Latest Updates
-
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது? -
வெயிலுக்கு ஏசி தேவையில்லை! இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடு ஜில்லுனு இருக்கும்! -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..! -
வீட்டில் இந்த செடிகளை வையுங்க… கோடை வெயில் பறந்து போகும், பணமும் கொட்டும்! -
வெயிலுக்கு இப்படி ஒருடைம் தக்காளி ரசம் செய்யுங்க.. தட்டு சோறை நொடியில் காலி பண்ணுவாங்க..! -
May 2026 Calendar: மே மாதத்தில் வரப்போகும் முக்கியமான பண்டிகைகள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 01 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் மே மாதம் இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்!
சருமத்தில் நிறம் பெற உதவும் சூப்பர் குறிப்புகள் !!
சருமத்தில் உண்டாகும் கருமை, கரும்புள்ளி, கருந்திட்டு ஆகியவை மறைந்து இயற்கையான நிறம் கிடைக்க இங்கே குறிப்புகல் கொடுக்கப்பட்டுள்ளன.
சரும நிறம் எதுவாக இருந்தால் அதனை ஏற்பது முதிர்ச்சிதான். அதனை மாற்ற முயல்வது தவறு. இந்தியர்களின் சராசரியான நிறம் மா நிறம்தான். ஆனால் அதன் பொலிவு மங்கி, நிறம் மாறுபடுவதற்கு காரணம் நிறைய இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் உங்களின் சிறு வயது நிறம் உங்களுக்கு மீண்டும் கிடக்க வேண்டுமென்றால் இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

வேப்பங்கொழுந்து :
வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் பொடி, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது பால் கலந்து முகத்தில் மாஸ்க் போல் பொடவும். வாரம் இருமுறை செய்தால் முகம் நிறம் பெறும்.

பப்பாளி :
பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

முள்ளங்கி :
1 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் கருமை மறைந்து முகம் நிறம் பெறும்.

பார்லி பொடி :
பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி 20 நிமிடம் ஊறிய பின் தேய்த்து குளித்தால் இறந்த செல்கள் அழுக்குகல் அகன்று சருமத்தில் மென்மை மற்றும் பளபளப்பு கூடும்.

ஆரஞ்சு முல்தானி பேக்
ஆரஞ்சு ஜூஸ், முல்தானி மட்டி ஸ்பூன் மற்றும் சந்தனம் ஆகியவ்ற்றை சம அளவு எடுத்து அவருடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஃபேஷியல் பேக்காக போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications