Just In
- 9 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 37 min ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 1 hr ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 2 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
Don't Miss
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
காயத்தால் உண்டான தழும்பு நீக்கும் அருமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்!!
சருமத்தில் உண்டாகும் காய தழும்புகளை நீக்க நாட்டு வைத்தியங்களை இங்கே சொல்லப்பட்டுள்ளது.
எதிர்பாராத விபத்துக்களால் ஏற்பட்ட சற்றே ஆழமான காயங்கள், தீ விபத்து பாதிப்புகளால் ஏற்பட்ட காயங்கள். இந்தக் காயங்கள் ஆறவே வெகு நாட்கள் ஆகி இருக்கும், அப்போது அந்தக் காயங்கள் குணமடைந்தால் போதும், தினமும் கைகளிலோ அல்லது முகத்திலோ சிறிய பேண்டேஜ் அல்லது பிளாஸ்டர் ஒட்டிக் கொண்டு, வெளியில் நடமாடுவது மிக மன வேதனையை அளிக்கிறது, என அந்தக் காயங்கள் விரைவில் குணமடைந்தாலே போதும், என்ற மன நிலையிலேயே யாவரும் இருப்போம்.
உடலின் காயங்கள் ஆறும் போது, அவ்விடம் உள்ள தோல் செல்கள் அழிந்து புதிதாக வேறு செல்கள் உருவாகும், ஆயினும் மருந்துகளின் தன்மைகளால் அந்த செல்களின் இயற்கை நிறம் மறைந்து கறுக்கும், அதுவே பின்னர் தழும்பாக மாறி, எல்லோருக்கும் மன உளைச்சலைக் கொடுக்கிறது.
மேலும், காயங்கள் விரைவில் ஆற வேண்டுமே, வலிகள் தீர வேண்டுமே என்ற எண்ணத்தில் கிடைக்கும் மருந்துகளை எல்லாம் காயங்களில் இட, தழும்புகள் எல்லாம் மாறாத வடுக்களாக மாறி விடுகிறது..
இப்போது நாம், நம் முன்னோர்கள் சொல்லிய ஒரு முறையின் மூலம் காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் நீங்க உதவும் ஒரு மூலிகையைப் பார்க்கலாம்.
மூலிகைக் குமரி எனும் சோற்றுக் கற்றாழை :
சிலருடைய நல்ல செயல்களால் அல்லது அறிவாற்றலால் அவர்களை நாம், மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றுச் சொல்லுவோமே, அப்படி மூலிகைகளில் தன்னுடைய செயல் ஆற்றல் மிக்க தன்மைகளால் மனிதர்களின் நோயகற்றும் மா மருந்தாக, மிக உயர்ந்த சிறப்பான நிலையில் இருப்பது தான், மூலிகைக் குமரி என சித்தர்களால் போற்றப்படும் சோற்றுக் கற்றாளை மூலிகை.
சோற்றுக் கற்றாளை மடலை எடுத்து அதன் சதைப் பாகத்தை தழும்புகளின் மேல் வைத்து இரவு வேளைகளில் கட்டி வைத்து உறங்கி வர, சில நாட்களில் தோலின் கருமை நிறம் மறைந்து இயல்பான தோலின் நிறம் வர ஆரம்பிக்கும்.
தேன் :
தேன் இயல்பாகவே, தீப் புண்கள் ஆற்றும் ஆற்றல் மிக்கது. தேனை தினமும் தழும்புகளின் மேல தடவி வர, விரைவில் தழும்புகள் நிறம் மாறும்.
அரச மர இலைகள் :
காலை வேளைகளில் அரச இலைச் சருகுகளை இடித்து தூளாக்கி அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தழும்புகளின் மேல் பூசி வரலாம்.
சிவனார் வேம்பு :
மேலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சிவனார் வேம்பு எனும் மூலிகைத் தைலத்தை தழும்புகளில் தடவி வர, தழும்புகள் ஆற்றுவதில் தனித்தன்மையுடன் செயல்பட்டு தழும்புகளை மறைய வைக்கும்.
காயங்களால் உண்டான தழும்புகள் நீங்கி, மன நிறைவுடன் இருக்க, இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி, விரைவில் உடல் நலமும் மன வளமும் பெறலாம்.