Latest Updates
-
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
அரசியல்வாதிகள் ஏன் எப்போதும் வெள்ளை சட்டை மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
இந்த 4 உணவுகளையும் மீந்து போனா சாப்பிடவே கூடாது!! ஏன் ?
மீந்து போன மற்றும் நெடு நாட்கள் வைத்து சாப்பிடும் உணவுகள் நமது உடல் நலத்திற்கு கேட் விளைவிப்பவை. அவ்ற்றைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.
நாம் உணவுகளை வீணடிக்கக் கூடாது என பலவற்றை பல நாட்களாக வைத்து சாப்பிடுகிறோம். அது மிகவும் உடலுக்கு நச்சை விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

சில உணவுப் பொருட்களை அதிக நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கக் கூடாது. சில வகை உணவுகளை மீந்து போய் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் என்னாகும்? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காய்கறிகள் :
நாம் நிறைய காய்கறிகளை வாங்கி வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்போம். ஆனால் சில வகை காய்களுக்கு நச்சை உற்பத்தி செய்யும் பண்பு இருகிறது. பீட்ரூட், பசலைக் கீரையை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை நைட்ரேட்டை உற்பத்தி செய்யும்.
இதனால் அவை காய்களிலேயே தங்கி அதனை சாப்பிடும்போது உடலில் நைட்ரேட் நச்சை அதிகப்படியாக உண்டாக்கி செல்களை சிதைக்கும். ஆகவே இந்த காய்கறிகளை அதிக நாட்கள் வைத்திருக்கக் கூடாது.

சிக்கன் :
சிக்கனில் அதிக புரதம் உள்ளது. இதனை 2 நாட்களுக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. குறிப்பாக திரும்ப சுட வைத்து சாப்பிடுவது நல்லதல்ல. இதய நோய்கள், கல்லீரல் பிரச்சனை ஆகியவ்ற்றை கொண்டு தரும்.

அரிசி :
அரிசியை சமைத்தாலும் தீய பேக்டீரியாக்கள் அரிசியில் பெருக அதிக வாய்ப்புண்டு. அதனை திரும்ப சுட வைத்தாலும் உயிரோடே இருக்கும். இவை இரட்டிப்பாகி பல்வேறு ஜீரண சம்பந்த நோய்களை உண்டாக்கும்.
ஆகவே அரிசியை ஒரு முறைதான் சமைக்க வேண்டும். திரும்ப சுட வைக்கக் கூடாது, வேண்டுமானால் மீந்த அரிசி உணவில் நீர் ஊற்றி சாப்பிடுவதால் நேர்மறை நன்மைகளை தரும்.

வெஜிடேபிள் எண்ணெய் :
சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மக்காசோள என்ணெய் ஆகியவ்ற்றை திரும்ப சூடு வைப்பது போல் தீயது வேறெதுவுமில்லை.
அவற்றிலுள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் லினோலியிக் அமிலமாக மாறி இதய நோய்கள், பக்க வாதம் மற்று புற்று நோய்களை தருகிறது. ஆகவே திரும்ப திரும்ப ஒரே எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது.



Click it and Unblock the Notifications











