Latest Updates
-
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம்
பலவித அற்புத நன்மைகளை கொண்டுள்ள ஒரே ஓர் மூலிகை எது தெரியுமா?
மருத்துவ குணங்கள் நிறைந்த துளசியை எப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் தெரியுமா?
மாத்திரைகளை விட நம்மைச் சுற்றி கிடைக்கும் பொருட்களில் எக்கச்சக்கமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. ஆனால் அதனை யாருமே பயன்படுத்த முன்வருவதில்லை. மூலிகைகளின் ராணியான துளசியை உட்கொள்வதால் உடல் நலனுக்கு ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

தொண்டைப்புண் :
தொண்டைப் புண் இருக்கும் போது, துளசியை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரால் வாயை கொப்பளித்தால், தொண்டைப்புண் குணமாகும்.

தலைவலி :
தலை வலிக்கு துளசி மிகவும் சிறப்பான நிவாரணி. அதற்கு துளசியை அரைத்து, அதில் சந்தனப் பொடி சேர்த்து கலந்து, நெற்றியில் பற்று போட்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைப்பதோடு, உடல் சூடும் குறையும்.

இதய நோய் :
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

சிறுநீரக கற்கள் :
துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.

பசி :
துளசி விதையில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமான செயல்பாட்டை சீராக்கி, மலச்சிக்கல், வாய்வுத்தொல்லை போன்ற வயிற்று கோளாறு பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. அதே போல அடிக்கடி ஏற்படும் வயிற்றுப்பசியை கட்டுப்படுத்திடும்.

வியர்வை நாற்றம் :
உடலில் வரும் வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முதல் நாளே சில துளசிகளை போட்டுவைத்திடுங்கள். மறுநாள் காலையில் அந்த நீரில் குளித்தால் வியர்வை நாற்றம் வராது.



Click it and Unblock the Notifications