Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
இந்த 4 உணவுகளையும் மீந்து போனா சாப்பிடவே கூடாது!! ஏன் ?
மீந்து போன மற்றும் நெடு நாட்கள் வைத்து சாப்பிடும் உணவுகள் நமது உடல் நலத்திற்கு கேட் விளைவிப்பவை. அவ்ற்றைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.
நாம் உணவுகளை வீணடிக்கக் கூடாது என பலவற்றை பல நாட்களாக வைத்து சாப்பிடுகிறோம். அது மிகவும் உடலுக்கு நச்சை விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

சில உணவுப் பொருட்களை அதிக நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கக் கூடாது. சில வகை உணவுகளை மீந்து போய் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் என்னாகும்? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காய்கறிகள் :
நாம் நிறைய காய்கறிகளை வாங்கி வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்போம். ஆனால் சில வகை காய்களுக்கு நச்சை உற்பத்தி செய்யும் பண்பு இருகிறது. பீட்ரூட், பசலைக் கீரையை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை நைட்ரேட்டை உற்பத்தி செய்யும்.
இதனால் அவை காய்களிலேயே தங்கி அதனை சாப்பிடும்போது உடலில் நைட்ரேட் நச்சை அதிகப்படியாக உண்டாக்கி செல்களை சிதைக்கும். ஆகவே இந்த காய்கறிகளை அதிக நாட்கள் வைத்திருக்கக் கூடாது.

சிக்கன் :
சிக்கனில் அதிக புரதம் உள்ளது. இதனை 2 நாட்களுக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. குறிப்பாக திரும்ப சுட வைத்து சாப்பிடுவது நல்லதல்ல. இதய நோய்கள், கல்லீரல் பிரச்சனை ஆகியவ்ற்றை கொண்டு தரும்.

அரிசி :
அரிசியை சமைத்தாலும் தீய பேக்டீரியாக்கள் அரிசியில் பெருக அதிக வாய்ப்புண்டு. அதனை திரும்ப சுட வைத்தாலும் உயிரோடே இருக்கும். இவை இரட்டிப்பாகி பல்வேறு ஜீரண சம்பந்த நோய்களை உண்டாக்கும்.
ஆகவே அரிசியை ஒரு முறைதான் சமைக்க வேண்டும். திரும்ப சுட வைக்கக் கூடாது, வேண்டுமானால் மீந்த அரிசி உணவில் நீர் ஊற்றி சாப்பிடுவதால் நேர்மறை நன்மைகளை தரும்.

வெஜிடேபிள் எண்ணெய் :
சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மக்காசோள என்ணெய் ஆகியவ்ற்றை திரும்ப சூடு வைப்பது போல் தீயது வேறெதுவுமில்லை.
அவற்றிலுள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் லினோலியிக் அமிலமாக மாறி இதய நோய்கள், பக்க வாதம் மற்று புற்று நோய்களை தருகிறது. ஆகவே திரும்ப திரும்ப ஒரே எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது.



Click it and Unblock the Notifications