Latest Updates
-
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
சுருக்கங்கள் மறைய எளிதான வழிகள் இங்கே!
முகத்தில் உண்டாகும் சுருக்கங்களை மறைய எளிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உபயோகித்துப் பயன்பெறுங்கள்.
வெயில் அலைவதால் அல்லது ரசாயன அழகுப் பூச்சுக்களால் விரியவில் சுருக்கங்கள் வந்துவிடும். அதிகப்படியான சரும வறட்சியினாலும் சுருக்கங்கள் உண்டாகிவிடும். 40 வயது கடந்தவர்கல் பொடாக்ஸ் ஊசி போடுவதை காண்கிறோம். ஆனால் அது மிகவும் கெடுதலான செயல். அதற்கு பதிலாக நமது மூலிகைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல மாற்றம் வருவதை கண்கூடாக காணலாம்.

சுருக்கங்களை மறைய வைப்பது எளிதுதான். ஆனால் அதனை கண்டுகொள்லாமல் விடும்போது அது நிரந்தரமாகிவிடுகிறது.
சுருக்கங்களை போக்கி முகம் இளமையாக இருக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

முட்டைகோஸ் சாறு :
முட்டைக் கோஸின் சாற்றை எடுத்து அதனுடன் சிறிது ஈஸ்ட் , ஒரு ஸ்பூன் தேன் கலந்து நமுகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

வாழைப் பழம் ரோஸ் வாட்டர் :
நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கேரட் சாறு
சம அளவு கேரட் சாறு மற்றும் தேன் கலந்து அதில் கால் கப் வேப்பிலை சாறு சேர்த்து ஒன்றாக கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே விடவும்.
கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறு
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவலாம்.

துளசிச் சாறு :
ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.



Click it and Unblock the Notifications