Just In
- 3 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 5 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 5 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 6 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உங்க சமையலறையில இருக்கற இந்த பொருட்கள் உங்க உயிருக்கே உலை வைக்குமாம் தெரியுமா?
நமது ஆரோக்கியம் ஒளிந்திருக்கும் இடமென்றால் அது நமது சமையலறைதான். எவ்வளவுதான் சுவையான உணவுகளை உணவகங்களில் சாப்பிட்டாலும் வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவு போல ஆரோக்கியமானதாக இருக்காது.
மனிதர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையே ஆரோக்கியமான உணவுகள்தான். கிடைத்ததை உண்ணாமல் தனக்குத் தேவையானதை ஆராய்ந்து பிடித்தவற்றை மட்டும் சாப்பிடும் பூமியின் வெகுசில உயிரினங்களில் மனிதர்களும் ஒருவராவார். ஆனால் பிடித்தவை என நாம் சாப்பிடும் பெரும்பாலான விஷயங்கள் நமக்கு ஆபத்தைத்தான் ஏற்படுத்துகின்றன.
நமது ஆரோக்கியம் ஒளிந்திருக்கும் இடமென்றால் அது நமது சமையலறைதான். எவ்வளவுதான் சுவையான உணவுகளை உணவகங்களில் சாப்பிட்டாலும் வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவு போல ஆரோக்கியமானதாக இருக்காது. ஆனால் இதில் துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால் நமது சமையலறையில் இருக்கும் சில பொருட்கள் நமது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதில் சில ஆரோக்கியமான பொருட்களும் இருப்பதுதான் கூடுதல் அதிர்ச்சி. இந்த பதிவில் சமையலறையில் இருக்கும் என்னென்ன உணவுகள் ஆபத்தானவை என்று பார்க்கலாம்.
பழ விதைகள்
ஆப்பிள் மற்றும் செர்ரி பழங்களின் விதைகளிலும் ப்ருசிக் அமிலம் எனப்படும் ஒரு வகை ஹைட்ரஜன் சயனைடு உள்ளது. இந்த பழங்களின் விதைகளை சாப்பிட்டால் வாந்தி, மயக்கம், தலைசுற்றல், சிறுநீரக செயலிழப்பு, சிலசமயம் மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.
ருபார்ப் இலைகள்
ருபார்ப் இலைகளில் ஆக்ஸாலிக் அமிலம் உள்ளது, இது சிறுநீரக கற்களை ஏற்படுத்துகிறது. இந்த இலைகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்வது மூச்சு விடுவதில் சிரமம், பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். 11 பவுண்டுகளுக்கு மேல் இந்த இலைகளை எடுத்துக் கொள்வது மரணத்தைக் கூட ஏற்படுத்தலாம்.
ஜாதிக்காய்
ஜாதிக்காயை உணவின் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படும் ஒரு பொருளாகும். ஆனால் உண்மையில் இது உங்களுக்கு சில மாயத்தோற்றங்களை உருவாக்கக்கூடும். ஜாதிக்காயை 0.2 அவுன்ஸ் சேர்த்துக் கொள்வது மனஉளைச்சலை ஏற்படுத்தும். 0.3 அவுன்ஸ் எடுத்துக்கொள்வது வலிப்பைக் கூட ஏற்ப்டுடும். ஜாதிக்காயை முழுதாக சாப்பிடுவது மனநோயையே ஏற்படுத்தும். இது வரவிருக்கும் அழிவின் உணர்வை உள்ளடக்கியது.
MOST READ:இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள் பற்றிய இந்த சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்குத் தெரியுமா?
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கின் தண்டு மற்றும் இலைகளில் கிளைகோல்கலாய்டு என்னும் நச்சுப்பொருள் உள்ளது. இது பச்சையான மற்றும் முளைவிட்ட உருளைக்கிழங்கிலும் காணப்படுகிறது. உருளைக்கிழங்கை நீண்டகாலம் வைத்திருப்பதும், அதிக வெளிச்சத்தில் வைத்திருப்பதும் அதனை நச்சுத்தன்மை உடையதாக மாற்றும். கிளைகோல்கலாய்டுகளை சாப்பிடுவது தசைப்பிடிப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி,கோமா மற்றும் இறப்புக்கு வழிவகுக்கும். பச்சை நிறத்தில் இருக்கும் உருளைக்கிழங்கை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.
பாதாம்
பாதாமில் இனிப்பு மற்றும் கசப்பு என இருவகை பாதாம் உள்ளது. இதில் கசப்பான பாதாமில் ஒப்பீட்டளவில் பெரிய அளவிலான ஹைட்ரஜன் சயனைடு இருப்பதாகக் கூறப்படுகிறது. வெறும் 7 - 10 மூல கசப்பான பாதாம் சாப்பிடுவது கூட வயதானவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கும் இதனால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பாதாமில் இனிப்பு மற்றும் கசப்பு என இருவகை பாதாம் உள்ளது. இதில் கசப்பான பாதாமில் ஒப்பீட்டளவில் பெரிய அளவிலான ஹைட்ரஜன் சயனைடு இருப்பதாகக் கூறப்படுகிறது. வெறும் 7 - 10 மூல கசப்பான பாதாம் சாப்பிடுவது கூட வயதானவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கும் இதனால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தீங்கு விளைவிக்கும் நச்சுக்கள் நீக்கப்படும் பதப்படுத்தும் செயல்முறை செய்யப்படாத கலப்படமில்லாத தேனில் பெரும்பாலும் கிரயனோடாக்சின் உள்ளது. இது தலைச்சுற்றல், பலவீனம், அதிகப்படியான வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒரு கரண்டி கிரயனோடாக்சின் எடுத்துக் கொள்வது இந்த விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு மேல் எடுத்துக் கொள்வது அதைவிட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தக்காளி
தக்காளியின் தண்டுகள் மற்றும் இலைகளில் ஆல்காலி விஷங்கள் உள்ளன, அவை வயிற்று கிளர்ச்சியை ஏற்படுத்தும். பழுக்காத பச்சை தக்காளி அதே விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது அபாயகரமானதாக இருக்க நீங்கள் அதிக அளவு உட்கொள்ள வேண்டும். இதனால் அதிக ஆபத்துக்கள் இல்லை என்றாலும் தக்காளி இலைகள் மற்றும் பச்சை தக்காளியை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
டூனா மீன்
டூனா மீனில் இருக்கும் ஒரு ஆபத்து அதில் இருக்கும் பாதரசமாகும். அதிகளவு பாதரசம் உங்கள் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் மூளைக்குச் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தும். FDA ஆய்வின் படி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் டூனா மீன்களை எடுத்துக்கொள்வதை அறவே தவிர்ப்பது நல்லது. டூனா சாப்பிடுவது உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்றாலும் பாதிப்புகளை தவிர்க்க அதிகளவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
மரவள்ளி கிழங்கு
மரவள்ளிக்கிழங்கின் இலைகள் மற்றும் வேர்கள் வியக்கத்தக்க வகையில் சயனைடு நிறைந்தவை. கசாவா என்பது வெப்பமண்டல காய்கறியாகும், இது முதலில் தென் அமெரிக்காவிலிருந்து வந்தது, ஆனால் ஆப்பிரிக்காவில் பிரபலமடைந்துள்ளது, குறிப்பாக அதன் சாறுக்காக, இது பிவாரி எனப்படும் ஒரு பானத்தை தயாரிக்க புளிக்க வைக்கப்படுகிறது. இது நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
முந்திரி
கடைகளில் நாம் பார்க்கக்கூடிய பச்சை முந்திரிகள் உண்மையில் பச்சையான முந்திரி அல்ல, ஏனெனில் ஏனெனில் அவை விஷம் ஐவியில் காணப்படும் யூருஷியோல் என்ற வேதிப்பொருளை அகற்றுவதற்காக வேகவைக்கப்பட்டுள்ளன. இந்த ரசாயனம் விஷ ஐவி அல்லது விஷ ஓக் போன்ற பல பக்கவிளைவை ஏற்படுத்தும். அதிக அளவு யூருஷியோல் அபாயகரமானதாக இருக்கலாம். விஷ ஐவிக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் பச்சை முந்திரி சாப்பிடுவதால் ஆபத்தான ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது.