Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
சுருக்கங்கள் மறைய எளிதான வழிகள் இங்கே!
முகத்தில் உண்டாகும் சுருக்கங்களை மறைய எளிய வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. உபயோகித்துப் பயன்பெறுங்கள்.
வெயில் அலைவதால் அல்லது ரசாயன அழகுப் பூச்சுக்களால் விரியவில் சுருக்கங்கள் வந்துவிடும். அதிகப்படியான சரும வறட்சியினாலும் சுருக்கங்கள் உண்டாகிவிடும். 40 வயது கடந்தவர்கல் பொடாக்ஸ் ஊசி போடுவதை காண்கிறோம். ஆனால் அது மிகவும் கெடுதலான செயல். அதற்கு பதிலாக நமது மூலிகைகளை தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல மாற்றம் வருவதை கண்கூடாக காணலாம்.

சுருக்கங்களை மறைய வைப்பது எளிதுதான். ஆனால் அதனை கண்டுகொள்லாமல் விடும்போது அது நிரந்தரமாகிவிடுகிறது.
சுருக்கங்களை போக்கி முகம் இளமையாக இருக்க இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

முட்டைகோஸ் சாறு :
முட்டைக் கோஸின் சாற்றை எடுத்து அதனுடன் சிறிது ஈஸ்ட் , ஒரு ஸ்பூன் தேன் கலந்து நமுகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

வாழைப் பழம் ரோஸ் வாட்டர் :
நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கேரட் சாறு
சம அளவு கேரட் சாறு மற்றும் தேன் கலந்து அதில் கால் கப் வேப்பிலை சாறு சேர்த்து ஒன்றாக கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே விடவும்.
கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறு
சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் கழித்து கழுவலாம்.

துளசிச் சாறு :
ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.



Click it and Unblock the Notifications











