Just In
- 8 hrs ago
இன்னைக்கு இந்த ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பூகம்பமே வரப்போகுதாம் உஷாரா இருங்க...!
- 20 hrs ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 23 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 23 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
Don't Miss
- Movies
ஜவஹர்லால் நேரு குடும்பம் குறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது! பரபரப்பில் பாலிவுட்!
- Sports
தன்னுடைய உடற்தகுதி குறித்து தோனிக்கு மட்டுமே தெரியும்.. கோச் அதிரடி!
- News
தாறுமாறாக பைக்கில் மோதிய கார்.. டயரில் சிக்கியவரை தரதரவென இழுத்து சென்ற கொடூரம்.. பகீர் வீடியோ!
- Finance
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பரிதாப நிலை.. !
- Automobiles
காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கண்புரை நோயில் இருந்து எளிதில் விடுபட இத ட்ரை பண்ணுங்க...
கண்புரை என்பது கருவிழியில் ஒளி ஊடுருவும் தன்மையைக் குறைக்கும் ஓர் நிலைமை ஆகும். இதனை சிலர் கண்ணில் பூ விழுதல் என்றும் சொல்வார்கள். பொதுவாக வயது அதிகரிக்கும் போது கண் பார்வை பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் இந்த கண்புரை நோய்.
இதனை ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், கண் பார்வையையே இழக்க நேரிடும். கண்புரை நோயானது சர்க்கரை நோய், மரபணுக்கள், முதுமை, கண்களில் காயங்கள், அதிகப்படியான சூரிய வெளிச்சத்தைக் காண்பது, மது அதிகம் அருந்துவது மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணிகளால் அதிகம் வரும்.
இக்கட்டுரையில் கண்புரை நோயில் இருந்து விடுவிக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் கண்புரை நோயில் இருந்து விடுபடலாம். முக்கியமாக இந்த வழிகளைப் பின்பற்றும் முன் மருத்துவரை ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

வழி #1
1 கப் ரோஜாப் பூ இதழ்கள் மற்றும் 4 டீஸ்பூன் ராஸ்ப்பெர்ரி இலைகளை, 4 கப் சுடுநீரில் போட்டு நன்கு ஊற வைத்து, நீர் குளிர்ந்த பின், அந்நீரால் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கண் பார்வை மேம்படும்.

வழி #2
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ்வாட்டரை ஒன்றாக கலந்து, கண்களில் 4 துளிகள் விட்டு, உடனே முகம் மற்றும் கண்களை நீரில் கழுவ வேண்டும். இப்படி கண்புரையின் ஆரம்ப காலத்தில் செய்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வழி #3
தினமும் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால், அதுவும் கண்புரை பிரச்சனையில் இருந்து விடுவிக்குமாம்.

வழி #4
தினமும் 1 டீஸ்பூன் அஸ்வகந்தாவை உட்கொண்டு வர, கண்புரையின் அபாயத்தை 40% வரை குறைக்கலாம்.

வழி #5
ஒரு துளி நல்ல சுத்தமான தேனை கண்களில் விடுவதன் மூலம், கண்புரை நோயை சரிசெய்யலாம். ஆனால் தேன் சுத்தமானதாக, கலப்படம் இல்லாததாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பார்வையை இழக்கச் செய்துவிடும்.

வழி #6
தினமும் நீரில் ஊற வைத்த பாதாம் மற்றும் ஒரு டம்ளர் பாலை காலையில் குடித்து வந்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

வழி #7
முக்கியமாக தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடிப்பதோடு, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம், அவற்றில் உள்ள வைட்டமின் ஏ பார்வை பிரச்சனைகளைத் தடுக்கும்.