Latest Updates
-
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்!
இந்த 4 உணவுகளையும் மீந்து போனா சாப்பிடவே கூடாது!! ஏன் ?
மீந்து போன மற்றும் நெடு நாட்கள் வைத்து சாப்பிடும் உணவுகள் நமது உடல் நலத்திற்கு கேட் விளைவிப்பவை. அவ்ற்றைப் பற்றி விரிவாக இங்கு காண்போம்.
நாம் உணவுகளை வீணடிக்கக் கூடாது என பலவற்றை பல நாட்களாக வைத்து சாப்பிடுகிறோம். அது மிகவும் உடலுக்கு நச்சை விளைவிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

சில உணவுப் பொருட்களை அதிக நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்திருக்கக் கூடாது. சில வகை உணவுகளை மீந்து போய் சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் என்னாகும்? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காய்கறிகள் :
நாம் நிறைய காய்கறிகளை வாங்கி வாரக்கணக்கில் ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்போம். ஆனால் சில வகை காய்களுக்கு நச்சை உற்பத்தி செய்யும் பண்பு இருகிறது. பீட்ரூட், பசலைக் கீரையை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை நைட்ரேட்டை உற்பத்தி செய்யும்.
இதனால் அவை காய்களிலேயே தங்கி அதனை சாப்பிடும்போது உடலில் நைட்ரேட் நச்சை அதிகப்படியாக உண்டாக்கி செல்களை சிதைக்கும். ஆகவே இந்த காய்கறிகளை அதிக நாட்கள் வைத்திருக்கக் கூடாது.

சிக்கன் :
சிக்கனில் அதிக புரதம் உள்ளது. இதனை 2 நாட்களுக்கு மேல் உபயோகிக்கக் கூடாது. குறிப்பாக திரும்ப சுட வைத்து சாப்பிடுவது நல்லதல்ல. இதய நோய்கள், கல்லீரல் பிரச்சனை ஆகியவ்ற்றை கொண்டு தரும்.

அரிசி :
அரிசியை சமைத்தாலும் தீய பேக்டீரியாக்கள் அரிசியில் பெருக அதிக வாய்ப்புண்டு. அதனை திரும்ப சுட வைத்தாலும் உயிரோடே இருக்கும். இவை இரட்டிப்பாகி பல்வேறு ஜீரண சம்பந்த நோய்களை உண்டாக்கும்.
ஆகவே அரிசியை ஒரு முறைதான் சமைக்க வேண்டும். திரும்ப சுட வைக்கக் கூடாது, வேண்டுமானால் மீந்த அரிசி உணவில் நீர் ஊற்றி சாப்பிடுவதால் நேர்மறை நன்மைகளை தரும்.

வெஜிடேபிள் எண்ணெய் :
சூரிய காந்தி எண்ணெய் மற்றும் மக்காசோள என்ணெய் ஆகியவ்ற்றை திரும்ப சூடு வைப்பது போல் தீயது வேறெதுவுமில்லை.
அவற்றிலுள்ள நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் லினோலியிக் அமிலமாக மாறி இதய நோய்கள், பக்க வாதம் மற்று புற்று நோய்களை தருகிறது. ஆகவே திரும்ப திரும்ப ஒரே எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது.



Click it and Unblock the Notifications