Latest Updates
-
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க...
மாதவிடாய் நாட்களில் தவிர்க்க வேண்டிய 7 தவறுகள்!
ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு அந்த மூன்று நாட்கள் மிகவும் கொடுமையனாதாக தான் இருக்கும். அதிலும் உடல் சூடு அதிகமாக இருக்கும் பெண்களுக்கு வலி சற்று அதிகமாகவே இருக்கும். இவற்றை தடுக்க ஆரோக்கியமான, குளுமையான உணவுகளை மாதவிடாய் காலத்தில் பெண்கள் கட்டாயம் உட்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் காலங்களில் சுறுசுறுப்பாக இருப்பதற்கு என்ன சாப்பிடலாம்...?
ஆரோக்கியமான உணவுகளை மட்டும் உட்கொண்டால் போதாது. ஒருசில வேலைகளை சரியாக செய்ய வேண்டும், ஒருசில வேலைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு முக்கியமாக தேவைபடுவது உறக்கமும், ஓய்வும் தான்.

பாதுகாப்பற்ற உடலுறவு
மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவது தவறல்ல என மருத்துவர்கள் கூறினும். ஆணுறை போன்ற பாதுகாப்பு உபகரணத்தை பயன்படுத்த மறந்துவிட கூடாது. ஏனெனில், இதனால் பாலியல் உறுப்புகளில் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.

உணவு
மிகவும் சோர்வாக இருக்கிறது என காரணம் காட்டி பெண்கள் மாதவிடாய் நேரத்தில் உணவு உட்கொள்ள மறுப்பது அல்லது தவிர்ப்பது தவறு. மேலும், மாதவிடாய் நாட்களில் தான் நீங்கள் நல்ல ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

துரித உணவுகள்
மாதவிடாய் நாட்கள் மட்டுமின்றி, மாதவிடாய் ஏற்படும் ஒரு வாரக் காலத்திற்கு முன்பே கூட பெண்கள் துரித உணவுகள் உட்கொள்வதை நிறுத்திக் கொள்வது சிறப்பு. ஏனெனில், துரித உணவுகள் உட்கொள்வதால், மாதவிடாய் நாட்களில் வயிறு உப்பசம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. இது, மேலும் அசௌகரியத்தை உண்டாகும்.

நாப்கின் பதிலாக துணி
பெரும்பாலும் இல்லையெனிலும், அவசரத்திற்கு கூட இந்த தவறை பெண்கள் செய்துவிடக் கூடாது. துணியில் இரத்தப்போக்கு உறிஞ்சப்படாமல் போகலாம். இதனால் பிறப்புறுப்பு பகுதியில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

நாப்கின்
நாப்கின் உபயோகிக்கும் போதும், அவ்வப்போது சரிபார்த்து மாற்றிக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். வேலை காரணமாக பல பெண்கள் சகித்துக் கொள்வது கிருமி தொற்று ஏற்பட காரணமாகிவிடுகிறது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

வேலை
முடிந்த வரை மாதவிடாய் நாட்களில் பெண்கள் அதிக வேலைகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஓய்வெடுக்காமல் வேலை செய்வது மிகுந்த அசௌகரியத்தை அளிக்கும்.

உறக்கம்
மாதவிடாய் நாட்களில் பெண்கள் நன்கு உறங்கி ஓய்வெடுக்க வேண்டும். இல்லையேல் மறுநாள் காலை உடல் சோர்வு அதிகமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











