Latest Updates
-
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க..
இந்த குளிர்காலத்துல ஆஸ்துமா, இருமல் னால அவதிப்படுறீங்களா? இந்த ஒரு மருந்தை சாப்பிட்டு பாருங்க!!
குளிர்காலத்தில் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் உண்டாகும்.அதுவும் ஆஸ்துமா,இருமல் ஆகியவற்றால் குழந்தைகள்,பெரியவர்கள் பாதிக்கப்படுவார்கள்.அவர்களுக்கான பாட்டி வைத்தியமுறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நாள்பட்ட பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும்.
இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இயற்கை வைத்தியத்தில் இது சாத்தியம். பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :
உலர் திராட்சை - 10 கிராம்
இஞ்சி தூள் - 10 கிராம்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய நெல்லிக்காய் - 2

தயாரிக்கும் முறை :
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும்.

தயாரிக்கும் முறை :
பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில், அரைத்துக் கொள்ளுங்கள்.

தயாரிக்கும் முறை :
அரைத்த நெல்லிக்காயில் இப்போது உலர் திராட்சைகளையும் சேர்த்து அரையுங்கள். நன்றாக பேஸ்ட் போல் ஆனதும், அதனுடன் இஞ்சி தூளையும் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள். பின்னர் இதனை ஒரு சுத்தமன கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்து ரெடி.

எப்படி சாப்பிட வேண்டும்?
தினமும் மூன்று வேளைக்கு 5 கிராம் அளவு இந்த மருந்தை சாப்பிடுங்கள். இது சாப்பிடும்போது அதிக தாகம் எடுக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.

பலன் :
இது ஆஸ்துமா இருமல் மட்டுமல்லாது நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.



Click it and Unblock the Notifications











