Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
கண்புரை நோயில் இருந்து எளிதில் விடுபட இத ட்ரை பண்ணுங்க...
இங்கு கண்புரை நோயில் இருந்து விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
கண்புரை என்பது கருவிழியில் ஒளி ஊடுருவும் தன்மையைக் குறைக்கும் ஓர் நிலைமை ஆகும். இதனை சிலர் கண்ணில் பூ விழுதல் என்றும் சொல்வார்கள். பொதுவாக வயது அதிகரிக்கும் போது கண் பார்வை பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் இந்த கண்புரை நோய்.
இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், கண் பார்வையையே இழக்க நேரிடும். கண்புரை நோயானது சர்க்கரை நோய், மரபணுக்கள், முதுமை, கண்களில் காயங்கள், அதிகப்படியான சூரிய வெளிச்சத்தைக் காண்பது, மது அதிகம் அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணிகளால் அதிகம் வரும்.

இக்கட்டுரையில் கண்புரை நோயில் இருந்து விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கண்புரை நோயில் இருந்து விடுபடலாம். முக்கியமாக இந்த வழிகளைப் பின்பற்றும் முன் மருத்துவரை ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

வழி #1
1 கப் ரோஜாப் பூ இதழ்கள் மற்றும் 4 டீஸ்பூன் ராஸ்ப்பெர்ரி இலைகளை, 4 கப் சுடுநீரில் போட்டு நன்கு ஊற வைத்து, நீர் குளிர்ந்த பின், அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண் பார்வை மேம்படும்.

வழி #2
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ்வாட்டரை ஒன்றாக கலந்து, கண்களில் 4 துளிகள் விட்டு, உடனே முகம் மற்றும் கண்களை நீரில் கழுவ வேண்டும். இப்படி கண்புரையின் ஆரம்ப காலத்தில் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி #3
தினமும் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதுவும் கண்புரை பிரச்சனையில் இருந்து விடுவிக்குமாம்.

வழி #4
தினமும் 1 டீஸ்பூன் அஸ்வகந்தாவை உட்கொண்டு வர, கண்புரையின் அபாயத்தை 40% வரை குறைக்கலாம்.

வழி #5
ஒரு துளி நல்ல சுத்தமான தேனை கண்களில் விடுவதன் மூலம், கண்புரை நோயை சரிசெய்யலாம். ஆனால் தேன் சுத்தமானதாக, கலப்படம் இல்லாததாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பார்வையை இழக்கச் செய்துவிடும்.

வழி #6
தினமும் நீரில் ஊற வைத்த பாதாம் மற்றும் ஒரு டம்ளர் பாலை காலையில் குடித்து வந்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

வழி #7
முக்கியமாக தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதோடு, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம், அவற்றில் உள்ள வைட்டமின் ஏ பார்வை பிரச்சனைகளைத் தடுக்கும்.



Click it and Unblock the Notifications