Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
வெறும் காலில் நடப்பதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? இந்த விஷயம் தெரிஞ்சா இனிமே ஷூ போடவே மாட்டீங்க...!
நடக்கும்போது அல்லது ஓடும் போது காலணிகள் அல்லது ஷூக்கள் அணிந்து செல்வதுதான் உலகம் முழுக்க மக்களின் வழக்கமாக இருக்கிறது. உண்மையில் வசதியாக நடப்பதற்காக ஷூக்களுக்கு அதிக பணத்தை செலவழிக்கும் வழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் வெறும் காலில் நடப்பதில் இருக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியாது என்பதே உண்மை.
வெறும் காலில் நடப்பது 'எர்திங்' அல்லது 'கிரவுண்டிங்' என்றும் அழைக்கப்படுகிறது, வெறுங்காலுடன் நடப்பது நமது சருமத்தை பூமியுடன் நெருங்கிய தொடர்பில் வைக்கிறது. இதன்மூலம் பூமியின் எதிர்மறை அயனிகள் நம் உடலின் நேர்மறை அயனிகளை சமநிலைப்படுத்த உதவுகின்றன, இது பல்வேறு வழிகளில் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

தினமும் கொஞ்ச நேரமாவது வெறும் காலில் நடப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். வெறும் காலில் நடப்பது உங்களுக்கு என்னென்ன நன்மைகளை அளிக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது
மன அழுத்தம் இன்றைய இளைஞர்களிடம் பரவலாக காணப்படும் ஒரு பிரச்சினையாகும் மற்றும் இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்று அறியப்படுகிறது. இந்த சூழலில் உங்கள் உடலில் உள்ள அழுத்த அளவைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம். வெறுங்காலுடன் நடப்பது இதற்கான ஒரு எளிய வழி. இது உங்கள் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்கவும், உங்கள் மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
நல்ல தூக்கத்தை வழங்குகிறது
நாம் வெறும் காலில் நடக்கும்போது, நமது உடல் நேர்மறை அயனிகளை அகற்றி, எதிர்மறை அயனிகளை நம் உடலில் நுழைய அனுமதிக்கிறது. எதிர்மறை அயனிகள் இயற்கையான மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் அவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகின்றன. எனவே அடுத்த முறை நீங்கள் வெறுங்காலுடன் நடக்கும்போது நிச்சயமாக நல்ல தூக்கத்தைப் பெறுவீர்கள்.
மூளை ஆற்றலை அதிகரிக்கும்
தற்காப்புக் கலைகள் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் ஏன் வெறுங்காலுடன் செய்யப்படுகின்றன என்பது பலருக்குத் தெரியாது. நமது உடல் 70 சதவிகிதம் தண்ணீரைக் கொண்டுள்ளது, மேலும் நாம் எந்த அளவுக்கு பூமியுடன் இணைந்து இருக்கிறோமோ, அவ்வளவு சரியாகச் செயல்படுகிறது. வெறுங்காலுடன் நடப்பது ஒரு அயனி சமநிலையை உருவாக்குகிறது, இது நம் மனதை கூர்மைப்படுத்துகிறது மற்றும் மன உறுதியை வழங்குகிறது.
புலன்களைத் தூண்டுகிறது
இயற்கையான உணர்வுகள் நமது புலன்களை வலிமையாக்குகிறது. நம் காலணிகளால் இந்த இயற்கை அனுபவங்களை நாம் அறியாமல் இருக்கிறோம். நம் காலில் உள்ள சில புள்ளிகள் தரையைத் தொடும் போது, நம் புலன்களைத் தூண்டுகிறது. மேலும், வெறுங்காலுடன் நடக்கும்போது, நாம் எங்கு நடக்கிறோம் என்பதைப் பார்க்க அதிக விழிப்புணர்வோடு விழிப்புடன் இருக்கிறோம். இது நம் மனதை எச்சரித்து, புலன்களை அதிகரிக்கிறது.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
ஈர்ப்பு விசை அனைத்தையும் தன்னை நோக்கி இழுக்கும்போது, நமது இரத்தம் நமது உள்ளங்கால்களில் நன்றாகப் பரவத் தொடங்குகிறது. நமது நடைப்பயிற்சி செயல்முறை எதிர்விளைவாக செயல்படுகிறது, உடலின் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
இதயத்தை பாதுகாக்கிறது
நமது இரத்த ஓட்டம் சிறப்பாக இருந்தால், இரத்தம் உறைதல் மற்றும் கரோனரி தமனி நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. வெறுங்காலுடன் நடப்பது இரத்த சிவப்பணுக்களை சார்ஜ் செய்து நமது இரத்தம் கெட்டியாகாமல் தடுக்கிறது.
தசைகளை பலப்படுத்துகிறது
வெறும் காலுடன் நடப்பது நமது எலும்புகள் மற்றும் தசைகளை வலிமையாக்குகிறது. வெறுங்காலுடன் வெயிலில் நடப்பது எலும்பு கால்சியத்தையும் மேம்படுத்துகிறது, ஆனால் சூரியக் கதிர்கள் தீங்கு விளைவிக்காத காலை அல்லது மாலை வேளையில் நடைபயிற்சி செய்யுங்கள்.
கண்பார்வையை பலப்படுத்துகிறது
பல நேரங்களில் மருத்துவர்கள் தங்கள் கண் நோயாளிகளை அதிகாலையில் வெறுங்காலுடன் புல் மீது நடக்க பரிந்துரைக்கின்றனர். இது நம் கால்களில் பல்வேறு அழுத்த புள்ளிகளை செயல்படுத்துகிறது, இது நம் கண்பார்வை அதிகரிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


