Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
நொறுக்கு தீனிகளை சாப்பிடாமல் எப்படி கட்டுபடுத்தலாம்?
டயட்டில் இருப்பவர்கள் சரியான மணிக்கு எழுந்து சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, நன்றாக தொப்பலாக நனையும்படி ஜிம்மில் உடற்ப்யிற்சி செய்வார்கள். எல்லாம் சரிதான். ஆனால் நொறுக்கி தீனிகள் திண்பதில் ஒட்டு மொத்த கட்டுகோப்பையும் கோட்டை விட்டுவிடுவார்கள்.

உடற்பயிற்சி செய்வதால் அதிக பசி என்று அவர்களாகவே நினைத்து நொறுக்குக் தீனிகளை தேடிப்போவார்கள். இதனால் உடல் எடை குறைய வாய்ப்பேயில்லை. எத்தனை மாதங்கள் ஆனாலும் உடல் குறையாமல் பின்னர் ஜிம்மிற்கு போவதை விட்டுவிடுவார்கள். ஆனால் நொறுக்குத் தீனியை தொடர்வார்கள்.
என்ன செய்தாலும் இப்படி சாப்பிடுவதை கட்டுப்படுத்தமுடியவில்லை என கவலைபடுகிறீர்களா? அப்படியென்றால் இங்கே குறிப்பிடும் டிப்ஸ்களை முயன்று பாருங்கள்.
நீர் :
உங்களுக்கு தெரியுமா? நேரம் கெட்ட வேளையில் உங்களுக்கு பசி எடுத்தால் நீங்கள் போதிய அளவு நீர் குடிக்கவில்லையென அர்த்தம். ஆகவே தினமும் நிறைய நீர் குடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதனால் எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிடும் ஆசை வராது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மென்று சாப்பிட வேண்டும் :
நிறைய பேர் அவசர கதியில் மெல்லாமல் முழுங்கி விடுவார்கள். இதனால் போதிய அளவு வயிற்றிற்கு தராமலேயே உணவு அடைத்துவிடும். இதனால் குறைந்த அளவே உண்பீர்கள் வேகமாய் பசி எடுக்கும். ஆகவே மெல்ல மென்று சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஜீரணமும் நன்றாக நடக்கும். மேலும் துண்டாக்கிய கேரட், வெள்ளரி ஆகியவை மெல்ல மென்றுதான் உண்ண வேண்டும். ஆகவே இந்த மாதிரியான காய்களை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்வதற்கு முன் :
நீங்கள் மாலையில் உடற்ப்யிற்சி செய்பவர்களென்றால், சீக்கிரமே மதிய உணவை உண்ண வேண்டாம். சற்று காலம் தாழ்த்தி 2 மணிக்கு மேல் உண்ணுங்கள். இதனால் பசி எடுக்காது. அப்படியும் பசி உண்டானால் நட்ஸ் வகைகளையும் பழங்களையும் சாப்பிடுங்கள். இவை வயிற்றை நிறைக்கும். உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யாது.
மகிழ்ச்சியான நிலையில் தக்க வைத்துக் கொள்ளுங்கள் :
சாப்பிடும்போது உள்ள உங்கள் மன நிலை நீங்கள் சாப்பிடும் அளவை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. சாப்பிடும்போது கோபமாகவோ வெறுப்பாகவோ சாப்பிட்டால் அது உடலில் ஒட்டாது. நீங்கள் சாப்பிட்டது போலவே உணர மாட்டீர்கள்.
ஆகவே எது எப்படியென்றாலும் சாப்பிடும் நேரத்தில் மகிழ்ச்சியான சூழ் நிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். இனிமையான இசையை கேட்டுக் கொண்டே சாப்பிடலாம். அல்லது மகிழ்ச்சியாக உங்கள் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்தபடி சாப்பிடுங்கள். வயிறும் மனதும் நிறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



