Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
சர்க்கரை நோயாளிகளே! உங்க இரத்த சர்க்கரை அளவு உங்க கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துமாம் தெரியுமா?
அதுமட்டுமின்றி, இரு பாலினத்தை சேர்ந்த பருமனானவர்கள் உடல் எடையை குறைக்கவும், இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அதிகரித்து வரும் சர்க்கரை நோயாளிகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நம் வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை குறையும்போது, உங்கள் உடல் பருமன் அதிகமாக இருக்கும்போது நீரிழவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் எனில், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன் உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவை மேம்படுத்த வேண்டும். ஏனெனில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீரிழிவு நோய் கருவுறுதலைத் தடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உலக சுகாதார அமைப்பு (WHO) 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் நீரிழிவு நோயால் உயிரிழந்துள்ளனர் என்று மதிப்பிடுகிறது. உலகில் தற்போது 537 மில்லியன் நீரிழிவு நோயாளிகள் வாழ்கின்றனர் என்று கூறுகிறது. எனவே, கருவுறுதலில் சர்க்கரை நோயின் தாக்கம் மற்றும் அதைத் தவிர்ப்பது எப்படி என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.

நீரிழிவு நோய் எதனால் ஏற்படுகிறது?
உடலில் உள்ள அசாதாரண இன்சுலின் அளவு நீரிழிவு நோய்க்கு முதன்மைக் காரணமாகும். கணையம் இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது, இது உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீங்கள் சாப்பிட்டவுடன், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, அதை நிர்வகிக்க உடலின் இன்சுலின் வெளியிடப்படுகிறது. கணையம் போதுமான அளவு இன்சுலினை உருவாக்காதபோது அல்லது உடலால் இன்சுலினை பயன்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

ஆண்களின் கருவுறுதலில் நீரிழிவு நோயின் தாக்கம்
உடலில் கட்டுப்பாடற்ற இரத்த குளுக்கோஸ் அளவுகள் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் பல காரணிகளில் ஒன்றாகும். கவனிக்கப்படாமல் விட்டால், உயர் இரத்த சர்க்கரை அளவு நிலைமையை மோசமாக்கும். ஆய்வுகளின்படி, நீரிழிவு மற்றும் மலட்டுத்தன்மையுள்ளவர்களை விட நீரிழிவு இல்லாத ஆண்களின் விந்து அளவு 25 சதவீதம் அதிகமாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ள ஆண்களின் விந்தணுக்களில் டிஎன்ஏ பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, நீரிழிவு நோய் ஆண்களின் கருவுறுதலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அவை பிறக்காத குழந்தைகளில் பிறவி குறைபாடுகள் மற்றும் கருச்சிதைவுகளுக்கு கணிசமான ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

பெண் கருவுறுதலில் நீரிழிவு நோயின் தாக்கம்
பெண்களைப் பொறுத்தவரை, நீரிழிவு அவர்களின் முழு கர்ப்ப செயல்முறையையும் முற்றிலும் கடினமாக்குகிறது. இது உடலில் குளுக்கோஸ் ஒழுங்குமுறை குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் சாத்தியமான முட்டைகளை கருப்பையில் பொருத்துவதற்கு சவாலாக உள்ளது. கூடுதலாக, பி.சி.ஓ.எஸ் (பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்) பெண்களுக்கு நீரிழிவு நோயால் வரலாம், இது கருப்பைகளில் கணிசமான எண்ணிக்கையிலான நீர்க்கட்டிகளை உருவாக்குகிறது. இது உங்கள் மாதவிடாய் சுழற்சியையும், உங்கள் உடல் உற்பத்தி செய்யும் டெஸ்டோஸ்டிரோனின் அளவையும் பாதிக்கிறது. இவை அனைத்தும் பெண்கள் கருத்தரிப்பு விகிதத்தை குறைக்கிறது.

பிறப்பு குறைப்பாடுகள்
நீரிழிவு நோய் பெண்களுக்கு ஆரம்ப மாதவிடாய் நிறுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது மீண்டும் அவர்களின் கருவுறுதலைக் குறைக்கிறது. உண்மையில், உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகள் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தீங்கு விளைவிக்கும். கர்ப்பகால நீரிழிவு நோய்க்கான அதிக ஆபத்து காரணமாக ஒரு பெண் கருத்தரிக்க முடிந்தாலும், பிறப்பு குறைபாடுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துவது?
உங்கள் இரத்த குளுக்கோஸ் அளவைக் கண்காணிப்பது முக்கியம். உண்மையில், இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த சில மருந்துகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இரு பாலினத்தை சேர்ந்த பருமனானவர்கள் உடல் எடையை குறைக்கவும், இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வேண்டும்
ஆரோக்கியமான குழந்தையின் நலனுக்காக கர்ப்பத்தின் மூன்று மாதங்களுக்கு முன்பே பெண்கள் தங்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தொடங்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், உணவு கட்டுப்பாடு மற்றும் உடல் பயிற்சிகள் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க மிகவும் குறிப்பிடத்தக்க வழிகள் ஆகும்.

பாதுகாப்பான கர்ப்ப திட்டமிடலுக்கான வழி
நீரிழிவு நோய் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, பாதுகாப்பான கர்ப்பத்தைத் திட்டமிட கருவுறுதல் நிபுணரை அணுகவும். உங்கள் குளுக்கோஸ் அளவை தவறாமல் பரிசோதித்து, அதைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளுங்கள். அதுமட்டுமல்லாமல், ஆரோக்கியமான கர்ப்பத்திற்காக உங்கள் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம்.

இறுதிகுறிப்பு
உங்கள் கர்ப்பத்தில் நீரிழிவு ஒரு தடையாக இருக்க வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இதில் உள்ள அபாயங்களைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெறுவது, அவற்றைக் கட்டுப்படுத்துவது, சரியாகச் சாப்பிடுவது மற்றும் சரியான எடையைப் பராமரிப்பது மற்றும் பாதுகாப்பான கர்ப்பத்திற்கான உங்கள் வழியில் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.



Click it and Unblock the Notifications











