இந்த பழங்களை காலை உணவில் தெரியாம கூட சேர்த்துக்காதீங்க... இல்லனா நிறைய பிரச்சினைகளை சந்திப்பீங்க!

பழங்கள் ஆரோக்கியமானவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஒவ்வொரு பழத்திலும் நம் உடலுக்குத் தேவையான ஏதாவது ஒரு ஊட்டச்சத்து இருக்கும். ஆனால் அதனை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அதன் ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.

காலை உணவு என்பது அந்த நாள் முழுவதும் வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றலை அளிக்கும். எனவே அந்த உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். சிலர் காலை உணவாக பழங்களை மட்டும் எடுத்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை பரவலாக இருந்தாலும், இது முற்றிலும் தவறான நம்பிக்கையாகும்.

Fruits That You Should Never Have For Breakfast in Tamil

சில பழங்களை காலை உணவாக சாப்பிடுவது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் அவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த பதிவில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத பழங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பப்பாளி
பப்பாளியில் புரதங்களை உடைக்க உதவும் பாப்பைன் என்ற நொதி உள்ளது. காலை உணவாக வெறும் வயிற்றில் அதனை உட்கொள்ளும் போது, பாப்பைன் எரிச்சலை ஏற்படுத்துவதோடு வயிற்றின் புறணியையும் சேதப்படுத்தும். செரிமான பிரச்சனைகளை தவிர்க்க பப்பாளியை சாப்பிட்ட பிறகு சாப்பிடுவது நல்லது.

அன்னாசி
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது மற்றும் இது செரிமானத்திற்கு சிறந்த பழமாக இருக்கிறது. இருப்பினும், இதில் ப்ரோமிலைன் உள்ளது, இது வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். ப்ரோமைலைன் வயிற்றின் புறணியை எரிச்சலடையச் செய்து அஜீரணம், வீக்கம் மற்றும் வாயுப்பிரச்சினையை உண்டாக்கும்.

மாம்பழம்
மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இதனை வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். வெறும் வயிற்றில் மாம்பழம் சாப்பிடுவது வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்க உணவுக்குப் பிறகு மாம்பழம் சாப்பிடுவது நல்லது.

ஆரஞ்சு
ஆரஞ்சுப் பழத்தில் அதிக அமிலம் உள்ளது மற்றும் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். ஆரஞ்சுப் பழத்தில் உள்ள அமிலம், வயிற்றின் உட்பகுதியை எரிச்சலடையச் செய்து, அஜீரணம், நெஞ்செரிச்சல், மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் போன்றவற்றை உண்டாக்கும்.

திராட்சை
திராட்சையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சர்க்கரை அதிகம் உள்ளது மற்றும் வெறும் வயிற்றில் அதனை உட்கொள்ளும் போது மோசமான செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். திராட்சையில் உள்ள சர்க்கரை, இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, அசௌகரியம் மற்றும் வயிற்று உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பேரிக்காய்
பேரிக்காய்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது, இதனை காலை உணவாக உட்கொள்ளும் போது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக நார்ச்சத்து, வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும், உணவுக்குப் பிறகு பேரிக்காய் சாப்பிடுவது சிறந்தது.

வாழைப்பழம்
காலை உணவாக வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்தத்தில் மெக்னீசியத்தின் அளவை அதிகரிக்கிறது. , இது உங்கள் இதயத்திற்கு நல்லதல்ல. வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரையும் அதிகமாக உள்ளது, சராசரியாக வாழைப்பழத்தில் 25% சர்க்கரையாக இருப்பதால், உங்களுக்கு உடனடி உற்சாகத்தைக் கொடுக்கும், ஆனால் சிறிது நேரத்தில் உங்களை சோர்வாக்கிவிடும். மேலும் இதிலுள்ள அமிலத்தன்மை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பழச்சாறுகள்
அன்றைய நாளை உற்சாகமாக தொடங்குவதற்கு பழச்சாறுகள் சிறந்த தேர்வாக இருக்கலாம். இருப்பினும், வெறும் வயிற்றில், பழச்சாறு கணையத்தில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். மேலும் பழங்களில் உள்ள பிரக்டோஸ் வடிவில் உள்ள சர்க்கரை உங்கள் கல்லீரலை எதிர்மறையாக பாதிக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Wednesday, May 17, 2023, 16:30 [IST]
Desktop Bottom Promotion