Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
நீங்க தினமும் செய்யும் இந்த விஷயத்தால உங்க இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து ஆபத்து ஏற்படுமாம்...உஷார்!
ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு, போதுமான தூக்கம் அவசியம். அதாவது, ஒரே ஒரு இரவு தூக்கமின்மை உங்கள் உடல் இன்சுலினை பயனற்ற முறையில் அதிகரிக்கச் செய்யும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகிறது.
நீரிழிவு நோய் என்பது உங்கள் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் மிக முக்கியமான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். சரியான சிகிச்சை இல்லையென்றால், இது கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் மற்றும் உயிருக்கு ஆபத்தானது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களை நீங்கள் சரியாக நிர்வகிக்க வேண்டும். ஏனெனில், இவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். உங்கள் இரத்த சர்க்கரை அளவைச் சரிபார்ப்பதன் மூலம், உங்கள் தூண்டுதல்களை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். என்ன உணவுகள், பானங்கள், பழக்கவழக்கங்கள் உங்கள் இன்சுலின் அளவை அதிகரிக்க காரணமாகின்றன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இருப்பினும், சில சமயங்களில், மிக முக்கியமற்ற, அன்றாட நடவடிக்கைகளால் கூட உங்கள் இரத்த சர்க்கரை உயரலாம். நீங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள் அத்தகைய கடுமையான விளைவை ஏற்படுத்தும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடிய உங்கள் அன்றாட வழக்கத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

காலை உணவை தவிர்ப்பது
காலை உணவு என்பது அன்றைய நாளின் மிக முக்கியமான உணவு. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் (CDC) கூற்றுப்படி, காலை உணவு சாப்பிடாமல் இருப்பது, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பிறகு இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். உங்கள் தினசரி உணவில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை செய்யுங்கள்.

வெயில்
ஆச்சரியப்படும் விதமாக, வெயிலில் அதிக நேரம் இருப்பதும் உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய அறிக்கையின்படி, நீங்கள் உருவாக்கும் வெயிலின் தாக்கம் மேலும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வலிக்கு வழிவகுக்கும். இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

காபி
காபி பலருக்கு மிகவும் பிடித்தமான காலை பானங்களில் ஒன்றாகும். சிலர் தங்கள் பிஸியான நாள் முழுவதும் அதைக் குடிக்கிறார்கள். இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஆரோக்கியமானதா? என்றால், இனிப்பு இல்லாமல் எடுத்துக்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். சிலரின் இரத்த சர்க்கரை காஃபினுக்கு கூடுதல் உணர்திறன் கொண்டது என்று அமெரிக்க சுகாதார அமைப்பு விளக்குகிறது. அதனால், நீங்கள் அதிக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயத்தில் இருக்கும்போது காஃபினை தவிர்க்க வேண்டும்.

போதிய தூக்கமின்மை
ஆரோக்கியமான உடல் மற்றும் மனதுக்கு, போதுமான தூக்கம் அவசியம். அதாவது, ஒரே ஒரு இரவு தூக்கமின்மை உங்கள் உடல் இன்சுலினை பயனற்ற முறையில் அதிகரிக்கச் செய்யும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகிறது. மேலும், தூக்கமின்மை பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

விடியல் விளைவு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில், வழக்கமாக அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை, இரத்தச் சர்க்கரையின் (குளுக்கோஸ்) அசாதாரணமான அதிகரிக்கிறது என்று ஆய்வு கூறுகிறது. விடியல் விளைவு என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வு, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் படி, மக்களுக்கு நீரிழிவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதிகாலையில் ஹார்மோன்களின் அதிகரிப்பு ஏற்படுகிறதாகக் கூறுகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிகாலை நேரத்தில் அவர்களின் இரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை காணலாம்.

ஈறு நோய்
அமெரிக்கன் டென்டல் அசோசியேஷன் (JADA) இதழின் ஒரு கட்டுரையின் படி, ஈறு நோய் ஒருவரின் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். ஈறு நோய் அதன் மிகவும் கடுமையான வடிவத்தில் 'பெரியோடோன்டிடிஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது அறிக்கையின்படி, அதிக நீண்ட கால இரத்த சர்க்கரை அளவு (A1c) அபாயத்திற்கு வழிவகுக்கும் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்கு மேலும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

நீரிழப்பு
உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். நீரிழப்பு ஹைப்பர் கிளைசீமியாவுக்கு வழிவகுக்கும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் விளக்குகிறது. உங்கள் உடலில் குறைந்த நீர் என்பது உங்கள் இரத்த சர்க்கரை அதிகமாக செறிவூட்டப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக, விஷயங்கள் மோசமாகிவிடும். ஏனெனில் உயர் இரத்த சர்க்கரை அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கிறது. இதனால் மிகவும் கடுமையான நீரிழப்பு ஏற்படுகிறது.

செயற்கை இனிப்புகள்
செயற்கை இனிப்புகள் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட சிறந்தது என்று கூறப்பட்டாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு அவை சிறந்தவை அல்ல. அதன் மோசமான விளைவுகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவைப்பட்டாலும், சில ஆய்வுகள் அவை இரத்த சர்க்கரையை உயர்த்தும் என்று காட்டுகின்றன என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறுகிறது.



Click it and Unblock the Notifications











