Latest Updates
-
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்! -
May 2026 Monthly Horoscope: மே மாதத்தில் வெற்றிப்படிக்கட்டில் வேகமாக ஏறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
மூன்றே நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? அப்ப இத செய்யுங்க...
இங்கு மூன்றே நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய உதவும் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.
வெயில் அதிகம் என்பதால், பலருக்கும் முகத்தில் பருக்கள் வந்து, அசிங்கமாக கருமையான புள்ளிகளாக இருக்கும். இது ஒருவரது தோற்றத்தையே பாழாக்கும். இந்த கரும்புள்ளிகளைப் போக்க ஏராளமான வழிகள் உள்ளது. அதில் மிகவும் சிறப்பான ஓர் வழி தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதுவும் நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்களைக் கொண்டே முகத்தில் உள்ள அசிங்கமான கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளைப் போக்கலாம். சரி, இப்போது மூன்றே நாட்களில் கரும்புள்ளிகளை மறைய செய்யும் அந்த வழி என்னவென்று காண்போம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1
மாதுளை விதைகள் - 1/2 பௌல்
எலுமிச்சை - 1/2
ஐஸ் ட்ரே - 1

செய்முறை #1
முதலில் உருளைக்கிழங்கை நீரில் நன்கு கழுவி, அதன் தோலை சீவி அகற்ற வேண்டும். பின் அதை துருவிக் கொள்ளவும்.

செய்முறை #2
பின் மிக்ஸியில் உருளைக்கிழங்கு, மாதுளை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #3
பின்பு அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து நன்கு கலக்கவும்.

செய்முறை #4
அடுத்து ஐஸ் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றி நிரப்பி, ஃப்ரீசரில் 5-6 மணிநேரம் வைத்து உறைய வைக்க வேண்டும்.

செய்முறை #5
பிறகு அந்த ஐஸ் கட்டியைக் கொண்டு கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி ஒரு நாளைக்கு 1-2 ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால், மூன்றே நாட்களில் கரும்புள்ளிகள் முற்றிலும் மறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications