Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
சர்க்கரை நோயாளிகளே! இந்த காரணங்களால கூட உங்க இரத்த சர்க்கரை அளவு ஏறுமாம்...இறங்குமாம்... ஜாக்கிரதை!
Blood Sugar Level In Tamil: இன்றைய நாளில் அதிகரித்து வரும் சுகாதார ஆபத்துக்களில் சர்க்கரை நோயும் ஒன்றாகும். இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுவதால், உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் சுமார் 422 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில், டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் கவலையில் இருக்கின்றனர்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது என்பது அவர்களின் உணவு மற்றும் அவர்களின் அன்றாட வழக்கத்தை கண்காணிப்பதாகும். ஏனெனில், நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள் அல்லது செய்யும் செயல்கள் மூலம் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம்.
மேலும், இரத்த சர்க்கரை அளவை மாற்றக்கூடிய இன்னும் சில ஆச்சரியமான தூண்டுதல்களும் உள்ளன. இரத்த சர்க்கரை அதிகரிக்கும்போது, அவை இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், உங்களின் உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியது மிக முக்கியம். அத்துடன் உடல் செயல்பாடுகளிலும் ஈடுபட வேண்டும். இது உங்கள் சர்க்கரை அளவை சரியாக நிர்வகிக்க உதவும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மாற்றும் விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
நீரிழிவு நோய் என்பது நாள்பட்ட வளர்சிதை மாற்ற நிலைகளின் குழுவாகும். இது உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகளால் வகைப்படுத்தப்படுகிறது. உடலின் இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாமை அல்லது இன்சுலின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஆகிய இரண்டின் விளைவாக இது ஏற்படுகிறது. இதை சரியாக நிர்வகிக்க ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த வேண்டியது அவசியம்.
எதிர்பாராத தூண்டுதல்கள்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், ஏற்படாமல் தடுப்பதற்கும் உணவில் மாற்றங்களைச் செய்வதும், தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும் மிக அவசியம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, சில உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் அவர்களின் உணவில் இருந்து கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலும் தவிர்க்க முடியாது.
வெப்பம்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குளிக்கும் போது வெந்நீரைப் பயன்படுத்தினாலும் அல்லது கொளுத்தும் வெயிலில் வெளியேற சென்றாலும், அதிக வெப்பம் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யலாம். இது இன்சுலினை விரைவாக உறிஞ்சி, இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு வழிவகுக்கும்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள்
குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளான குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், இவை இரத்தத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு, சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். சர்க்கரை அதிகரிப்பு சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம்.
தூக்கத்தை இழக்கிறது
நல்ல நிம்மதியான இரவு தூக்கம் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியம். உங்களுக்கு போதுமான தூக்கம் வரவில்லை என்றால், அது உடலில் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் மன அழுத்தம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
நீரிழப்பு
குறைந்த திரவ உட்கொள்ளல் ஹைப்பர் கிளைசீமியாவுக்கு வழிவகுக்கும். ஏனெனில் அவற்றின் சுழற்சியில் உள்ள சர்க்கரை அதிக செறிவு பெறுகிறது. மேலும், உயர் இரத்த சர்க்கரை அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வைத் தூண்டும். இதனால், சர்க்கரை நோயாளிகள் அதிகமாக நீரிழப்பு அடைவார்கள். ஆதலால், சர்க்கரை நோயாளிகள் எப்போதும் தங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
காலை உணவை தவிர்ப்பது
நீங்கள் எப்போதும் ஆரோக்கியமான காலை உணவோடு உங்கள் நாளைத் தொடங்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் காலை உணவைத் தவிர்த்தால், அது மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பிறகு இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். ஆதலால், உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
புதிய உணவுகளை உட்கொள்வதற்கு முன்னும் பின்னும் இரத்த குளுக்கோஸ் அளவை சரிபார்ப்பது அல்லது உங்களின் உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். பச்சை இலைக் காய்கறிகள், தக்காளி, வெங்காயம் மற்றும் வெள்ளரி போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இப்போது கோடை காலம் என்பதால், காய்கறி சாலட் செய்து நீங்கள் சாப்பிடலாம். ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுடன் ஆரோக்கியமான சிற்றுண்டிகளையும் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications













