Just In
- 10 min ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- 42 min ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- 55 min ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- 1 hr ago ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
Don't Miss
- Movies Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
- News கடலூரில் திமுக மாநகராட்சி மேயர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு.. போலீஸ் குவிப்பு
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உடலில் உண்டாகும் பருக்களை போக்க வைப்பது எப்படி?
முகத்தில் மட்டும் பருக்கள் வரும் என நினைத்தால் தவறு. இது பேக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் உண்டாகும் தொற்று.
உடல் முழுவதும் வரும். சிலருக்கு வேர்க்குரு போல் இருக்கும். சிலருக்கு முகப்பரு போல இருக்கும். அதிகமாக முதுகிலும் கழுத்திலும் உண்டாகும்.
இதற்கு அதிகப்படியான எண்ணெய் சுரப்பதாலும், சருமத் துவாரங்களில் அழுக்குகள் அடைத்துக் கொள்வதாலும் வரும்.
சிலர் உடல் முழுவதும் பவுடர் பூசிக் கொள்வார்கள். அதனாலும் உண்டாகும். அதை போக்க சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன. பயன்படுத்திப் பாருங்கள்.
சமையல் சோடா :
சமையல் சோடா அதிகப்படியான எண்ணெயை தடுக்கும். நீரில் சிறிது சமையல் சோடாவில் நீர்கலந்து உடல் முழுவதும் பூசி தேயுங்கள். சில நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.
பட்டைபொடி :
பட்டைப் பொடியில் சிறிது தேன் கலந்து உடலில் எங்கு அதிகம் பருக்கள் இருக்கிறதோ அங்கு தடவுங்கள். 10 நிமிடம் கழித்து குளிக்கவும். தினமும் செய்து வந்தால் உடலிலுள்ள பருக்கள் மறைந்து மெருகேறும்.
தேயிலை மர எண்ணெய் :
தேயிலை மர எண்ணெயை சில துளிகள் பாடி வாஷுடன் கலந்து குளித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இது ஒரு அற்புத கிருமி நாசினி.
சோற்று கற்றாழை :
சோற்றுக் கற்றாழையிலுள்ள சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள் கலந்து உடல் முழுக்க பூசி குளித்தால் ஒரே வாரத்தில் உடலில் உண்டாகும் பருக்கள் மறைந்துவிடும்.
எலுமிச்சை மற்றும் சர்க்கரை :
எலுமிச்சை சாறு ஒரு மூடி எடுத்து அதில் சிறிது சர்க்கரை கலந்து உடலில் தேயுங்கள். விரைவில் பருக்கள் மறைந்து சருமம் மிளிரும். அதோடு உடலில் உண்டாகும் கரும்புள்ளிகளும் மறைந்து சருமம் மிருதுவாகும்.