Latest Updates
-
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க..
கண் இமைக்காமல் வேலை செய்வது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?
இங்கு கண் இமைக்காமல் வேலை செய்வது ஏன் தவறு, கண் இமைப்பதால் மூளைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
செரிமான கோளாறு, குடலியக்க பிரச்சனை, கண் பார்வை கோளாறு, கண் எரிச்சல் மற்றும் பல இது போன்ற பிரச்சனைகளை நாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் காதில் கேட்டதும் இல்லை, நேரில் பார்த்ததும் இல்லை, பெரியளவில்!

ஆனால் இன்று? காணுமிடமெல்லாம் இந்த பிரச்சனை தான். அதில் முதன்மை வகிப்பது கண் பிரச்சனை. எல்.கே.ஜி படிக்கும் குழந்தையும் கூட கண்ணாடி அணிந்து பள்ளிக்கு செல்வது மனதை ரணமாக்குகிறது.
இதற்கு எல்லாம் காரணம் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு தான்.... கண்ணிமைக்க மறப்பது. அதற்கு காரணம் அதிகப்படியான கணினி, ஸ்மார்ட் போன் பயன்பாடு....

ஆராய்ச்சி!
சமீபத்திய ஆய்வொன்றில் நாம் கண்ணிமைப்பது மூளையை அதிகமாக செயற்படவும், சுறுசுறுப்பாக இயக்க்கி கண்பார்வையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

கண் பிரச்சனைகள்!
முக்கியமாக கண்ணிமைப்பது கண் வறட்சி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

கருவிழிகள்!
ஜர்னல் ஆப் கரன்ட் பயாலாஜி என்ற ஆய்வு பத்திரிக்கையில் வெளியாகிள்ள ஆய்வறிக்கையில், நாம் ஒவ்வொரு முறையும் கண்ணிமைக்கும் போது கருவிழிகள் மீண்டும் ரீபொசிஷன் ஆகி நல்ல ஃபோக்கசுடன் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளை செயற்திறன்!
இதனால், மூளை கண் தசைகளை ஆக்டிவேட் செய்து, உங்கள் பார்வையை சரி செய்கிறது என சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாசிரியர் கெர்ரிட் கூறியுள்ளார்.

கண்ணிமைக்காமல் உழைக்க வேண்டாம்!
கண்ணிமைக்காம உழைக்கிறான்பா அவன், செம்ம! என பாராட்ட வேண்டாம். அது முற்றிலும் தவறு. பெரும்பாலும் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் கண் இமைக்க மறந்தே விடுகிறார்கள் என்பது தான் உண்மை. இதுவும் கண் பார்வை கோளாறு ஏற்பட ஒருவகையில் காரணமாக இருக்கிறது. எனவே, கண்ணிமைத்து வேலை செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications