Latest Updates
-
வெயில் கொடுமையா? இந்த எளிய வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா போதும், வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
கேரளா ஸ்டைல் விழிஞ்சம் சிக்கன் வறுவல் ரெசிபி - ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் செஞ்சு பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன?
ஈடில்லா அழகை தரும் இந்த குறிப்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :
நம் எல்லோருக்குமே எந்த வித தழும்பும் இல்லாத பளபளப்பான சருமம் பிடிக்கும். ஆனால் எல்லாருக்குமே அப்படி அமைவதில்லை.
முகப்பரு, தழும்பு, கரும்புள்ளி, கருமை, கருவளையம் என நிறைய பாதிப்புகள் நம் சருமத்தில் ஏற்படுகிறது. இந்த எல்லா வித பிரச்சனைகளையும் வர விடாமல் தடுக்க முடியாது. ஆனால் வந்த பின் எப்படி குணப்படுத்தலாம் என பார்க்கலாம்

பப்பாளியை நீங்கள் நிச்சயம் ஆரோக்கியத்திற்கு, அழகிற்கும் பயன்படுத்தி இருப்பீர்கள். பப்பாளியை வெறுமனே உபயோகிப்பதை விட அதனுடன் இன்னும் அழகு தரும் பொருட்களை சேர்த்தால், அதன் பலன் இரு மடங்கு உங்களுக்கு கிடைக்கும்.
எல்லாருக்கும் ஒரே மாதிரி சருமம் இருப்பதில்லை. வறண்ட சருமம் மற்றும் எண்ணெய் சருமத்தை நாம் பெரும்பாலோனோர் பெற்றிருக்கிறோம். அப்படி இருவிதமான சருமத்திற்கும் ஏற்றபடி பப்பாளியை எப்படி பயன்படுத்தலாம் என இங்கே குறிப்பிட்டுள்ளது. படித்து, செய்து பார்த்து பயன்பெறுங்கள்.
வறண்ட சருமத்திற்கான பப்பாளி பேக் :
பப்பாளி - சில துண்டுகள்
தேன் - 2 டீஸ்பூன்
பால் - 3 டீ ஸ்பூன்
பப்பாளியை நன்றாக மசித்து, அதனுடன் பால் மற்றும் தேனை சேர்க்கவும். இவற்றை முகத்தில் தேய்த்து 20 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
பால் மற்றும் தேன் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கிறது. சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றுகிறது. பப்பாளி மென்மையான மிருதுவான சருமத்தை அளிக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உங்களுக்கு பளபளப்பான சருமத்தை தருகிறது.
எண்ணெய் சருமத்திற்கு :
பப்பாளி - சில துண்டுகள்
தேன் - 2 டீஸ்பூன்
முல்தானி மட்டி - கால் டீஸ்பூன்
நீர் - தேவையான அளவு
பப்பாளியை மசித்து அதனுடன் தேன் முல்தானி மட்டி மற்றும் சிறி நீர் கலந்து, இந்த கலவையை கண்கள் தவிர்த்து முகத்தில் தேய்க்கவும். இந்த கலவை நன்றாக காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இவை உங்கள் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தும். மென்மையான பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications


