Latest Updates
-
ஜூன் மாத குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
கர்நாடகா பேமஸ் வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணியை விட அட்டகாசமா இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீடு சூடாக இருக்கிறதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லுனு மாறும்! -
கொளுத்தும் கோடையில் நுங்கு நன்னாரி சர்பத் செஞ்சு குடிங்க.. உடல் சூடும் குறையும், தாகமும் தணியும்.. -
சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
இந்த 3 காய்கறிகளை மட்டும் எப்பவும் வெட்டிய உடனே சமைக்காதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! ஏன்னு பாருங்க.. -
கோடை வெயில் கொடுமை தாங்க முடியலையா? இந்த எளிய வாஸ்து மாற்றங்கள் உங்கள் வீட்டை குளிர்ச்சியாக்கும் ரகசியம்! -
'இந்தியாவின் ஆன்மா' என்று அழைக்கப்படும் அந்த மாநிலம் எது தெரியுமா? நீங்க நினைக்கும் மாநிலம் இல்ல -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: மே 29 முதல் இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
பீட்ரூட் பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
கோடை வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப இந்த பழங்களை வெச்சு ஃபேஸ் பேக் போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: சுட்டெரிக்கும் கோடை வெயிலால் சருமம் சேதமடையாமல் இருக்கவும், சருமம் கருமையடையாமல் இருக்கவும் கடைகளில் விற்கப்படும் பலவிதமான அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறீர்களா? இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைத்தபாடில்லையா? அப்படியானால் இப்படி வீணாக பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுங்கள்.

அதுவும் ஒருசில பழங்களைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சருமமும் ஆரோக்கியமாக இருக்கும், சருமத்தின் பொலிவும் உடனடியாக அதிகரிக்கும். சரி, கோடை வெயிலின் போது எந்த பழங்களைக் கொண்டு சருமத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம் மற்றும் எப்படி போடலாம் என்று கேட்கிறீர்களா? கீழே சருமத்திற்கு உடனடி பொலிவைத் தரும் சில நேச்சுரல் பழ ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
1. வாழைப்பழ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. ஆப்பிள் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு மிக்சர் ஜாரில் பாதி ஆப்பிள் மற்றும் 5-8 திராட்சைப் பழங்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 25-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு பொலிவைத் தருவதோடு, ஒரு நேச்சுரல் சன் ஸ்க்ரீன் போன்றும் செயல்படும்.
3. பப்பாளி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளி பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. ஆரஞ்சு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் ஆரஞ்சு பழத்தின் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் கடலை மாவை சேர்த்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் நீரைப் பயன்படுத்தி மென்மையாக முகத்தை ஸ்க்ரப் செய்து கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும்.
5. மாம்பழ ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த மாம்பழத்தை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் ஒரு டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக்கை போடும் போது, சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, சருமம் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் கருமையாகாமல் அழகாகவும், பொலிவோடும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. பிப்ரவரிலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications




