Just In
- 26 min ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 1 hr ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 1 hr ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 2 hrs ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
Don't Miss
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- News ராஜ நடை போடும் காலம்.. சிங்கம் போல மாற போகும் சிம்மம்.. குரு பெயர்ச்சி பலன் என்ன தெரியுமா?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படுத்தும் விசித்திரமான அறிகுறிகள்!!!
முன்பெல்லாம் பெண்களுக்கெல்லாம் மாரடைப்பு எனும் நெஞ்சு வலி வருவது அரிதாகத் தான் இருந்தது. மேலும் ஆண்களுக்கு மட்டும் தான் நெஞ்சு வலி வரும் என்றும் கூறப்பட்டு வந்தது.
ஆனால், இந்தக் காலத்தில் ஆண்களைப் போலவே பெரும்பாலான பெண்களுக்கும் நெஞ்சு வலி வருவது சாதாரணமாகிவிட்டது. நெஞ்சு வலிதான் பெண்களைக் கொல்லும் முதல் எதிரி என்றும் கூறப்படுகிறது.
2012 இல் ரோஸி ஓ'டன்னல் என்ற பெண்ணுக்கு, மற்ற பெண்களுக்கு வருவதைப் போல "ஹாலிவுட் நெஞ்சு வலி" வரவில்லை. மாறாக, அவர் மார்பு மற்றும் கைகளில் வலி ஆகியவற்றுடன் வயிற்றுப்போக்கு மற்றும் தோல் ஈரமாவது ஆகியவற்றால் அவதிப்பட்டார்.
இங்கு அப்படி பெண்களுக்கு மாரடைப்பு வந்துள்ளது என்பதை வெளிப்படுத்தும் சில விசித்திரமான அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
மூச்சு விடுவதில் சிரமம்
நெஞ்சு வலியால் அவதிப்படும் பெண்களில் 42% பேர் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாம். இது எந்தக் காரணமும் இல்லாமல் திடீரென்று வரும். மேலும் ஆண்களை விட பெண்களுக்கு இந்த அறிகுறி அதிகம் என்று கூறப்படுகிறது.
மேல் உடம்பு வலி
பொதுவாகவே நெஞ்சு வலி வரும் போது உடம்பின் மேல் பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. கழுத்து, பல், தாடை, முதுகு, கைகள் (குறிப்பாக இடது கை) மற்றும் தோள்பட்டை ஆகியவற்றில் வலி ஏற்படும். நரம்புகள் மூலம் இவற்றுக்கு இதயத்துடன் இணைப்பு இருப்பதால், நெஞ்சு வலி வரும் போது இந்த பாகங்களிலும் வலி ஏற்படுகிறது.
வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி
இந்த அறிகுறிகள் ஆண்களை விட பெண்களுக்குத் தான் 2 மடங்கு அதிகம். நெஞ்சு வலி வரும் போது, இதயத்துக்குக் கீழ்ப்பகுதியில் இரத்த ஓட்டம் தடைபடுவதால் இந்த அறிகுறிகள் ஏற்படுகின்றன.
களைப்பு, தூக்கம்
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களில் பாதிப் பேருக்கு மேல் களைப்பு ஏற்படுகிறது. 515 பெண்களைப் பரிசோதித்ததில், அவர்களில் 70.7 சதவீதத்தினர் களைப்பால் அவதிப்பட்டனர். அதே போல், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்குத் தூக்கத்தில் பிரச்சனைகள் வந்தன.
ஃப்ளூ காய்ச்சல்
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களுக்கு ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளும் ஏற்படும். இதனால் அவர்களுக்குக் களைப்பும் வரும்.
குளிர் வியர்வை
பெண்களுக்கு மெனோபாஸ் வராத நேரத்தில் குளிர் வியர்வை ஏற்பட்டால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அது நெஞ்சு வலியின் அறிகுறியாக இருக்கலாம். எனவே அப்போது உடனே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவது அவசியம்.
மார்பில் அழுத்தம், வலி
நெஞ்சு வலிக்கு இவை பெரிய அறிகுறிகளாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் இவை கண்டிப்பாக ஏற்படும். இவை புதிதாக ஏற்பட்டால், நெஞ்சு வலி நிச்சயம் தான் என்று கூறலாம்.
லேசான தலை வலி, கிறுகிறுப்பு
பெண்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலிக்கு இவையும் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. இதயத்துக்குப் போகும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது இவை ஏற்படும். ஒரு ஆய்வில், நெஞ்சு வலி வந்த பெண்களில் 39% பேருக்கு இந்த அறிகுறிகள் இருந்தன. சிலருக்கு வலிப்பும் ஏற்பட்டதாம்.
தாடை வலி
நெஞ்சு வலி ஏற்படும் பெண்களுக்கு கூடவே தாடை வலியும் தொற்றிக் கொள்ளுமாம். இதயத்திலிருந்து செல்லும் சில நரம்புகளுடன் தாடைக்குத் தொடர்பு இருப்பதால் இது ஏற்படும். தாடை வலி தொடர்ந்து இருந்தால், அது பல்வலி தொடர்பான பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் இவ்வலி விட்டுவிட்டு வந்தால், நெஞ்சு வலி இருக்கக்கூடும்.
எரிச்சல்
நெஞ்சு எரிச்சல், கனமாக இருத்தல், அழுத்தமாக இருத்தல், இறுக்கமாக இருத்தல், பிழிவது போல இருத்தல் ஆகியவையும் நெஞ்சு வலிக்கான அறிகுறிகள் தான். இவை திடீரென்று வராது; தீவிரமாகவும் இருக்காது. சில வாரங்களுக்கு இருக்கும்; சில வாரங்களுக்கு இருக்காது. இந்த அறிகுறிகளுடன் கூடவே வயிற்றுப் போக்கும் இருந்தால், டாக்டரிடம் காண்பிப்பது நலம்.