Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
காலை உணவை தவிர்த்தால் இந்த நோயெல்லாம் உங்களுக்கு வரக்கூடும்!! ஜாக்கிரதை!!
காலை உணவை தவிர்ப்பதால் உண்டாகும் பாதிப்புகளையும். எவ்வாறு காலை உணவு இருக்க வேண்டும் என்ரும் இங்கே தரப்பட்டுள்ளது.
காலையில் அரசனை போல் சாப்பிடு. மதியம் மதிரியை போல் சாப்பிடு. இரவில் பிச்சைக்காரனை போல் சாப்பிடு என்ற சொல்வழக்கு நமது ஊரில் உண்டு. மிகச் சரியான வார்த்தை. காலையில் தாரளமாகவும் இரவில் சுருக்கியும் எவர் ஒருவர் சாப்பிடுகிறாரோ அவர் நீண்ட ஆயுளை பெறுவர்கள்.

ஆனால் நாம் அரக்கப்பரக்க வேலை, பள்ளிக்கு போகும் முன் கொரித்துவிட்டு போகிறோம். இதனால் பலப்பலப்பிரச்சனைகள் உண்டாகின்றன.காலை உணவி தவிர்ப்பதால் உண்டாகு ஒய்ன் விளியவுகளையும், எபப்டி சாப்பிட வேண்டும் என்ரும் இங்கே கூறியிருக்கிறோம். படித்து பயன்பெறுங்கள்.

ஏன் காலை உணவை தவிர்க்கக் கூடாது?
ஒரு நாளை நாம் துவங்குவற்கு முன் முழு ஆற்றலோடு துவங்க வேண்டும். அதற்கு காலை உணவு மிக முக்கியமான ஒன்று. காலை உணவை நாம் தவிப்பது ஒரு பெரியத் தவறாகும்.
ஏனென்றால், இரவு நாம் தூங்கும் போது நாம் சாப்பிட்ட உணவிற்கும் காலை சாப்பிடும் உணவிற்கும் உள்ள இடைவேளை 12 மணி நேரம் ஆகும். சராசரியாக நாம் உண்ணும் உணவு செரிக்க குறைந்தது 4 மணி நேரம் தான் ஆகும்.
ஆனால், இரவு உணவிற்கு பிறகு 12 மணி நேரம் இடைவேளை இருப்பதால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைவாக இருக்கும்.

பின்விளைவுகள் :
காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன் உண்டாகும். அல்சர், அசிடிட்டி,. குடல் அழற்சி ஆகியவை முக்கியமாக உருவாவதற்கு காலை உணவை தவிர்த்தலே முக்கிய காரணம்.

மன அழுத்தம் :
எனவே, காலை உணவில் ஒவ்வொருவரும் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஆனால், பொதுவாக அனைவரும் காலை வேளையில் சாப்பிடாமலோ அல்லது மிகக் குறைவான உணவினையோ தான் எடுத்துக் கொள்கின்றனர்.
இது உடலுக்கு நல்லதல்ல. காலையில் சாப்பிடாமல் இருப்பதால் உடலில் சர்க்கரையின் அளவானது குறையக்கூடும், உடல் எடை அதிகரிக்கக் கூடும் அல்லது மன அழுத்தத்தை ஏற்படத்தக்கூடும்.

காலையில் சேர்க்கவெண்டியவை :
சராசரியாக ஒரு மனிதன் காலை வேளையில் 60% தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, ஓட்ஸ், அவல், ரவா உப்புமா, கொதுமையினால் செய்த உணவுகள், உருளைக் கிழங்கு, முட்டைக் கோஸ் அல்லது வெந்தயம். இது போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.

காலை உணவு எப்படி இருக்கவேண்டும்?
இந்த உணவுகளுடன் ஒரு டம்ளர் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிக்க வேண்டும். இது கால்சியத்திற்கு மிக முக்கியம். சிலர் பழங்களை காலை உணவில் சேர்த்துக் கொள்வர்.
அதுவும் நல்லது தான். ஆனால், பழங்கள் மற்றும் பாலை மட்டும் காலை உணவாக சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. காலை உணவில் அனைத்து சத்துக்களையும் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவேண்டியது மிக அவசியம்.



Click it and Unblock the Notifications











