Latest Updates
-
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் மோசமான பிரச்சினைகள் வருமாம்...! -
27 ஆண்டுக்கு பின் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்...! -
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...! -
அழகான இதயமும், தூய்மையான ஆன்மாவும் கொண்ட 4 ராசிகள் இவர்கள்தான்... உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்..உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க வீட்டு சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மிச்சமிருக்குனு தெரியணுமா? இதை பண்ணுங்க... சரியா கண்டுபிடிச்சிரலாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...!
இந்த டீயை குடிச்சா, முகப்பரு எப்பவுமே வராது தெரியுமா?
இங்கு பருக்கள் வராமல் தடுக்கும் தேநீர் பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நாம் இதுவரை முகப்பரு வந்த பின்பு தான், அதைப் போக்க உதவும் வழிகளை முயற்சிப்போம். ஆனால் வருமுன் காப்பதே மேல் என்னும் பழமொழிக்கேற்ப, முகப்பரு வராமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, அதைப் பின்பற்றுவதே புத்திசாலித்தனம்.
இக்கட்டுரையில் முகப்பரு வராமலிருக்க உதவும் தேநீர் பானங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், முகப்பரு வருவதைத் தடுத்து, சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

புதினா டீ
புதினா டீயில் உள்ள மருத்துவ குணங்கள், பருக்கள் வருவதற்கு ஓர் காரணமான டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஆன்ட்ரோஜென்களைக் குறைத்து, பருக்கள் வராமல் தடுக்கும். எனவே உங்களுக்கு ஏற்கனவே பருக்கள் அதிகம் வருமாயின், புதினா டீயை தினமும் ஒரு டம்ளர் குடியுங்கள்.

க்ரீன் டீ
க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கும். அதிலும் தினமும் 2 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், முகப்பரு பிரச்சனையே இருக்காது. மேலும் க்ரீன் டீ தயாரித்து எஞ்சிய இலைகளை சருமத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து வந்தால், சருமம் இன்னும் பிரகாசமாக இருக்கும்.

சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீயில் சாந்தப்படுத்தும் பண்புகள் உள்ளது. இதைக் குடித்தால், மன அழுத்தத்தால் பருக்கள் வருவது தடுக்கப்படும். மேலும் சீமைச்சாமந்தியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது பருக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

சாப்பன் மர டீ
இந்த டீ கேரளாவில் மிகவும் பிரபலமானது. இந்த டீ தயாரிக்கத் தேவையான சாப்பன் மரப்பட்டையானது ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும். பிங்க் நிறத்தில் இருக்கும் இந்த டீ பருக்களைத் தடுப்பதோடு, கோடையில் உடல் சூட்டையும் குறைக்கும்.



Click it and Unblock the Notifications











