Latest Updates
-
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா?
மாதவிடாய் நாட்களில் தவிர்க்க வேண்டிய 7 தவறுகள்!
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு அந்த மூன்று நாட்கள் மிகவும் கொடுமையனாதாக தான் இருக்கும். அதிலும் உடல் சூடு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு வலி சற்று அதிகமாகவே இருக்கும். இவற்றை தடுக்க ஆரோக்கியமான, குளுமையான உணவுகளை மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்...?
ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உட்கொண்டால் போதாது. ஒருசில வேலைகளை சரியாக செய்ய வேண்டும், ஒருசில வேலைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு முக்கியமாக தேவைபடுவது உறக்கமும், ஓய்வும் தான்.

பாதுகாப்பற்ற உடலுறவு
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல என மருத்துவர்கள் கூறினும். ஆணுறை போன்ற பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்த மறந்துவிட கூடாது. ஏனெனில், இதனால் பாலியல் உறுப்புகளில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.

உணவு
மிகவும் சோர்வாக இருக்கிறது என காரணம் காட்டி பெண்கள் மாதவிடாய் நேரத்தில் உணவு உட்கொள்ள மறுப்பது அல்லது தவிர்ப்பது தவறு. மேலும், மாதவிடாய் நாட்களில் தான் நீங்கள் நல்ல ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

துரித உணவுகள்
மாதவிடாய் நாட்கள் மட்டுமின்றி, மாதவிடாய் ஏற்படும் ஒரு வாரக் காலத்திற்கு முன்பே கூட பெண்கள் துரித உணவுகள் உட்கொள்வதை நிறுத்திக் கொள்வது சிறப்பு. ஏனெனில், துரித உணவுகள் உட்கொள்வதால், மாதவிடாய் நாட்களில் வயிறு உப்பசம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இது, மேலும் அசௌகரியத்தை உண்டாகும்.

நாப்கின் பதிலாக துணி
பெரும்பாலும் இல்லையெனிலும், அவசரத்திற்கு கூட இந்த தவறை பெண்கள் செய்துவிடக் கூடாது. துணியில் இரத்தப்போக்கு உறிஞ்சப்படாமல் போகலாம். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நாப்கின்
நாப்கின் உபயோகிக்கும் போதும், அவ்வப்போது சரிபார்த்து மாற்றிக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். வேலை காரணமாக பல பெண்கள் சகித்துக் கொள்வது கிருமி தொற்று ஏற்பட காரணமாகிவிடுகிறது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வேலை
முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் பெண்கள் அதிக வேலைகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஓய்வெடுக்காமல் வேலை செய்வது மிகுந்த அசௌகரியத்தை அளிக்கும்.

உறக்கம்
மாதவிடாய் நாட்களில் பெண்கள் நன்கு உறங்கி ஓய்வெடுக்க வேண்டும். இல்லையேல் மறுநாள் காலை உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications