Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
வயிறு உப்புசம் ஏற்படுவது எதனால் ? எப்படி தடுக்கலாம்?
நிறைய கர்ப்பிணிகள் மற்றும் குண்டானவர்களுக்கு பல சமயங்களில் வயிற்றில் காற்று அடைத்த பலூன் போல் இருக்கும். வயிறை இறுகி பிடித்தார்போல் அவதிப்படுவார்கள். இதற்கு காரணங்கள் பல உண்டு.
எல்லாருக்கும் ஒரே மாதிரியான காரணங்களால் வயிறு உப்புதல் ஏற்படுவதில்லை, மனிதருக்கு மனிதர் இது வித்யாசப்படும்.

அதிக அளவு சாப்பிடுவதால் உண்டாகும். ஒரு வேளை உணவிற்கும், மற்றொரு வேளை உணவிற்கும் இடையே அதிக இடைவெளி இருந்தால் இந்த மாதிரி ஏற்படும்.
அது தவிர அதிகமான கொழுப்பு, மசாலா உணவுகள் சாப்பிட்டாலும் வாயு அடைத்துக் கொள்ளும்.
நீர் குறைவாக எடுத்துக் கொள்ளும்போது, அல்லது அதிக நீரிழப்பு உணாகும்போது வயிறு உப்புசம் உண்டாகும்.
எந்த உணவு எந்த பருவ காலத்தில் :
பருவ காலத்திற்கு தகுந்தாற்போல் சாப்பிட வேண்டும். குளிர் காலத்தில் அதிக பசி எடுக்கும். அந்த சமயங்களில் நிறைய சாப்பிடுவதால் வயிறு உப்புசம் உண்டாகும். வெயில் காலங்களில் நிறைய மசாலா உணவுகளையும் கடைகளிலும் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
காய்கறிகளில் சாப்பிடக் கூடாதவை :
ஏற்கனவே வாய்வுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், புருகோலி, கேரட், முட்டை கோஸ், முளைகட்டிய தானியங்கள், காலி ஃப்ளவர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். இவை இன்னும் அதிக வாய்வை கொடுத்து தாங்க முடியாத வலியை உண்டாக்கிவிடும்.
சர்க்கரை வியாதிகள் செயற்கை சர்க்கரையை சாப்பிடுவதைதவிர்க்க வேண்டும். இவை வயிறு உப்புசத்தை ஏற்படுத்துபவை.
அதேபோல், ரெடிமேட் உணவுகளிலுள்ள அதிகப்படியான ஃப்ரக்டோஸ் ஜீரணத்தை குறைத்துவிடும். இவைகளை கட்டுப்படுத்த வேண்டும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களும் , லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும்.
நார்சத்து கொண்ட காய் மற்றும் பழங்களில், ஜீரணிக்க நேரமெடுக்கும் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே அதிகப்படியாக நார்சத்து கொண்ட காய் மற்றும் பழங்களை சாப்பிடும்போது, வயிறு உப்புசம் உண்டாகும்.
கோதுமை, ராகி போன்ற தானிய வகைகளை சாப்பிடலாம். மேலும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இவை வயிற்றில் வாயு உருவாவதை தடுக்கும்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications















