Latest Updates
-
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
சருமத்தில் நிறம் பெற உதவும் சூப்பர் குறிப்புகள் !!
சருமத்தில் உண்டாகும் கருமை, கரும்புள்ளி, கருந்திட்டு ஆகியவை மறைந்து இயற்கையான நிறம் கிடைக்க இங்கே குறிப்புகல் கொடுக்கப்பட்டுள்ளன.
சரும நிறம் எதுவாக இருந்தால் அதனை ஏற்பது முதிர்ச்சிதான். அதனை மாற்ற முயல்வது தவறு. இந்தியர்களின் சராசரியான நிறம் மா நிறம்தான். ஆனால் அதன் பொலிவு மங்கி, நிறம் மாறுபடுவதற்கு காரணம் நிறைய இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் உங்களின் சிறு வயது நிறம் உங்களுக்கு மீண்டும் கிடக்க வேண்டுமென்றால் இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

வேப்பங்கொழுந்து :
வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் பொடி, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது பால் கலந்து முகத்தில் மாஸ்க் போல் பொடவும். வாரம் இருமுறை செய்தால் முகம் நிறம் பெறும்.

பப்பாளி :
பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

முள்ளங்கி :
1 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் கருமை மறைந்து முகம் நிறம் பெறும்.

பார்லி பொடி :
பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி 20 நிமிடம் ஊறிய பின் தேய்த்து குளித்தால் இறந்த செல்கள் அழுக்குகல் அகன்று சருமத்தில் மென்மை மற்றும் பளபளப்பு கூடும்.

ஆரஞ்சு முல்தானி பேக்
ஆரஞ்சு ஜூஸ், முல்தானி மட்டி ஸ்பூன் மற்றும் சந்தனம் ஆகியவ்ற்றை சம அளவு எடுத்து அவருடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஃபேஷியல் பேக்காக போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications











