Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
உடலில் உண்டாகும் பருக்களை போக்க வைப்பது எப்படி?
முகத்தில் மட்டும் பருக்கள் வரும் என நினைத்தால் தவறு. இது பேக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் உண்டாகும் தொற்று.
உடல் முழுவதும் வரும். சிலருக்கு வேர்க்குரு போல் இருக்கும். சிலருக்கு முகப்பரு போல இருக்கும். அதிகமாக முதுகிலும் கழுத்திலும் உண்டாகும்.
இதற்கு அதிகப்படியான எண்ணெய் சுரப்பதாலும், சருமத் துவாரங்களில் அழுக்குகள் அடைத்துக் கொள்வதாலும் வரும்.
சிலர் உடல் முழுவதும் பவுடர் பூசிக் கொள்வார்கள். அதனாலும் உண்டாகும். அதை போக்க சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன. பயன்படுத்திப் பாருங்கள்.

சமையல் சோடா :
சமையல் சோடா அதிகப்படியான எண்ணெயை தடுக்கும். நீரில் சிறிது சமையல் சோடாவில் நீர்கலந்து உடல் முழுவதும் பூசி தேயுங்கள். சில நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

பட்டைபொடி :
பட்டைப் பொடியில் சிறிது தேன் கலந்து உடலில் எங்கு அதிகம் பருக்கள் இருக்கிறதோ அங்கு தடவுங்கள். 10 நிமிடம் கழித்து குளிக்கவும். தினமும் செய்து வந்தால் உடலிலுள்ள பருக்கள் மறைந்து மெருகேறும்.

தேயிலை மர எண்ணெய் :
தேயிலை மர எண்ணெயை சில துளிகள் பாடி வாஷுடன் கலந்து குளித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இது ஒரு அற்புத கிருமி நாசினி.

சோற்று கற்றாழை :
சோற்றுக் கற்றாழையிலுள்ள சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள் கலந்து உடல் முழுக்க பூசி குளித்தால் ஒரே வாரத்தில் உடலில் உண்டாகும் பருக்கள் மறைந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை :
எலுமிச்சை சாறு ஒரு மூடி எடுத்து அதில் சிறிது சர்க்கரை கலந்து உடலில் தேயுங்கள். விரைவில் பருக்கள் மறைந்து சருமம் மிளிரும். அதோடு உடலில் உண்டாகும் கரும்புள்ளிகளும் மறைந்து சருமம் மிருதுவாகும்.



Click it and Unblock the Notifications











