Latest Updates
-
ஜூலை 07-ல் வக்ர புதனால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண கஷ்டம் குறைந்து செல்வம் பெருகும்.. -
தமிழ்நாட்டின் இந்த ஒரு மாவட்டத்தை மட்டும் ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யவே முடியவில்லையாம் - ஏன் தெரியுமா? -
1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா.. இப்படி குழம்பு செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
பாபா வங்கா கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் கோடீஸ்வரராகும் யோகமுள்ள 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
தயிர் சாதத்தை இந்த பொருள் சேர்த்து ஒரு தடவை செஞ்சு பாருங்க - இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத டேஸ்ட்ல இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்கள் சமூகத்தில் எல்லோராலும் அவமதிக்கப்படுவார்களாம் - அவர்கள் யார் தெரியுமா? -
ஜூலை 07-ல் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் 'துவித்வாதச யோகம்': அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்! -
ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருமுறை செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க பல தடைகளை தாண்ட வேண்டியிருக்குமாம்
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க
இந்த வருடம் மழைக்காலம் தொடங்கிய பிறகும் இன்னும் வெயில் குறைந்த பாடில்லை. எனவே பெரும்பாலான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இப்போதும் ஏசி அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஏர் கண்டிஷனர் இல்லாத வாழ்க்கை பெரும்பாலான மக்களுக்கு சிரமமானதாக மாறிவருகிறது, இதனால் பெரும்பாலான வீடுகளின் மின்சாரக் கட்டணம் பலமடங்கு உயர்ந்து வருகிறது.

அதிகமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி இருந்தாலும் ஏர் கண்டிஷனரை அணைக்கும்போது பலர் ஒரு பொதுவான தவறைச் செய்வதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த இயந்திரத்தை அணைக்க நீங்கள் கையாளும் முறை, அதன் செயல்பாடு, ஆயுட்காலம் மற்றும் உங்கள் மாத மின்சாரக் கட்டணம் ஆகியவற்றில் கூட குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
ரிமோட்டை மட்டும் பயன்படுத்துவது ஏன் போதுமானது அல்ல?
பெரும்பாலான மக்கள் ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தித் தங்கள் ஏசியை அணைக்கிறார்கள். இது ஏர் கண்டிஷனரின் குளிர்விக்கும் செயல்பாட்டை நிறுத்தினாலும், சாதனத்தை மின் இணைப்பிலிருந்து முழுமையாகத் துண்டிப்பதில்லை. இதனால் ஏசி 'ஸ்டாண்ட்பை' நிலையிலேயே இருக்கும், அதாவது அதன் சில உட்புறப் பாகங்களுக்குத் தொடர்ந்து மின்சாரம் கிடைத்துக்கொண்டே இருக்கும். இது மின்சாரக் கட்டணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரிமோட் மூலம் ஏசிய அணைத்த பிறகும், அது தொடர்ந்து சிறிதளவு மின்சாரத்தை இழுக்கக்கூடும். நிபுணர்கள் இதனை "பேண்டம் லோட்" (phantom load) அல்லது "வாம்பயர் பவர்" (vampire power) என்று அழைக்கிறார்கள். ஏர் கண்டிஷனரின் மெயின் பவர் ஸ்விட்ச் நாள் முழுவதும் 'ஆன்' (on) நிலையில் இருந்தால், இந்த கண்ணனுக்குத் தெரியாத கூடுதல் மின் நுகர்வு உங்கள் மின்சாரக் கட்டணத்தை மெல்ல மெல்ல அதிகரிக்கும்.
ஏசி இயக்கத்தில் இருக்கும் போது ஸ்விட்ச் ஆப் செய்யக்கூடாது
ஏசிஇயங்கிக்கொண்டிருக்கும்போதே அவசரத்தில் சிலர் நேரடியாகச் சுவரில் உள்ள மெயின் ஸ்விட்சை அணைத்துவிடுகிறார்கள் அல்லது மின் இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். இது ஏசியை ஆஃப் செய்வதற்கான சரியான செயல்முறை அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கம்ப்ரஸர் மற்றும் குளிரூட்டும் அமைப்பு ஆகியவை தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்படுவது ஏசியின் முக்கிய உட்புறப் பாகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி, அதன் நீண்டகாலச் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடும்.
ஏசியை எப்படி ஆஃப் செய்ய வேண்டும்?
ஏசி நிறுவனங்களின் பரிந்துரையின் படி, முதலில் ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி ஏசியை அணைக்க வேண்டும். கம்ப்ரஸர் மற்றும் ஃபேன் ஆகியவை முழுமையாக நின்றுவிடுவதற்காக ஒன்று முதல் இரண்டு நிமிடங்கள் வரை காத்திருக்கவும். அதன் பிறகு, மெயின் பவர் சப்ளை சுவிட்ச்சை அணைக்கவும். இந்த முறையில் ஏசியை அணைப்பது ஏசியைப் பாதுகாக்கவும், தேவையற்ற மின் நுகர்வைத் தவிர்க்கவும் உதவும்.
மெயின் சுவிட்ச்சை எப்போதெல்லாம் அணைக்க வேண்டும்?
நீங்கள் சிறிது நேரத்திற்கு அறையை விட்டு வெளியேறினால், ரிமோட் மூலம் ஏசியை அணைத்தாலே பொதுவாகப் போதுமானது. ஆனால், பல மணிநேரங்களுக்கோ, இரவு முழுவதுமோ அல்லது நீண்ட நேரம் இயங்கிய பின்னரோ ஏசியைப் பயன்படுத்தாமல் இருக்கப்போகிறீர்கள் என்றால், அதன் மெயின் சுவிட்ச்சை அணைத்துவிடுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
