Just In
- 2 min ago
மோசமாக காதலிக்கும் 6 ராசிகள்... இவங்க காதலை கெடுக்க யாரும் வேணாம் இவங்களே கெடுத்துக்குவாங்க...!
- 1 hr ago
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (03.03.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- 17 hrs ago
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
Don't Miss
- News
"பாஜகவும் சசிகலாவும்".. என்ன நடக்கிறது அமமுகவில்.. அழுத்தத்தில் அதிமுக.. பலே ஐடியாவில் கட்சிகள்!
- Automobiles
டெஸ்லா மின்சார கார்கள் சீனாவில் கிடைப்பதைவிட மிக குறைந்த விலையில் கிடைக்கும்... சொன்னது யார் தெரியுமா?
- Finance
480 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்.. தடுமாற்றத்திலிருந்து வெளியேறிய மும்பை பங்குச்சந்தை..!
- Movies
தேர்தலும் தமிழ் சினிமாவும்...அரசியல்வாதிகளை கவனிக்க வைத்த படங்கள்
- Sports
பயப்படாதீங்க... எதுக்கு பயப்படணும்... திறமையை நம்புங்க... அணி வீரர்களுக்கு ஜோ ரூட் ஆலோசனை
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க...
ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்டது. இஸ்லாமியர்கள் 12 மணிநேரத்திற்கும் மேலாக நோன்பை மேற்கொள்வது வழக்கம். நாள் முழுவதும் தண்ணீர் சிறிதும் குடிக்காமல் இருப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதிலும் கோடையில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், அதனால் உடல் வறட்சி ஏற்பட்டு, கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.
இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் இந்த கடுமையான நோன்பு அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் ஆரம்பித்து, மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் தான் எதுவும் சாப்பிடுவார்கள். அப்படி நீண்ட இடைவெளிக்கு பின் சாப்பிடும் உணவை இஃப்தார் என்று அழைப்பார்கள்.
நீண்ட நேரத்திற்கு பின் இஃப்தார் வேளையில் சாப்பிடும் போது, உடலை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானத்தை தேர்ந்தெடுத்து குடிக்க வேண்டும். இங்கு அந்த பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேங்கோ மிண்ட் கூலர்
குளிர்ந்த நீரில் மாம்பழத் துண்டுகள், ஒரு கையளவு புதினா இலைகள், சிறிது ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, ஜில்லென்று குடித்தால், உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, உடல் புத்துணர்ச்சியும் அடையும்.

லெமன் மிண்ட் மோஜிடோ
இது மிகச்சிறந்த ஓர் இஃப்தார் பானம். அதற்கு குளிர்ந்த நீரில் ஐஸ் கட்டிகளுடன், சிறிது தேன், ஒரு கையளவு புதினா இலைகள் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும்.

தர்பூசணி ஜூஸ்
தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் சிறிது நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து, அதோடு ஒரு சிட்டிகை கல் உப்பும் சேர்த்து கலந்து குடிக்க, உடல் புத்துணர்ச்சி அடைவதோடு, வறட்சி அடையாமலும் இருக்கும்.

சப்ஜா லெமன் ஜூஸ்
1 ஸ்பூன் சப்ஜா விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து நோன்பை முடிக்கும் போது குடிப்பது மிகவும் நல்லது.

வெல்ல சர்பத்
காலையிலேயே நீரில் சிறிது வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும். மாலைக்குள் இது கரைந்துவிடும். பின் அந்நீரை வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு, சிறிது ஊற வைத்த சப்ஜா விதைகள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.