Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
தேனும் தக்காளியும் கலந்த மாஸ்க் உங்கள் முகத்தில் எப்படி மேஜிக் செய்யும் என தெரியுமா?
இங்கே தக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தை பொலிவுடன் வைக்க உதவும்.
ஹோலிப் பண்டிகை முடிந்து விட்டது. வண்ணப் பொடிகள் தூவி விளையாடி மகிழ்ந்து விட்டோம். விளையாடிவிட்டு அந்த பொடிகளால் முகத்திலும் ஆடைகளிலும் ஏற்பட்ட கறைகளையும் கழுவி சுத்தம் செய்து விட்டோம். முகத்தின் மேலே ஏற்பட்ட கறையைப் போக்கினால் மட்டும் போதுமா என்ன?
வண்ணப் பொடிகள் இயற்கையான முறையில் தயாரிப்பது என்பது சாத்தியமன்று. எப்படியும் அவற்றை தயாரிக்க பல்வேறு இரசாயன வேதிப் பொருட்களை உபயோகித்திருப்பர். அவற்றை நம் சருமத்தில் பூசி விளையாடுவதால் நமக்கு ஆபத்து தான். அது நிறைய சருமப் பிரச்சனைகளை உருவாக்கக்கூடும்.

அவ்வாறு அது எந்த பிரச்சனையையும் உருவாக்காமல் இருக்க வேண்டும் என்றால் உடனே இங்கே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான இயற்கை வைத்திய முறையை செய்துப் பாருங்கள்.
இங்கே தக்காளி மற்றும் தயிரை வைத்து ஒரு பேஸ் பேக் செய்வது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்வதால் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, முகத்தை பொலிவுடன் வைக்க உதவும். வாருங்கள், இப்போது அதற்குத் தேவையான பொருட்கள், செய்முறை மற்றும் அவற்றின் பிற பலன்கள் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்...

தேவையான பொருட்கள்
1 . தக்காளி - 1
2 . தயிர் - 2 ஸ்பூன்
3 . எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
4 . உப்பு - 1 ஸ்பூன்

செய்முறை
முதலில் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் தயிர், எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். எல்லாவற்றையும் நன்கு ஒரு சேர கலந்துக் கொள்ள வேண்டும். ஒரு பேஸ்ட் போல கலந்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை
தக்காளி மற்றும் தயிர் கலந்த அந்த பேஸ்டை முகத்தின் எல்லா இடங்களிலும் பரவலாக தேய்த்துக் கொள்ள வேண்டும். ஒரு 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடம் முகத்திலேயே ஊற விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவி விடுங்கள்

பிற நன்மைகள்
தக்காளியில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நமது சருமத்திற்கும் பொழிவைத் தருகிறது.

பிற நன்மைகள்
தினமும் தக்காளியை முகத்திற்கு உபயோகிப்பதால் அது முகத்திற்கு நல்ல பிரகாசமான மற்றும் பொழிவான நிறத்தை நிச்சயம் கிடைக்கச் செய்கிறது.

பிற நன்மைகள்
தினமும் தக்காளி உபயோகிப்பது சருமத்திற்கு ஆக்ஸிஜனை உறிஞ்சிக் கொள்ள அனுமதிக்ககிறது. இதனால், முகத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுக்கள் வராமல் தடுக்கிறது.



Click it and Unblock the Notifications