Just In
- 21 min ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 53 min ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 2 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 3 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Movies விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மகளிரின் நோய்களுக்கான அருமருந்து வில்வம்
வறண்ட மலைப்பிரதேசங்களிலும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படும் வில்வமரம், இந்துக்களில் சைவ சமயத்தவர்கள் புனிதமாக வழிபடுகின்றனர். சிவபூஜையில் வில்வ இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிவன் துதியில் “ ஏக வில்வம் சிவா அர்ப்பணம் " என கூறப்பட்டுள்ளது.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தின் பல முக்கிய வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. அமினோ அமிலங்கள், டிக்டஅமைன், மார்மெசின், மார்மின்,அம்பெல்பெரோன், மர்மிலோசின், ஏஜிலைன், ஆந்த்தோகயனின், ஃபிளேவன், குளுக்கோசைட்டுகள், பால்மிடிக் லினேலெயிக் ஒலியிக் அமிலங்களும் உள்ளன.
மனஉளைச்சல் நீக்கும் வில்வம்
இலைகள், பட்டை, வேர் மற்றும் கனிகள் மருத்துவப்பயன் உடையவையாகும். இலைகள் ஆஸ்துமா, காய்ச்சல் மற்றும் சளி போக்கும். பட்டை இதயத்துடிப்பு, விட்டுவிட்டு வரும் காய்ச்சல் மன உளைச்சல் ஆகியவற்றை தீர்க்கும்.
“தசமூல" என்னும் முக்கிய ஆயுர்வேத மருந்து தயாரிப்பில் வில்வ வேர் முக்கிய பங்காற்றுகிறது. இது பசியின்மை மற்றும் மகப்பேறுக்கு பின் ஏற்படும் நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.
அஜீரணம் போக்கும்
கனிகள் முக்கிய உறுப்பு ஆகும். உடல்நலம் தேற்றும். குளிர்ச்சி தரும். வைட்டமின் சி நிறைந்தது. ஊட்டம் தருவது. மலமிளக்கி, தொடர்ந்த மலச்சிக்கல், தொடர்ந்த வயிற்றுப்போக்கு, அஜீரணம், ஆகியவற்றினை தீர்க்கும். வலுவேற்றியாகவும் உதவுகிறது. காய் தசை இறுக்கும் தன்மை கொண்டது. விதைகள் மலமிளக்கி, மலர்கள் வயிற்றுப்போக்குக்கு எதிரானது. வாந்தியை நிறுத்துகின்றன.