Just In
- 20 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
Don't Miss
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- News நிலைமை கைமீறிடுச்சி.. அமெரிக்கா, யு.கேவிற்கு போன அதிகாரபூர்வ அணு அட்டாக் வார்னிங்! யார் அனுப்புவது?
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கண் இமைக்காமல் வேலை செய்வது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?
இங்கு கண் இமைக்காமல் வேலை செய்வது ஏன் தவறு, கண் இமைப்பதால் மூளைக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.
செரிமான கோளாறு, குடலியக்க பிரச்சனை, கண் பார்வை கோளாறு, கண் எரிச்சல் மற்றும் பல இது போன்ற பிரச்சனைகளை நாம் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் காதில் கேட்டதும் இல்லை, நேரில் பார்த்ததும் இல்லை, பெரியளவில்!
ஆனால் இன்று? காணுமிடமெல்லாம் இந்த பிரச்சனை தான். அதில் முதன்மை வகிப்பது கண் பிரச்சனை. எல்.கே.ஜி படிக்கும் குழந்தையும் கூட கண்ணாடி அணிந்து பள்ளிக்கு செல்வது மனதை ரணமாக்குகிறது.
இதற்கு எல்லாம் காரணம் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு தான்.... கண்ணிமைக்க மறப்பது. அதற்கு காரணம் அதிகப்படியான கணினி, ஸ்மார்ட் போன் பயன்பாடு....
ஆராய்ச்சி!
சமீபத்திய ஆய்வொன்றில் நாம் கண்ணிமைப்பது மூளையை அதிகமாக செயற்படவும், சுறுசுறுப்பாக இயக்க்கி கண்பார்வையை நிலையாக வைத்துக் கொள்ள உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
கண் பிரச்சனைகள்!
முக்கியமாக கண்ணிமைப்பது கண் வறட்சி, கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
கருவிழிகள்!
ஜர்னல் ஆப் கரன்ட் பயாலாஜி என்ற ஆய்வு பத்திரிக்கையில் வெளியாகிள்ள ஆய்வறிக்கையில், நாம் ஒவ்வொரு முறையும் கண்ணிமைக்கும் போது கருவிழிகள் மீண்டும் ரீபொசிஷன் ஆகி நல்ல ஃபோக்கசுடன் செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூளை செயற்திறன்!
இதனால், மூளை கண் தசைகளை ஆக்டிவேட் செய்து, உங்கள் பார்வையை சரி செய்கிறது என சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆய்வாசிரியர் கெர்ரிட் கூறியுள்ளார்.
கண்ணிமைக்காமல் உழைக்க வேண்டாம்!
கண்ணிமைக்காம உழைக்கிறான்பா அவன், செம்ம! என பாராட்ட வேண்டாம். அது முற்றிலும் தவறு. பெரும்பாலும் கணினி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் கண் இமைக்க மறந்தே விடுகிறார்கள் என்பது தான் உண்மை. இதுவும் கண் பார்வை கோளாறு ஏற்பட ஒருவகையில் காரணமாக இருக்கிறது. எனவே, கண்ணிமைத்து வேலை செய்யுங்கள்.