத்து அரைத்து பொடி செய்து சாப்பிடலாம். அல்லது மொத்தமாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், 100 கிராம் கழற்சி பருப்புக்கு, 25 கிராம் மிளகு சேர்த்து அரைக்கவும்.
மிளகை அரைக்கும் முன்னர் அதன் பச்சை வாசம் போகும் வரை வாணலியில் இட்டு நன்றாக வறுக்க வேண்டும். அதே போல கழற்சி பருப்பையும் வறுத்துக்கொண்டால், அதில் இருக்கும் ஈரத்தன்மை போய் மருந்து நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
விதைப்பை பிரச்சனை
விதைப்பை பிரச்சனை, அதாவது விதைப்பையில் நீர் இறங்கி, அதிகமாக காய்ச்சல் வரும் சூழ்நிலையில் இந்த கழற்சிக்காய் மருந்தாக பயன்படுகிறது. இந்த நோய் ஹைட்ரோசிலி என்று அழைக்கப்படுகிறது.
இந்த கழற்சிக்காய் நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்க கூடிய ஒன்று.