Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
வெயிலில் எவ்வளவு சுற்றினாலும் முகம் பளிச்சென்று இருக்க வேண்டுமா? இத தினமும் செய்யுங்க போதும்!
இங்கு கோடை வெயிலிலும் முகத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும் சில நேச்சுரல் கிளின்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொதுவாக முகத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் செயற்கை அல்லது இரசாயன பொருட்களைப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பொருட்களைப் பயன்படுத்தினால், சருமத்தின் ஆரோக்கியம் பாழாகி விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

முகத்தில் உள்ள அழுக்கை போக்கி, உடனடி பொலிவைத் தரும் ஒரு அழகு பராமரிப்பு பொருள் தான் கிளின்சர். ஆனால் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை கிளின்சராகப் பயன்படுத்தலாம். மேலும் நேச்சுரல் கிளின்சரின் மூலம் எவ்வித பக்க விளைவும் இருக்காது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.
இங்கு கோடை வெயிலிலும் முகத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும் சில நேச்சுரல் கிளின்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பயன்படுத்தி, முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பால்
நம் வீட்டு சமையலறையில் உள்ள பாலை விட சிறந்த கிளின்சர் வேறு எதுவும் இருக்க முடியாது. தினமும் பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி பாலை முகத்திற்கு தடவி 20 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் 2 வேளை செய்து வந்தால், முகம் பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள சீடர் வினிகர் சருமத்தின் pH அளவைப் பராமரிக்கவும், சருமத்தில் வெடிப்புகள் ஏற்படாமலும் தடுக்கும். முக்கியமாக இது முகப்பருவைப் போக்க உதவும். இந்த ஆப்பிள் சீடரை எப்படி கிளின்சராகப் பயன்படுத்துவது என்று கேட்கலாம். அதற்கு 1 கப் ஆப்பிள் சீடர் வினிகருடன், ஒரு பகுதி தண்ணீர் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, தினமும் காலையிலும் மாலையிலும் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.

தேங்காய் பால்
ஒரு கப் தேங்காய் பாலுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதோடு, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து சிறிது நேரம் கழித்து, சுத்தமான நீராலும் துடைத்து எடுக்க வேண்டும்.

தேன் மற்றும் எலுமிச்சை
2 ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதோடு, சருமத்தின் ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

தயிர் மற்றும் கற்றாழை
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் ப்ளீச்சிங் தன்மையைக் கொண்டது. அதோடு கற்றாழையில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை ஏராளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆகவே தயிருடன் சிறிது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.

அன்னாசி
3:1 என்ற விகிதத்தில் அன்னாசி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை எடுத்து ஒன்றாக கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து, சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகம் உடனடி பிரகாசத்தையும், புத்துணர்ச்சியையும் பெறும்.

ஆலிவ் ஆயில்
1/2 கப் ஆலிவ் ஆயிலுடன், 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தினமும் அந்த கலவையை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.

பப்பாளி ஜூஸ்
1/2 கப் பப்பாளி ஜூஸ் உடன், 1/4 கப் ஆப்பிள் ஜூஸ், 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 கப் நீர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி சேகரித்து, பின் தினமும் பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இந்த கிளின்சர் வறட்சியான சருமத்தினருக்கு மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications











