Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் 15 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகத்தைத் தரப்போகுதாம் -
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
ரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க வேண்டுமா? அப்ப இத சாப்பிடுங்க...
இங்கு ரம்ஜான் நோன்பின் போது உடல் வறட்சி அடையாமல் இருக்க உதவும் பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்டது. இஸ்லாமியர்கள் 12 மணிநேரத்திற்கும் மேலாக நோன்பை மேற்கொள்வது வழக்கம். நாள் முழுவதும் தண்ணீர் சிறிதும் குடிக்காமல் இருப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதிலும் கோடையில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், அதனால் உடல் வறட்சி ஏற்பட்டு, கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் இந்த கடுமையான நோன்பு அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் ஆரம்பித்து, மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு பின் தான் எதுவும் சாப்பிடுவார்கள். அப்படி நீண்ட இடைவெளிக்கு பின் சாப்பிடும் உணவை இஃப்தார் என்று அழைப்பார்கள்.
நீண்ட நேரத்திற்கு பின் இஃப்தார் வேளையில் சாப்பிடும் போது, உடலை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நீர்ச்சத்தை அதிகரிக்கும் பானத்தை தேர்ந்தெடுத்து குடிக்க வேண்டும். இங்கு அந்த பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேங்கோ மிண்ட் கூலர்
குளிர்ந்த நீரில் மாம்பழத் துண்டுகள், ஒரு கையளவு புதினா இலைகள், சிறிது ஐஸ் கட்டிகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து, ஜில்லென்று குடித்தால், உடல் வறட்சி தடுக்கப்படுவதோடு, உடல் புத்துணர்ச்சியும் அடையும்.

லெமன் மிண்ட் மோஜிடோ
இது மிகச்சிறந்த ஓர் இஃப்தார் பானம். அதற்கு குளிர்ந்த நீரில் ஐஸ் கட்டிகளுடன், சிறிது தேன், ஒரு கையளவு புதினா இலைகள் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும்.

தர்பூசணி ஜூஸ்
தர்பூசணித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, அத்துடன் சிறிது நீர் மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து, அதோடு ஒரு சிட்டிகை கல் உப்பும் சேர்த்து கலந்து குடிக்க, உடல் புத்துணர்ச்சி அடைவதோடு, வறட்சி அடையாமலும் இருக்கும்.

சப்ஜா லெமன் ஜூஸ்
1 ஸ்பூன் சப்ஜா விதைகளை நீரில் போட்டு ஊற வைத்து, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து நோன்பை முடிக்கும் போது குடிப்பது மிகவும் நல்லது.

வெல்ல சர்பத்
காலையிலேயே நீரில் சிறிது வெல்லத்தைப் போட்டு கரைய வைக்க வேண்டும். மாலைக்குள் இது கரைந்துவிடும். பின் அந்நீரை வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாறு, சிறிது ஊற வைத்த சப்ஜா விதைகள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications