Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
தேனும் தக்காளியும் கலந்த மாஸ்க் உங்கள் முகத்தில் எப்படி மேஜிக் செய்யும் என தெரியுமா?
இங்கே தக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தை பொலிவுடன் வைக்க உதவும்.
ஹோலிப் பண்டிகை முடிந்து விட்டது. வண்ணப் பொடிகள் தூவி விளையாடி மகிழ்ந்து விட்டோம். விளையாடிவிட்டு அந்த பொடிகளால் முகத்திலும் ஆடைகளிலும் ஏற்பட்ட கறைகளையும் கழுவி சுத்தம் செய்து விட்டோம். முகத்தின் மேலே ஏற்பட்ட கறையைப் போக்கினால் மட்டும் போதுமா என்ன?
வண்ணப் பொடிகள் இயற்கையான முறையில் தயாரிப்பது என்பது சாத்தியமன்று. எப்படியும் அவற்றை தயாரிக்க பல்வேறு இரசாயன வேதிப் பொருட்களை உபயோகித்திருப்பர். அவற்றை நம் சருமத்தில் பூசி விளையாடுவதால் நமக்கு ஆபத்து தான். அது நிறைய சருமப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.

அவ்வாறு அது எந்த பிரச்சனையையும் உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றால் உடனே இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான இயற்கை வைத்திய முறையை செய்துப் பாருங்கள்.
இங்கே தக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தை பொலிவுடன் வைக்க உதவும். வாருங்கள், இப்போது அதற்குத் தேவையான பொருட்கள், செய்முறை மற்றும் அவற்றின் பிற பலன்கள் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்...

தேவையான பொருட்கள்
1 . தக்காளி - 1
2 . தயிர் - 2 ஸ்பூன்
3 . எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
4 . உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் தயிர், எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் நன்கு ஒரு சேர கலந்துக் கொள்ள வேண்டும். ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை
தக்காளி மற்றும் தயிர் கலந்த அந்த பேஸ்டை முகத்தின் எல்லா இடங்களிலும் பரவலாக தேய்த்துக் கொள்ள வேண்டும். ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடம் முகத்திலேயே ஊற விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவி விடுங்கள்

பிற நன்மைகள்
தக்காளியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நமது சருமத்திற்கும் பொழிவைத் தருகிறது.

பிற நன்மைகள்
தினமும் தக்காளியை முகத்திற்கு உபயோகிப்பதால் அது முகத்திற்கு நல்ல பிரகாசமான மற்றும் பொழிவான நிறத்தை நிச்சயம் கிடைக்கச் செய்கிறது.

பிற நன்மைகள்
தினமும் தக்காளி உபயோகிப்பது சருமத்திற்கு ஆக்ஸிஜனை உறிஞ்சிக் கொள்ள அனுமதிக்ககிறது. இதனால், முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுக்கள் வராமல் தடுக்கிறது.



Click it and Unblock the Notifications











