Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
பலவித அற்புத நன்மைகளை கொண்டுள்ள ஒரே ஓர் மூலிகை எது தெரியுமா?
மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியை எப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் தெரியுமா?
மாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின் ராணியான துளசியை உட்கொள்வதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

தொண்டைப்புண் :
தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

தலைவலி :
தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

இதய நோய் :
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சிறுநீரக கற்கள் :
துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

பசி :
துளசி விதையில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான செயல்பாட்டை சீராக்கி, மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை போன்ற வயிற்று கோளாறு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதே போல அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்பசியை கட்டுப்படுத்திடும்.

வியர்வை நாற்றம் :
உடலில் வரும் வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முதல் நாளே சில துளசிகளை போட்டுவைத்திடுங்கள். மறுநாள் காலையில் அந்த நீரில் குளித்தால் வியர்வை நாற்றம் வராது.



Click it and Unblock the Notifications











