Latest Updates
-
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும்
வெயிலில் எவ்வளவு சுற்றினாலும் முகம் பளிச்சென்று இருக்க வேண்டுமா? இத தினமும் செய்யுங்க போதும்!
இங்கு கோடை வெயிலிலும் முகத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும் சில நேச்சுரல் கிளின்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக முகத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் செயற்கை அல்லது இரசாயன பொருட்களைப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பொருட்களைப் பயன்படுத்தினால், சருமத்தின் ஆரோக்கியம் பாழாகி விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

முகத்தில் உள்ள அழுக்கை போக்கி, உடனடி பொலிவைத் தரும் ஒரு அழகு பராமரிப்பு பொருள் தான் கிளின்சர். ஆனால் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை கிளின்சராகப் பயன்படுத்தலாம். மேலும் நேச்சுரல் கிளின்சரின் மூலம் எவ்வித பக்க விளைவும் இருக்காது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
இங்கு கோடை வெயிலிலும் முகத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும் சில நேச்சுரல் கிளின்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பயன்படுத்தி, முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பால்
நம் வீட்டு சமையலறையில் உள்ள பாலை விட சிறந்த கிளின்சர் வேறு எதுவும் இருக்க முடியாது. தினமும் பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி பாலை முகத்திற்கு தடவி 20 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் 2 வேளை செய்து வந்தால், முகம் பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள சீடர் வினிகர் சருமத்தின் pH அளவைப் பராமரிக்கவும், சருமத்தில் வெடிப்புகள் ஏற்படாமலும் தடுக்கும். முக்கியமாக இது முகப்பருவைப் போக்க உதவும். இந்த ஆப்பிள் சீடரை எப்படி கிளின்சராகப் பயன்படுத்துவது என்று கேட்கலாம். அதற்கு 1 கப் ஆப்பிள் சீடர் வினிகருடன், ஒரு பகுதி தண்ணீர் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, தினமும் காலையிலும் மாலையிலும் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.

தேங்காய் பால்
ஒரு கப் தேங்காய் பாலுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதோடு, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து சிறிது நேரம் கழித்து, சுத்தமான நீராலும் துடைத்து எடுக்க வேண்டும்.

தேன் மற்றும் எலுமிச்சை
2 ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதோடு, சருமத்தின் ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

தயிர் மற்றும் கற்றாழை
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் ப்ளீச்சிங் தன்மையைக் கொண்டது. அதோடு கற்றாழையில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை ஏராளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆகவே தயிருடன் சிறிது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.

அன்னாசி
3:1 என்ற விகிதத்தில் அன்னாசி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை எடுத்து ஒன்றாக கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து, சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகம் உடனடி பிரகாசத்தையும், புத்துணர்ச்சியையும் பெறும்.

ஆலிவ் ஆயில்
1/2 கப் ஆலிவ் ஆயிலுடன், 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தினமும் அந்த கலவையை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.

பப்பாளி ஜூஸ்
1/2 கப் பப்பாளி ஜூஸ் உடன், 1/4 கப் ஆப்பிள் ஜூஸ், 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 கப் நீர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி சேகரித்து, பின் தினமும் பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இந்த கிளின்சர் வறட்சியான சருமத்தினருக்கு மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications