Latest Updates
-
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வெயில் கொடுமையா? இந்த 4 செடிகள் இருந்தா போதும்… வீடே ஏசி போல ஜில்லுனு இருக்கும்! -
செஃப் தீனா ஸ்டைல் சிக்கன் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
வரலாற்றின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவரின் ஒரு பயணம் எப்படி உலக வரலாற்றை மாற்றியது தெரியுமா? -
உடல் சூட்டை டக்கென்று குறைக்கும் டாப் 3 உணவுகளை பட்டியலிட்ட சித்த மருத்துவர் - அது என்னென்னன்னு பாருங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க… கோடை வெயிலிலும் பணவரவு குறையாம இருக்க ரகசியம்! -
1 வருடம் கழித்து மேஷ ராசிக்கு செல்லும் புதன்: நாளை முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
India Heatwave Alert: இந்தியாவில் வெயில் உச்சத்தில் இருக்கும் டாப் 10 நகரங்கள் என்னென்ன தெரியுமா? -
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
இந்த குளிர்காலத்துல ஆஸ்துமா, இருமல் னால அவதிப்படுறீங்களா? இந்த ஒரு மருந்தை சாப்பிட்டு பாருங்க!!
குளிர்காலத்தில் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் உண்டாகும்.அதுவும் ஆஸ்துமா,இருமல் ஆகியவற்றால் குழந்தைகள்,பெரியவர்கள் பாதிக்கப்படுவார்கள்.அவர்களுக்கான பாட்டி வைத்தியமுறை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
ஆஸ்துமா குணப்படுத்த முடியாத நாள்பட்ட பிரச்சனை. குளிர்காலத்தில் மிக அதிகமாகிவிடும். இதனால் மூச்சு விடாதபடி சளி நுரையீரல் முழுவதும் கட்டிக் கொண்டு, சுவாசிப்பதில் பாதிப்பை தரும்.
இதற்கு ஆஸ்துமா அட்டாக் என்று பெயர். ஆனால் எப்போதுமே ஆஸ்துமா வராமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

இயற்கை வைத்தியத்தில் இது சாத்தியம். பக்க விளைவுகள் இல்லை நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குகிறது. கிருமிகளை அழிக்கும். எப்படியென பார்க்கலாம்.

தேவையானவை :
உலர் திராட்சை - 10 கிராம்
இஞ்சி தூள் - 10 கிராம்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
பெரிய நெல்லிக்காய் - 2

தயாரிக்கும் முறை :
ஒரு சுத்தமான பாத்திரத்தில் நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த நெல்லிக்காயை போட்டு கொதிக்க விடவும். நெல்லிக்காயின் வெளிப்புறம் வேகும் வரை வைக்கவும்.

தயாரிக்கும் முறை :
பின்னர் அடுப்பை அணைத்து நீர் ஆறிய பின் நெல்லிக்காயிலிருக்கும் விதைகளை நீக்கி அவற்றை மிக்ஸியில், அரைத்துக் கொள்ளுங்கள்.

தயாரிக்கும் முறை :
அரைத்த நெல்லிக்காயில் இப்போது உலர் திராட்சைகளையும் சேர்த்து அரையுங்கள். நன்றாக பேஸ்ட் போல் ஆனதும், அதனுடன் இஞ்சி தூளையும் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள். பின்னர் இதனை ஒரு சுத்தமன கன்டெய்னரில் எடுத்துக் கொள்ளுங்கள். மருந்து ரெடி.

எப்படி சாப்பிட வேண்டும்?
தினமும் மூன்று வேளைக்கு 5 கிராம் அளவு இந்த மருந்தை சாப்பிடுங்கள். இது சாப்பிடும்போது அதிக தாகம் எடுக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரை அருந்துங்கள்.

பலன் :
இது ஆஸ்துமா இருமல் மட்டுமல்லாது நுரையீரல் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து உங்களை காப்பாற்றும்.



Click it and Unblock the Notifications